வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 50

“அப்படியா? மன்னிக்கவும், நான் அம்மாவுடன் தொடர்பு வச்சிக்கில்ல.” மீறவும் பிரபுவும் இடையே உள்ள கள்ள தொடர்பு இறுதியாக முடிவடைந்த காலத்திலிருந்தே சரவணன் பிரபுவின் குடும்பத்துடன் எந்தவிதமான தொடர்பையும் வைத்திருக்கவில்லை. அவுங்க குடும்பத்தில் என்ன நடக்குது என்றே சரவணனுக்கு தெரியாது.

“ஆமாம், அம்மா இப்போது வீட்டில் இருக்கிறாங்க. இந்த முறை அவுங்கள வந்து எங்களுடன் நிரந்தரமாக சென்னையில் தங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவுங்களுக்கு தான் இதில் விரும்பவில்லை. ”

“உன் தாயை நீ கவனித்துக் கொள்ள முடிந்தால் அது நல்லது பிரபு. அவுங்களுக்கு வயதாகிறாது, உன் தந்தை இல்லாமல் அவுங்க ரொம்ப தனிமையாக உணருவங்க. ”

சரவணன் பிரபுவின் தந்தையை மிகவும் அன்பாக நினைத்தான். அவர் நேர்மையாகவும், மானம் பெரிதென்று கருதும் மனிதர். அதனால்தான் தன் மகன் செய்த மோசமான துரோகத்தை அவரது மனசாட்சியை எளிதாக்க எடுத்துக் கொல்லாவோ மன்னிக்கவோ முடியவில்லை. அது இறுதியாக அவரை விரைவான மரணத்துக்கு அழைத்து சென்றுவிட்டது.

“அதைத்தான் நான் அவருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்,” கோமதி இப்போது உரையாடலில் குறுக்கிட்டாள்.

“நான் தயாராக தான் இருந்தேன், ஆனால் என் அம்மா தான் வர விரும்பவில்லை. நான் என்ன செய்ய முடியும், ”என்று பிரபு புலம்பினான், தனது முயற்சியின்மையை நியாயப்படுத்தினான்.

அப்படியானால், இப்போது நிலைமை என்ன?” சரவணன் விசாரித்தான்.

“அம்மா இறுதியாக வர ஒப்புக்கொண்டாங்க, நிரந்தரமாக இல்லாவிட்டாலும் குறைந்தது சில மாதங்களாவது, பின்னர் அங்கு தங்குவதைப் பற்றி அவுங்களுக்கு எப்படி இருக்கு என்று பார்ப்போம்,” என்று பிரபு பதிலளித்தான்.

தங்களுக்கு இடையேயான மூன்று வழி உறவின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலை அங்குள்ள மூன்று பேருக்குத் தெரியும். இது இப்போதும் பெரும் உள் உணர்ச்சி எழுச்சியை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நாகரிகமான உரையாடலில் ஈடுபட முயன்றனர். சாதாரணமாக பேசுவது, ஆனால் அதே நேரத்தில் அவர்களின் உணர்ச்சிகளைக் காண்பிப்பதை மறைப்பது கடினமான ஒன்றாக இருந்தது. அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தபோது மீரா மட்டும் தனது பார்வையை தரையில் வைத்திருந்தாள்.

“நல்லது பிரபு. இன்னும் எவ்வளவு நாள் இங்கு இருப்பீங்க? ” சரவணன் கேட்டான்.

“நாங்க இங்கு மூன்று நாட்கள் இருக்கிறோம், நாங்க நாலாவது நாளில் தான் புறப்பிடுறோம்” என்று இந்த முறை பதிலளித்தவர் கோமதி.

“இங்கே பாருங்க, உங்களுக்கு காபி டி எதுவும் ஒப்பார் பண்ணாமல் பேசிக்கொண்டு இருக்கேன். உங்களுக்கு காபி ஓகே வா.”

அவர்கள் தலை அசைக்க,” மீரா எல்லோருக்கும் காபி போட்டு கொண்டு வரியா.”

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.