வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி

“சரவணன், நான் உன்னிடம் சிலவற்றை சொல்லணும். என் மனைவியும் நீயும் உடலுறவு வைக்கும் போது எனக்கு இருவர் மீதும் கடும்கோபம். என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. நான் திரும்பி சென்றதும் கோமதியுடன் பல வரன்கள் பேசவில்லை.”

“அப்போது தான் என் மண்டைக்கு உரைக்கின்ற மாதிரிi சொன்னாள். இப்படி வெளிப்படையாக செய்ததும் கோபம் வருதே, நீங்க செஞ்சதுக்கு அவருக்கு என்ன வரணும் என்று கண்டபடி திட்டினாள்.”

“பிறகு தான் என் நடத்தையை பற்றி உண்மையில் யோசிக்க துவங்கினேன். என் அப்பாவிடம் அகப்பட்ட போது கூட என் வருத்தும், அகப்பட்டுட்டுமே என்று அதிகம் இருந்தது. குடும்பத்தில் வெறுப்பு விருப்படி நடந்துட்டும்மே என்று இருந்தது. உன்னிடம் மன்னிப்பை கேட்டால் கூட, நீ அனுபவித்த உண்மையான வேதனை எனக்கு புரியவில்லை. இப்போது நான் அதே வேதனை பெரும் போது தான் உன்னை எப்படி எல்லாம் கொடுமை படுத்திட்டேன் என்று புரிந்தது. இப்போது உண்மையிலயே உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.”

“நடந்தது நடந்து போச்சி, இனி அதை கிலுருவதில் பயனில்லை, விட்டுடு,” என்றான் சரவணன்.

“உன் குடும்ப வாழ்க்கையை சீரழித்ததுக்கு எனக்கு மன்னிப்பே இல்லை, அனால் ஒன்னு, உன் குழந்தையை என் குழந்தை போல வளர்ப்பேன், இது சத்தியம்.”

பிரபுவும் கோமதியும் ஒரு மணி நேரம் அங்கேயே கழித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினர். சரவணனும் மீராவும் வீட்டு வாசலில் நின்று அவர்கள் விடைபெறுவதை பார்த்தபடி இருந்தார்கள். அந்த நேரத்தில் சரவணனின் கை தற்செயலாக மீராவின் கையைத் தொட்டது. மீரா வழக்கம்போல கையை நகர்த்தவில்லை. சரவணன் ஆச்சரியப்பட்டான். அவன் கையை மீண்டும் நகர்த்தினான், அவன் உள்ளங்கையின் பின்புறம் மீண்டும் அவள் உள்ளங்கையின் பின்புறத்தைத் தொட்டது. மீராவின் கை இன்னும் அப்படியே இருந்தது. சரவணன் மெதுவாக விரல்களை சற்றி அவள் விரல்களைப் பற்றிக்கொண்டான். மீராவின் சுவாசம் ஒரு கணம் நின்றுவிட்டது. அவள் தயங்கினாள் ஆனால் மெதுவாக அவன் விரல்களுடன் அவள் விரல்களை மூடினாள்.

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.