வாசமான ஜாதிமல்லி – பாகம் 3 60

“இல்லை, உண்மையில், ஒன்னும் இல்லை,” ஒரு வற்புறுத்தலான புன்னகை வீசினான்.

“நாம நண்பர்கள் என்று நினைத்தேன், நீ பகிர்ந்துகொள்ள விரும்பாலான பரவாயில்லை, சரி எனக்கு வேலை இருக்கு,” என்று அங்கே இருந்து மீரா கிளம்பினாள்.

மீரா எரிச்சல் அடைந்தாள் என்று பிரபுவுக்கு விளங்கியது,” கோப படாதே மீரா, இரு, நான் சொல்லுறேன்,” என்று கூறி அவளை தடுத்தான்.

மீரா திரும்பி அவனை நெருங்கி வந்து நின்றாள். அவன் தன் அந்தரங்க விஷயத்தை தன்னுடன் பகிர்ந்துகொள்ளும் அளவு அவளை நம்புகிறான் என்று அவளுக்கு மகிழ்ச்சி. “சொல்லு, ஏன் உன் மூஞ்சி யாரிடம்மொ உன் பணத்தை எல்லாம் பறிகொடுத்தது போல இருக்கு,” அவன் மூடை லேசாக்கும் வகையில் புன்னகைத்துக் கொண்டு கேட்டாள்.

பிரபு அவன் வாலெட் வெளியே எடுத்தான். மீரா உடனே,” காசு பறிபோகலா, எல்லாம் இருக்கு என்று நீ காட்ட தேவை இல்லை,” என்று சிரித்தாள்.

மீரா அப்படி சொன்னபோது பிரபுவும் உண்மையில் சிரித்துவிட்டான். அவள் சிறிய ஜோக் அவனை சிரிக்க வைத்துவிட்டது என்று மகிழ்ந்தாள். அவன் வாலெட் உள்ளே சொருகி இருந்த ஒரு போட்டோ எடுத்து அவளிடம் காண்பித்தான். என்ன போட்டோ அது என்று அறிய ஆவல் கொண்டு அதை எடுத்து பார்த்தாள், பார்த்ததுதான் அதிர்ச்சி அடைந்தாள்.

அந்த போட்டோவில் பிரபுவும் ஒரு வெள்ளை காராச்சியும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மற்றவரின் இடையை கையில் சுற்றி வளைத்து பிடித்து பாஸ் கொடுத்திருந்தார்கள். அவள் பற்பத்துக்கு நல்ல தான் இருந்தாள். மீராவுக்கு ஒரு பொறாமை உணர்வு அவள் இதயத்தை குத்தியது.

“யார் இது?”

“என் கேர்ள்பிரென்ட் … இல்லை பழைய கேர்ள்பிரென்ட். ”

அவளை தனது பழைய கேர்ள்பிரென்ட் என்று அவன் கூறும் போது ஏன் மகிழ்ச்சி அடைந்தாள் என்று மீராவுக்கு புரியவில்லை.

:சரி, என்ன ஆச்சி என்று சொல்லு.”

“இன்றைக்கு தான் அவளும் நானும் பிரிந்து ஒரு வருஷம் ஆகுது. எனக்கு எதோ கவலையாக இருந்தது, இங்கே தான் கவலை படும் போது வருவேன். இப்போ கொடும்மை என்னவென்றால் ஆறுதலுக்கு புகை பிடிக்க கூட முடியாது,” என்று கூறிய பிரபுவின் முகத்தில் தன்னம்பிக்கையற்ற புன்னகை இருந்தது.

“சாரி பிரபு, நீங்க ரொம்ப நெருக்கமாக இருந்தீர்களா, ஏன் பிரிந்தீர்கள்? அவள் உன்னுடன் சந்தோஷமாக இல்லையா?”

“அப்படி இல்லை, நாம சந்தோஷமாக தான் இருந்தோம். என்னுடன் இருப்பது அவளுக்கு ரொம்ப திருப்த்தி என்று கூறுவாள்.”

3 Comments

  1. Oru naal ki dukaan Mangal

  2. Super story continue pannunga

Comments are closed.