விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே 116

“ஏன்! முன்னால உட்கார கூடாதா..?” என்றான் அவன். “யாராச்சும் பார்த்துட்டா..? போதாததுக்கு நீ சும்மா இருக்க மாட்டே!” என்றேன். அதற்கு சிரித்த அவன், “சும்மா இருக்கவா நாம இப்போ போறோம்?” என்று கேட்ட படியே தன் முன்னால் இருந்த கண்ணாடியை அட்ஜஸ் செய்து அதில் என்னைப் பார்த்தான். எனக்கு அடி வயிற்றில் நெருப்பு மூள, நான் அவனுக்கு பழிச்சு காட்டிவிட்டு, சரிந்து உட்கார்ந்தேன்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கார் கிழக்கு கடற்கரை சாலையில் விரைந்துக்கொண்டு இருந்தது. அரை மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் அது திரும்ப, சற்று தூரத்தில் எங்களுக்கு எதிரில், பிரம்மாண்டமான பங்களா ஒன்று தென்பட்டது. ‘இங்க தான் இவன் கூத்து அடிப்பானா?’ என்று நான் எண்ணிய அதே வேளையில், “இங்க யாருமே இது வரைக்கும் வந்தது இல்லை! இது என்னுடைய ராணிக்காக ஸ்பெஷல்!” என்றான். கேட்டை அடைந்ததும், ராஜாராமன், தன்னுடைய ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கி, ரிமோட் ஒன்றை ஆன் செய்ய, கேட் தானாக திறந்தது. “யாருமே இல்லை..! எல்லாம் உங்களுக்குகாக தான்..!” என்று விளக்கம் சொல்லிவிட்டு, வீட்டினுள் காரை செலுத்தினான்.

கார் போர்டீகோவை அடைந்ததும், இருவரும் இறங்கினர். ‘இவ்வளவு பெரிய பங்களாவா..!’ என்று வியந்துக்கொண்டு இருந்த என் கையை உரிமையுடன் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.

உள்ளே சென்றது தான் தாமதம். ராஜாராமன் என்னை வெறித்தனமாக கட்டிப்பிடித்து என் உதடுகளை கடித்தான். சில வினாடிகள் சென்று, தனது பலமான கரங்களால் என்னை தூக்கிக்கொண்டு, படி ஏற தோடங்கினான். நான் அவனது கையில் துவண்ட படியே அவனையே நோக்க, அவன் விட்ட ஜொள்ளுக்கு அளவே இல்லை.

மாடியை அடைந்ததும், ராஜாராமன், ஒரு அறைக்குள் என்னை தூக்கிக்கொண்டு போனான். சில்லென்று ஏஸி ஓடிக்கொண்டு இருந்த அறை மிகவும் பெரிதாக இருந்தது. அறையின் சுவர் எங்கும் கண்ணாடி பதிக்கப்பட்டு இருந்தது. நடுவில் வட்டமாக ஆனால் விசாலமான படுக்கை. ஒரே சமயத்தில் நான்கு ஐந்து பேர் படக்கலாம் போன்று இருந்தது. கட்டிலில் என்னை தூக்கி போட்ட, ராஜாவும் ஏறினான்.

என் முகத்துக்கு அருகில் தனது முகத்தை வைத்து என்னை உற்றுப் பார்த்த அவன், “ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! படம் பேர் இல்லை. நிஜமாவே..!” என்று விட்டு என் முகத்தில் சிறு சிறு முத்தங்களை பதிக்க ஆரம்பித்தான். நெற்றி, கண் இமைகள், கன்னம், கழுத்து, மேவாய், என்று முத்தமிட்டு வந்தவன், என் காது மடல்களை நக்கியும் சப்பியும் என்னை போதைக்குள்ளாக்கினான். நான் கண்கள் மூடி இன்புற்று இருந்த வேளையில் அவன், “ஏய்! ராணி! இன்னைக்கு உன்னை அணுஅணுவா ரசிக்க போறேன்..” என்றான். நான் பதில் சொல்லவில்லை. ஆனால் என் உதட்டில் புன்னகை அரும்பியது.

“என்ன பதிலையே காணோம்” என்றான் அவன். நான் கண்களை மூடிக்கொண்டு படுத்து கிடந்தேன். “ம்ம்ம்..” என்றேன்.

“வாயை திறந்து பதில் சொல்லு..” என்று அவன் என்னை நச்சரித்தான்.

1 Comment

Comments are closed.