விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே 115

சற்று நேரத்தில் ரோகினியும் வந்து சேர்ந்தாள். “என்ன ராணி! ராஜா கூடத்தான் நீ ‘டிக்கி லோனா’ விளையாடுவீங்களா? எங்க கூட எல்லாம் விளையாட மாட்டியா..?’ என்ற படியே அவள் உள்ளே பிரவேசித்தாள்.

‘ராஜா’ என்று அவள் குறிப்பிட்டது, என்னைப் பார்த்து கமெண்டு அடித்த ராஜாராமன் என்ற பெயர் கொண்ட பொறுக்கியை தான். படிப்பதற்கு என்று சும்மா சொல்லிவிட்டு, படிக்காமல் கல்லூரியில் சுற்றிக்கொண்டு இருக்கும் ராஜாராமன், பெரும் பணக்காரன். அவனது பெரியப்பாவோ அல்லது மாமாவோ ஏதோ MP ஆம். அதனால், அவனை தட்டிக்கேட்க ஆளே இல்லை. படிப்பறையில் அவன் கழித்த நேரத்தை விட பள்ளியறையில் அவன் கழத்த நேரமே அதிகம் என்று ரோகினி தான் எனக்கு கூறினாள். கல்லூரியில் படித்த, படிக்கும் பல மாணவிகளை அவன் ‘போட்டு தள்ளி’ இருக்கிறானாம்! இதுவும் ரோகினியின் உளவுத்துறை ரகசியம்!

1 Comment

Comments are closed.