ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 3 50

”நான்தான்.. இளவரசே..!!” என் மௌனம் கண்டு.. மென்னகை புரிந்தாள்.

”நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன..?” என்றேன்.

முனுமுனுப்பாக. ”நிலவுக்கா..? கண்களா..? ஆ..! என்ன சொல்கிறீர்கள் இளவரசே..?” என் கேள்வியின் அர்த்தம் புரியாமல்.. குழம்பி விட்டாள்.

”ஆஹ்ஹாஹா..!!” என நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

”ஹ்ம்ம்.. போங்கள் இளவரசே..” சினுங்கினாள் மகிழ்வதனி. ”நிலா உதயம் காண்கிறீர்களா.. என்று நான் கேட்டால்.. என்னென்னவோ.. சொல்கிறீர்கள் நீங்கள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை…”

” பேரெழில் பொங்கும்..உன் களங்கமற்ற வதனத்தைக் கண் இமைக்காமல்… கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தேன்.. இளவரசி..”

”என் முகத்தைக் கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தீர்களா..? நான் இங்கில்லாத போது.. எப்படி.. நீங்கள்…??” அவள் என்னை குழப்பத்துடன் பார்த்தாள்.

என் வலது கரத்தை உயர்த்தி.. கிழக்கு நோக்கிச் சுட்டிக் காட்டினேன்.
” அதோ..”

”ஓஓ..!!” என்று வியப்பில்.. சிவந்த இதழ்களையும்.. பின் நயன விழிகளையும் அகல விரித்தாள்.
”இப்போதல்லவா புரிகிறது..!!”

”என்ன புரிகிறது.. இளவரசி..?”

”என்னைப் பார்த்ததும் கேட்டீர்களே.. நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன.. என்று..?”

”புரிந்தது கொண்டாயா..?”

”ம்ம்.. நன்றாகப் புரிந்து கொண்டேன்..! தங்களுக்கு என் மேல் உள்ள… அன்பையும்..!!” அவள் வார்த்தை உச்சரிப்பில்.. ஒரு வெட்கத் திணறல் இருந்தது.

1 Comment

  1. Bro, அம்மாவுடன் மதுரை டூர் itha kathaium ungala mudinja finish pannuga bro plz …

Comments are closed.