மறுபடியும் மறுபடியும்! 106

ஆனால் அவன் என்ன தான் நல்லவனாக இருந்தாலும் பிறக்கும் போதே அவனின் தலையில் சனி கால ரூபத்தில் ஏறி உட்கார்ந்துவிட்டான்.. அவன் சரியாக சூரிய கிரகணம் நடக்கும் வேளையில் பிறந்ததால் அவனுக்கு காலத்தை முன் கூட்டி கணித்து சொல்ல கூடிய ஆற்றல் உண்டு என்பதை அவனுக்கு ஜாதகம் எழுதும் போதே அவனின் குடும்ப ஜோசியர் சொல்லிவிட்டார். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது என குண்டை தூக்கி போட்டார்..

“அய்யோ என்ன ஜோசியர்வாள் இப்படி சொல்றேள்.. நல்லா பஞ்சாங்கத்த பாத்து சொல்லுங்க..” என்றனர் அவனை பெற்றவர்கள்

“நல்லா பாத்துட்டேன்.. நா சொன்னது சத்தியமான வாக்கு தான். சாட்சாத் அந்த ஆண்டவன் மேல ஆணையா இது தான் நடக்கும்..”

“அய்யோ ஆண்டவா.. ஏன் இப்படி?” அவனின் பெற்றோர்கள் புலம்ப அந்த ஜோசியர்..

“இந்தா பாருங்கோ.. காலத்த கணிக்கிறது இப்பவே நடக்காது.. அவனுக்கு 27வயது ஆகும் போது ஆரம்பித்து நடக்க ஆரம்பிக்கும்..”

“ஜோசியர்வாள் இது முடியவே முடியாதா?” அவனுடைய அப்பா கேட்க

“முடியுமா? முடியாதா? இப்பவே என்னால கணிச்சு சொல்ல முடியாது. அத கிரகண பலன், கால சாஸ்த்திரம் எல்லாம் பாத்து கணிச்சு சொல்றேன்.. இப்ப என்னால ஒன்னே ஒன்னு மட்டும் தெளிவா சொல்ல முடியும்.?” ஜோசியர் சொல்ல

“என்ன சொல்லுங்கோ?”

“உங்க பையனோட ஜாதகத்துக்கு கல்யாணம் பண்றச்சே அவன் எப்படி சூரிய கிரகணத்துல பிறந்தானோ அதே மாதிரி அவன் கட்டிக்கிற போற பொண்ணும் பிறந்திருக்கனும்.. உங்க பையனுக்கு 27வயசு ஆரம்பிச்சு முடியுறதுக்குள்ள இந்த மாதிரி பொண்ண கண்டுபிடிச்சு கட்டிவச்ச அவனோட வாழ்க்கை சுமுகமா இருப்ப வாய்ப்பு இருக்கு கால சாஸ்த்திரம் சொல்லுது..” என்றார் ஜோசியர்..

வெங்கட் பிறந்ததும் அந்த ஜோசியர் சொன்ன வார்த்தைகளை திரும்ப நினைத்து பார்த்தாள் பூங்கோதை. தன் மகனுக்கு எந்த பிரச்சினையும் வராமல்
நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என மனதார கால பைரவரை வேண்டிக் கொண்டாள்.

அங்கு அவன் அம்மா தன்னுடைய ஒரே மகன் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறாள். ஆனால் இவனோ இங்கு தன்னுடைய வருங்கால மனைவியின் ஃபோட்டாவை பார்த்து ஜொல்லு விட்டு கொண்டிக்கிறான்.. அதுவும் ஏர்போர்ட் வந்தது கூட தெரியாமல்,

இப்போதும் கூட கால்டாக்ஸி டிரைவர்

சார் ஏர்போர்ட் வந்திருச்சு… ஹாரன் அடிச்சு சொல்ல சுயநினைவுக்கு வந்து தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு அவனுக்கு குடுக்க வேண்டிய பணத்தை குடுத்துவிட்டு மீண்டும் மொபைல் டிஸ்ப்ளே பார்த்தபடியே ஏர்போர்ட் உள்ளே நடந்தான். உள்ளே சென்று டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றான்.. அந்த சமயம் பார்த்து மீண்டும் அவள் மொபைல் ரிங் ஆக இந்த முறையும் அவன் அம்மா தான் கால் பண்ணியிருக்கிறாள்.. அவன் சலிப்பாக காலை அட்டன் செய்ய,

“ஹலோ டே கண்ணா”

“என்னம்மா அதான் பத்திரமா வந்துடுவேன் சொன்னேனா இல்லியா திரும்ப திரும்ப ஏன் கால் பண்ற”

“அய்யோ ராமா நா அதுக்கு பண்ணலடா.”

