பணக்காரர்களும் சுற்றுலா செல்பவர்களும் தங்கியிருந்ததால் நாகரீக ஆந்திர குமரிகளையும் பெண்களையும் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதவில்லை.
நாளை இரவு பிரபுவின் திருமணம் என்பதால் இன்றிரவு ஒரே குடியும் கும்மாளமுமாக இருந்தது. சரக்கு பாட்டில்கள் பஞ்சமின்றி கைமாறின.
எழரைய இழுத்து விட்றாதீங்கடா என்று பிரபு கெஞ்சி கேட்டுவிட்டுப் போய்விட்டான்.
சீனு, குடிக்கவா வேணாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
குடித்தால் நிஷாவுக்கு பிடிக்காது
நிஷாவுக்காக குடிக்காமல் இருந்தால் காயத்ரிக்கு பிடிக்காது
அவன், பாட்டிலை கொண்டு போய் அங்கே வேலை பார்க்கும் ஒரு 40 வயது மதிக்கத்தக்க… சின்சியராக அங்கும் இங்கும் ஓடியாடி வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்தான்
வேணாம் தம்பி. நான் குடிக்கறதில்லை
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மனைவியின் உத்தரவா? என்றான்
நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல என்றார் அப்பாவியாய்
ஏன்?
குடும்ப கஷ்டம் தம்பி
சொல்லிவிட்டு அவர் போய்விட, சீனுவுக்கு அவரைப் பார்க்க பாவமாகவும் வியப்பாகவும் இருந்தது.
சீனு ஹோட்டலுக்கு வெளியே போய் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, மகேஷை எப்படி டீல் பண்ணுவது? என்று யோசித்துக்கொண்டே உள்ளே வந்தபோது, இவன் முன்பு பார்த்த அந்த அப்பாவி மனிதர், ரிசப்ஷன் அருகே க்ளீனின்க் பண்ணிக்கொண்டிருந்தார்
என்னண்ணே இன்னும் வேலை முடியலையா என்றான் இவன்
ஓவர் டைம் தம்பி. நீங்க என்ன விஷயமா வந்தீங்க?
இவன் சொன்னான். பின் கேட்டான்
உங்க பேரு?
சாகுல்
நம்ம ஊர்ல இல்லாத வேலையா? இங்க வந்து கஷ்டப்படுறீங்க
தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். இங்க நல்ல சம்பளம்.
சாகுலிடம் பேசிக்கொண்டே ரிசப்ஷன் அருகே வந்தபோது அங்கே ஷிப்டில் இருந்த பெண்கள் போய் இப்போது வாலிப பயல்கள் இருந்தார்கள்.
next 64 plssss epo seenu poduva nandhiniya nu irukuu pls.i cant wait that moments
எதிர் பாரா திருப்பாங்களுடன். கதை சூப்பரா கொண்டு போறீங்க ராஜ் மகா பாகம் சூப்பரோசூப்பர் சார் சீனு துபாய் போவதற்குள் சீனு காமினி பகுதி எழுத்துங்கள் சார் please.
G. சங்கர்
Next please 64
Super seenu and Raj part
Raj and vinay mahava Mumbai la vachi seira madhiri podungha.