அசுரன் Part 17 27

மன்னர் காலம்

மதிவதனி மற்ற ராணிகளுடன் நந்தவனத்தில் இருந்தாள்.

காத்தவராயன் காலை முதல் அவளிடம் வராதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“மதிவதனி உன்கிட்ட ஒரு விசயம் கேட்கலாமா?”சகுந்தலா கேட்க,

“தாராளமாக கேளுங்கள் அக்கா…”,

“இந்த மாயமலை உனக்கு பிடித்து இருக்கா மதிவதனி…”

“ம்ம்ம்ம்..நிச்சயமாக அக்கா…அதிலென்ன சந்தேகம்.மூலிகை காற்று,பளிங்கு போன்ற நீர்,பச்சை பசேல் என மரங்கள்..எங்கும் இயற்கை,எதிலும் இயற்கை.. கொஞ்சி குலாவும் பறவைகள்.இதை பார்க்க பார்க்க என் மனம் இந்த மாயமலை அழகில் மயங்குகிறது..ஆனால் காத்தவராயனை மட்டும் தான் பிடிக்கவில்லை.”

“சரி நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன்..நேற்று உனக்கும்,காத்தவராயனுக்கும் கூடல் நடைபெற்று விட்டது என எனக்கு தெரியும்….”என கேள்விக்குறியோடு சகுந்தலா சொல்ல

மதிவதனி அமைதியாக,”இதற்கான விடை நான் சொல்லியே ஆக வேண்டுமா..”என கேட்டாள்.

“அப்படி இல்லை மதிவதனி..இந்த மாயமலையை மிகவும் பிடித்து இருக்கு என்று சொல்கிறாய்..ஆனால் எங்கள் அரசன் காத்தவராயனிடம் ஒருமுறை உடலுறவு கொண்டு விட்டால் அவன் ஆண்மை கொடுத்த சுகத்தினால் பெண்கள் அவனிடம் மயங்கி விடுவர்..நான் உட்பட..ஆனால் நீ அவனை பிடிக்கவில்லை என்று கூறுகிறாயே அதனால் தான் கேட்டேன்.”

“அவனுடன் நடந்த போட்டியில் தோற்றதால் நான் என்னை விட்டு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.என்ன தான் அவன் எனக்கு சுகத்தை கொடுத்தாலும் என் மனம் அவனை ஏற்று கொள்ளவில்லை.இன்னும் 3 நாட்கள் மட்டும் அவனை நான் தேடி வலிய செல்லாவிட்டால் அவன் என்னை என் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதாக கூறி உள்ளான்..”

சகுந்தலா கலகலவென சிரித்தாள்.
“நான் அறிந்தவரை நீ திரும்பி உன் நாட்டுக்கு போக போவது இல்லை மதி..”

“ஏன் அப்படி சொல்றீங்க அக்கா…”

“எனக்கு தெரிந்து காத்தவராயனுக்கு இருப்பது போல சுன்னி வேறு எந்த ஆணுக்கும் இல்லை.அவனுடன் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் சுகத்தை ஒருமுறை உன் மேனி ருசித்து விட்டது. மீண்டும் ஒரு தடவை அவன் உன்னை தொட்டாலே போதும் தானாக அவன் உன் மேனி அவனுக்கு இணங்கி விடும்..ஒருவேளை இந்த மூன்று நாளில் அவனை தேடி நீயாக போக விட்டாலும் அவன் உன்னை உன் நாட்டுக்கு போகவிடமாட்டான்.அவன் ஒரு சாதாரண பெண்ணையே விட மாட்டான்.உன்னை போன்ற பேரழகி என்றால் சொல்லவே வேண்டாம்.கொடுத்த வாக்கை காப்பாற்ற அவன் நல்லவனும் இல்ல.”

“இல்லை அக்கா..அவன் நல்லவன் இல்லை என்று எனக்கு தெரியும்.ஆனால் கொடுத்த வாக்கை அவன் காப்பாற்றுவான் என நான் நம்புகிறேன்..அதற்கு காரணம் இருக்கு”

‘அது என்ன காரணம் மதிவதனி..?”

அப்பொழுது விதவிதமான அழகிய பல வண்ணங்களில் தட்டான் பூச்சிகள்(தும்பிகள்) மலர்கள் மீது வந்து அமர்ந்தன.

“அய்… தட்டான் பூச்சி..!”என சந்தோஷத்தில் மதிவதனி கத்தினாள்.

“உனக்கு தட்டான் பூச்சி பிடிக்குமா மதி…”

“ம்..ரொம்ப…இந்த தட்டான் பூச்சியை வைத்தே நான் ஏன் காத்தவராயனை நம்புகிறேன் என்று சொல்லட்டுமா அக்கா”

“ம், சொல்லு மதி…”

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் வந்து அடிப்பான்.இதன் விளக்கம் கூற முடியுமா அக்கா…”

“என்னது தட்டானுக்கு போய் சட்டை போட முடியுமா..!அது எப்படி போட முடியும்…என்ன உளறுகிறாய் மதி..”

“சரி நானே இதற்கு விளக்கம் சொல்கிறேன்..தட்டான் என்பது நீங்கள் நினைப்பது போல தட்டான் பூச்சி அல்ல..தேடி வரும் வறியவர்களுக்கு தட்டாமல் தானம் கொடுப்பவருக்கு தட்டான் என பெயர்..சட்டை என்றால் தடுப்பது என பொருள்..முன்னொரு காலத்தில் உங்க குலத்தில் மகாபலி சக்கரவர்த்தி என்றொருவர் இருந்தார்.அவர் தேடி வரும் வறியவர்களுக்கு இல்லையென்று தட்டாமல் பொருட்களை தானம் செய்வது வழக்கம்..அப்போ ஒருநாள் யாகம் செய்யும் பொழுது விஷ்ணு வாமன அவதாரத்தில் குட்டை பையனாக உருவெடுத்து உங்கள் மன்னனிடம் தானம் கேட்டாராம்.அங்கு இருந்த உங்க குலகுரு சுக்ராச்சாரியர் அதை தடுத்தாராம்.ஆனால் அதை மீறி உங்க மன்னன் தானம் கொடுக்க முயலும் பொழுது,உங்க குரு சுக்ராச்சாரியார் வண்டு உருவெடுத்து குடுவையில் போய் அடைத்து கொண்டாராம்.அதனால் தண்ணீர் வெளியே வராமல் தானம் கொடுக்க முடியாமல் உங்கள் மன்னன் தவித்த பொழுது குட்டை பையன் உருவில் இருந்த விஷ்ணு,குச்சியை எடுத்து அந்த வண்டின் கண்ணில் குத்தி ஊனமாக்க வண்டு வெளியே வந்து விட்டது.
இதுதான் தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் என்பது…”

1 Comment

  1. Waste story

Comments are closed.