“பின்ன வேற எதுக்காம் பண்ணின?”

“உன் அப்பா பிரண்டோட பொண்ணு சுபாவும் சென்னையில இருந்து வரளாம்.. அவளையும் சேத்து கூட்டிட்டு வர சொன்னார்டா. அத சொல்ல நோக்கு கால் பண்ணேன்.”

“அம்மா அவ யாரு நேக்கு எப்டி தெரியும்? நா பாத்து கூட இல்ல. பின்ன எப்படி கூப்பிட்டு வரது.”

“அவட்ட உன் நம்பரை குடுத்திருக்கேன்.. அவளே உள்ள வந்திட்டு கால் பண்ணுவடா கண்ணா. கொஞ்சம் பாத்து கூட்டிட்டு வாடா.. இல்லைனா உன் அப்பாட்ட என்னால் பேச்சு வாங்க முடியாதுடா..”

“சரி கால் பண்ணா கூப்பிட்டு வரேன்.” சொல்லிவிட்டு மொபைலை சைலண்டில் போட்டான்.. டிக்கெட் எடுக்கும் வரிசை நகர்ந்து கொண்டே போயிருந்தது. இவன் அதை கவனிக்காமல் கால் பேசிக் கொண்டே இருந்துவிட்டான்.. இவனுக்கு முன்னால் இருக்கும் இடைவெளியை பார்த்துவிட்டு அவனுக்கு பின்னால் ஒரு கை திடீரென தோள்பட்டை தட்ட சற்று பயந்து நடுங்கி திரும்பி ஒரு அழகான பெண் இவன் பயந்ததை பார்த்து ஹா..ஹா.. வாயில் கை வைத்து சிரித்தாள்.. இவனோ அந்த பெண் தான் பயந்ததை பார்த்து தான் சிரிக்கிறாள் என புரியாமல் இங்கிதம் கூட இல்லாமல் அவள் சிரிப்பதையே ஆ வென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்..
ஆனால் அவன் எதனால் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என இவளுக்கு தெரியாது. மீண்டும் மீண்டும் தன் முளையை கசக்கி இவள் அவள் தானா யோசித்து பார்க்கிறான்..

“ஹாய். ஐயம் மித்ரா” என்றாள் பின்னால் இருந்த பெண்

இவனும் பதிலுக்கு “ஹாய்.” என்றான்

“கோயம்புத்தூர்க்கா.?” கேட்க

“ம்ம். எஸ்.”

“ஓ.. ஓகே.. இவ் யூ டோன்ட் மைண்ட்.. நானும் உங்ககூட சேந்து வரலாமா?” தயங்கி தயங்கி கேட்க அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு சரி என்றான்.

“வாவ் தாங்க்ஸ்.” சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்..

“பட் இந்த கியூ மட்டும் கொஞ்சம் பாஸ்ட்டா போனா நல்லா இருக்கும்ல” கேட்டுக் கொண்டே தலையை கொஞ்சம் வெளியை நீட்டி எட்டி பார்த்தாள்..

“ஆமா.. பட் போனும்ல.”

“முன்னாடி நிக்குற ஆளுக்கு நம்ம அவசரம் எங்க புரியத போகுது..”

“எஸ்.. எஸ்..” சொல்லி இருவரும் ஏதோ பேசியபடி டிக்கெட் எடுத்து அதை சரி பார்த்துவிட்டு ப்ளைட் ஏறினர்..

(அதன் பின் நடந்தது எல்லாம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன்)

தற்போது…

இவன் இருக்கும் நிலையை பார்த்துவிட்டு அவளே இவனுக்கு முன்னால் போய் நிற்க இவன் சுதாரித்து

“ஹலோ மித்ரா மீ பர்ஸ்ட் யூ நெக்ஸ்ட்” என சொல்ல இந்த முறை அவள் வாயை பிளந்து அவனை மேலும் கீழும் பார்த்தாள்..

“ஏய்.. டு யூ நோ மீ?” என ஆச்சரியமாக கேட்க

“நோ.. நோ.. ஐ டோன்ட் நோ..” என பொய் சொன்னான்.

“தென் ஹவ் டு யூ நோ மை நேம்..?”

“வாட்ஸ் யுவர் நேம்” என திரும்பி அவனே கேட்க

“ஹே கமான்.. டோன்ட் ப்ளே.”

“நோ.. நோ.. ஐயம் நாட் ப்ளேயிங்க.” என திரும்பி அவள் நம்பும் விதமாக சொன்னான்.