உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

மெல்ல, மைதிலியின் நினைவுகள் மட்டுமல்ல, ராஜாவின் நினைவுகளும் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன!

முதன் முதலில் மைதிலியைச் சந்தித்த போதிலிருந்து நடந்த நிகழ்வுகள் இன்னும் நினைவில் உள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன், திடீரென ஒரு நாள் ப்ரியா என்னிடம், இந்த வீக்கெண்ட், அவளுடைய சீனியர் வீட்டுக்கு நாம் போக வேண்டும் என்று சொன்னாள். அவள் புதிதாக ஜாயிண் பண்ணிய கம்பெனியில்தான் அவனைப் பார்த்தாளாம். கண்டிப்பாக அவிங்க வீட்டுக்கு போகனும் என்றாள்.

அது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. கல்யாணமான இத்தனை நாளில், அவள் தன்னுடைய நண்பர்கள் என்று யார் வீட்டுக்கும் போனது கிடையாது. ஏன் நண்பர்கள் பெயரைச் சொன்னது கூட கிடையாது. வேலைக்குப் போக ஆரபித்த பின் கூட, அவளுக்கென்று நட்பு வட்டம் உருவாகவில்லை. அவள் குணத்தால்தான், அவளுக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது என்பதுதான் உண்மை என்றாலும், அவளுக்காக எந்த வட்டமும் இல்லாமல், என்னுடன் தானே, அவள் வாழ்க்கையை செலவு செய்கிறாள் என்று அவளைப் பொறுத்து வாழ்வதற்கான சமாதானத்தை எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.

அப்படிப்பட்டவள், திடீரென்று ஒருத்தர் வீட்டுக்கே கூப்பிட்டது, அதுவும் உடன் படித்த நண்பனாகக் கூட இல்லாமல், காலேஜ் சீனியர் என்று ஒருத்தர் வீட்டுக்குச் சொன்னது, பெருத்த ஆச்சரியமாக இருந்தது.

அதனாலேயே, அந்த சீனியர், எனக்கு ஃபோனில் கூட அழைப்பு விடுக்காவிட்டாலும், ப்ரியாவிற்க்காக அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், அன்று முழுக்க ப்ரியாவின் செயல்கள் எனக்கு ஆச்சரியமாகவும், மிகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

அப்படி நாங்கள் சென்ற வீடுதான், ப்ரேம், மைதிலியுடைய வீடு!

முதலில் எங்களை வரவேற்றது மைதிலிதான். அவளிடம் எனக்கு மிகப் பிடித்தது ஒரு விதமான அமைதி கலந்த இன்னசன்ஸ். மிகவும் களையான முகம். எல்லாவற்றையும் விட, உணர்வுகளைச் சொல்லும், அள்ளும் கண்கள்.

ஆனால், அப்பொழுதே எனக்குத் தோன்றியது, இவள் இன்னும் தன்னில் கவனம் செலுத்தினால், மிக அழகாக இருப்பாள் என்றுதான்! அதே சமயம், ப்ரியாவிற்க்கோ, மைதிலியைப் பார்த்த உடன், ஏதோ பெரிய நிம்மதியும், மகிழ்ச்சியும் தோன்றியது. அதில் நட்பெல்லாம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் வன்மம் மட்டுமே இருந்தது.

உள்ளிருது வந்தான் ப்ரேம். நானே கொஞ்சம் அசந்து விட்டேன். அவ்ளோ கலராக இருந்தான். ஏறக்குறைய காதல் தேசம் அப்பாஸ் போன்று. ஆளுடைய பிசிக், அப்படி ஒன்றும் இல்லையென்றாலும், இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் தொப்பையுடன் இருந்தாலும், அவனுடைய கலர் அவனை நன்கு ஸ்டைலாகக் காட்டியது.

