மறுபடியும் மறுபடியும்! 106

நண்பர்களே இந்த கதைக்கான திரெட் ஏற்கெனவே உருவாகி இருந்தேன். அதில் சிலர் கமெண்ட்டும் செய்து இருந்தீர்கள். ஆனால் அன்று கதை பதிவு செய்யலாம் என உருவாக்கிய திரெட் பார்க்கும் போது திரெட் காணவில்லை.. இந்த முறையும் இது மாதிரி நடந்தால் இனி இங்கு கதை எழுதுவது கஷ்டம் நண்பர்களே.. என் கதை ரிப்போர்ட் அனுப்பும் அளவிற்கு ஒன்றும் கேவலமாக இல்லை. அந்த திரெட்டில் கதை ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ளாக யார் ரிப்போர்ட் செய்தது என தெரியவில்லை. இப்போது புதிய திரெட் உருவாக்கி எழுதுகிறேன். என் கதையை பிடித்து படிப்பவர்கள் மட்டும் போதும்.. நானூறு பேர் படித்து நான்கு பேர் கருத்து சொன்னால் கூட போதும் தான் எனக்கு.. இனி இது மாதிரியான செயல்கள் நடக்காது என நம்புகிறேன்…

இந்த கதைக்குள் செல்வதற்குள் முன் கதையை பற்றி சில வரிகள்..

இந்த கதை இதுவரை இந்த தளத்தில் யாரும் எழுதிட வகையில் இருக்ககூடிய கதை.. அதற்கு நான் பொறுப்பு.. அதாவது டைம்(காம) லூப்பில் சிக்கிய கதையின் நாயகன் எப்படி அதை ஒவ்வொரு முறையும் சமாளிக்கிறான் என்பதை கதையின் கரு.. ஏற்கெனவே வந்த காட்சிகள் சொன்ன விஷயங்கள் கதையில் திரும்ப திரும்ப வரும். முடிந்தளவு சுவாரசியமாக எழுத முயற்சி செய்கிறேன்.. மற்றபடி உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்

உங்களின் சமர்…

Disclaimer
——————
இந்த கதை ஒரு ஃபேன்டஸி கதை என்றாலும் இன்ஸிஸ்ட் கதை. ஃபேன்ஸி கதையில் லாஜிக் என்பது இருக்காது. தேவலயில்லாமல் தேடாதீர்கள்..

இந்த கதையில் வரும் கதாபாத்திரம் எந்த ஒரு சாதியையும் அவர்களின் திருமண சம்பிரதாய முறைகளை கொச்சைபடுத்தி காட்டுவதற்காக எழுதபட்டவை அல்ல..

சென்னை விமான நிலையம்
இன்று காலை 9மணி ..

அவன் அவசரம் அவசரமாக காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி சென்னை விமான நிலையத்திற்குள் நுழைந்து போர்ட்டிங் பாஸ்க்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்தான்.. இவனை போலவே ஒரு பெண்ணும் அவனுக்கு பின்னால் வந்து நின்று வரிசை வேகமாக நகர்ந்து செல்கிறதா என பார்த்துக் கொண்டே இருந்தாள். இருவரும் தலையை மாறி மாறி திருப்பி வரிசையை பார்த்துக் கொண்டே இருந்தனர்.. அங்கே இருந்த ஸ்பிக்கரில் சென்னை – கோயம்புத்தூர் செல்லும் இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட இன்னும் சில நிமிடங்களே இருப்பதாக சொல்ல இங்கு இருவரும் காலில் வெந்நீர் ஊற்றி நின்றுக் கொண்டிருந்தனர்..

ஒரு வழியாக டிக்கெட் செக்கிங் எல்லாம் முடித்து தங்களுடைய பையை எடுத்துக் கொண்டு வேகமாக நடந்தனர்.. முதலில் அவன் தான் அந்த ப்ளைட்டில் ஏறி தன்னுடைய சீட்டை பார்த்து உட்கார்ந்து முகத்திற்கு முன்னால் இரு உள்ளங்கையும் தேய்த்து பெருமூச்சு விட்டு சரியான நேரத்திற்கு ப்ளைட்டில் ஏறியதால் தன்னை தானே ஆசுவாசபடுத்திக் கொண்டான்.. தன்னுடைய பையில் இருந்த ஹெட்போனை எடுத்து மாட்டிக் கொண்டு கண்ணை மூடி ரிலாக்ஸாக பாட்டு கேட்டுக் கொண்டே தன் வருங்கால மனைவியை பற்றி கனவு காண
ஆரம்பித்தான். அவன் கண்ணை மூடியிருந்ததால் முன்னால் நடப்பது எதுவும் தெரியாது..

அவனுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த பெண் தன்னுடைய லக்கேஜ் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு தட்டு தடுமாறி அந்த ப்ளைட் படிகட்டில் ஏறி உள்ளே வந்து மீண்டும் தடுமாற அவன் மீது விழ அவளுடைய உதடும் இவனுடைய உதடும் ஒன்றோடு ஒன்று ஒட்டி உரச ஏற்கெனவே அவனுடைய வருங்கால மனைவி பற்றி கனவில் இருப்பதால் உடலினுள் உணர்ச்சிகள் ஏறியிருந்ததால் அவளின் உதட்டை தன் வருங்கால மனைவியின் உதட்டாக நினைத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அந்த பெண்ணோ அவனுடைய உறுஞ்சலிருந்து விடுபட முடியாமல் ‘ம்ம்ம்’ மட்டும் வாயினுள் முனங்க முடிந்தது. கடைசியில் அவளின் தலையை பிடித்து வலுக்கட்டாயமாக விலக்கி தன் உதட்டை பிடுங்க

இங்கு அவனுடைய மொபைலில் ‘யார் இந்த தேவதை யார் இந்த தேவதை’ சத்தமாக சிணுங்க கண்ணை விழித்து பார்த்தான். அப்போது தான் அவனுக்கு தான் இன்னும் கால் டாக்ஸில் தான் போய்க் கொண்டிருக்கிறோம் என உறைத்தது..

“அப்போ நா கண்டது கனவு தான ச்சே.. எதுக்கு இப்ப இந்த மாதிரி கனவுலாம் வருது” என தனக்குள் நொந்துக் கொண்டாலும் ஏதோ பெயர் தெரிந்த பெண்ணின் உதட்டை உறுஞ்சியது கனவாக இருந்தாலும் ஒரு கிளுகிளுப்பையும் அதே சமயம் அவனுக்கு ஒருவித எதிர்பாரா அச்சத்தையும் சேர்த்தே தந்தது. அவனுக்கு ஏற்பட்ட திடீர் பயத்தால் முகம் எல்லாம் வியர்த்து கொட்டியது. இன்னும் அவனுடைய மொபைல் விடாமல் அலறிக் கொண்டேயிருந்தது.

முன்னால் காரை ஓட்டிக் கொண்டிருந்த கால்டாக்ஸி டிரைவர்,

அவனிடம், “சார் உங்க மொபைல் அடிச்சிட்டே இருக்கு பாருங்க” சொல்ல சுதாரித்து மொபைலை பார்த்தான்.. அவன் அம்மா தான் கால் பண்ணியிருந்தார்.. உடனே அட்டன் செய்து

“ஹலோ அம்மா” என்றதும்

“டே கண்ணா என்னடா பண்ற.. ஒரு போன எடுக்க இவ்வளவு நேரமா? சரி கிளம்பிட்டியா என்ன?” அடுக்கடுக்கா கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்க

“அய்யோ அம்மா செத்த நிப்பாட்டு.. நா ஆபிஸ்ல லீவ் சொல்லிட்டு கிளம்பி இப்ப ஏர்போர்ட்டுக்கு தான் போய்ட்டு இருக்கேன்.”

“சரிடா ஏற்கெனவே உனக்கு நேரம் சரியில்ல ஜோசியர் வேற சொல்லியிருக்கிறார்.. அதனால நீ பாத்து பத்திரமா வந்து சேரு.. என்ன புரியுறதா?”

“சரிம்மா. அதலாம் நா பாத்து பத்திரமா வந்துடுவேன்.. நீ நொய் நொய்னு பேசமா போனை கொஞ்சம் வை” சொல்ல எதிர்முனையில் கால் கட் ஆனதும் அவனுடைய மொபைல் டிஸ்பிளேயில் அவனுடைய வருங்கால மனைவி தேன்மொழி சிகப்பு நிற கல் வைத்த சேலையை கட்டி அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.. அந்த அழகான பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கும் இவனை பற்றி சில வரிகள்..

இவனுடைய பெயர் வெங்கடேஷ் பிரசாத்.
கொஞ்சம் கூச்சம் சுபாவமுடையவன்.
அப்பா வெங்கட்ராமன். அம்மா பூங்கோதை. அவனுக்கு வயது 27 ஆகி முதல் நாள் முடிந்து அடுத்த நாள் இன்று தான் ஆரம்பித்திருக்கிறது. ஆம். நேற்று தான் அவனுடைய 27வது பிறந்த நாளை கொண்டாடினான். அவன் படித்தது பி.டெக். இப்போது சென்னையில் ஒரு தனியார் சாப்வேர் கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறான்.. மற்றபடி அவன் அக்மார்க் நல்லவன்..