வந்தவன், வாங்க என்று எங்களிடம் பேச ஆரம்பித்தான். என்னிடம் மிகக் குறைவாகவும், ப்ரியாவிடம் மிக மிக அதிகமாகவும். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவன், திடீரென்று திரும்பி வந்தவங்களுக்கு காஃபி வேணுமான்னு கேட்டு எடுத்துட்டு வந்து தர மாட்டியா என்றான். எனக்கே முகத்தில் அடித்தாற் போன்று இருந்தது! ஆனால், அவள் முகத்திலோ எந்த மாற்றமும் இல்லை!

இவ்வளவு நேரமும் அவளைக் கண்டு கொள்ளாமல், நாங்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்த பொழுது ஒன்றையும் வெளிப்படுத்தாத அவள் முகம், இப்பொழுது அவன் அசிங்கப்படுத்தும் பொழுதும், ஒன்றையும் வெளிக்கட்டவில்லை!

மிக லேசான குரலில் சாரி என்று சொல்லிவிட்டு, அவள் கிச்சனுக்குள் சென்றாள். ப்ரேம், அவன் வீட்டை எங்களுக்கு சுற்றிக் காட்டினான். அந்த வீடு எனக்கு மிகப் பிடித்திருந்தது. வீட்டின் அமைப்பில் ஒன்றும் டாம்பீகம் இல்லை. ஆனால், உள்ளிருக்கும் டிசைன் பொருட்களில் இருந்து கால் மிதி வரை எல்லாவற்றிலும் ஒரு கலைத்தன்மை இருந்தது. வீடு மிகச் சுத்தமாகவும், செல்ஃப்களில் இருக்கும் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் முறை கூட மிக நேர்த்தியாக இருந்தது.

எல்லாவற்றையும் தாண்டி என்னைக் கவர்ந்தது, அங்கிருந்த புத்தக அலமாரிதான். புத்தக அலமாரி மட்டுமல்ல, உள்ளிருக்கும் புத்தகங்களின் கலெக்‌ஷன்களும் மிக வித்தியாசமாக இருந்தது. அங்கு அயன் ராண்ட் இருந்தது. கூடவே கல்கியும் இருந்தது. சுஜாதா இருந்தது, கார்ல் மார்க்ஸ் இருந்தது. பெரியார் இருந்தது, அர்த்தமுள்ள இந்துமதமும் இருந்தது. எல்லாவற்றையும் தாண்டி நிறைய காமிக்ஸ் இருந்தது. புக்ஸ் கலெக்சன்சைப் பார்த்தவுடன், எனக்கு ப்ரேமின் மேல் ஓரளவு மரியாதையே வந்திருந்தது.

ப்ரியாவும், ப்ரேமும் மிக சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்ததால், நான் மெதுவாகவே, வீட்டின் நுட்பத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரம் கழித்து கிளம்பும் சமயத்தில் நான் சொன்னேன் ப்ரேமிடம், வீடு ரொம்ப நல்லாயிருக்கு என்று!

லோன்ல வாங்கினதுதாங்க. ரொம்ப விசாரிச்சுதான், இந்த வீட்டை வாங்கினேன் என்று பெருமை பேசினான்.

ஓ…. நான் அதைச் சொல்லலலீங்க, வீடு நீங்க மெய்ண்டெய்ண் பண்ற விதத்தை சொன்னேன். ரொம்ப நீட்டா இருக்கு. ஒரு மாதிரி ப்ளசண்ட்டா இருக்கு என்றேன். இந்த முறை மைதிலியையும் பார்த்துச் சொன்னேன். அவள் முகத்தில் மிக மெல்லிய ஒரு சந்தோஷம்!

இந்த முறை, ப்ரேம் ஓ என்று சம்பந்தமில்லாதவன் போல் சொன்னான். சரி என்று சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பும் போதுதான் ப்ரியா அந்த வார்த்தையைச் சொன்னாள்.

என்னமோ ப்ரேம், காலேஜ்ல நீ போட்ட சீனுக்கு, இப்பிடி சுமாரா இருக்கிற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருப்பன்னு நினைக்கவேயில்லை.

எனக்கே சுளீர் என்று இருந்தது! திரும்பி ப்ரியாவைப் பார்த்த போது அவள் கண்களில், ஏன் இவ்வளவு வன்மம் என்று எனக்குப் புரியவேயில்லை.