வாசமான ஜாதிமல்லி – இறுதி பகுதி 111

கோமதி முகத்தில் ரொம்ப நாளுக்கு பிறகு சந்தோசம் தெரிந்தது.

அடுத்த நாள் அவளே சரவணனிடம் கேட்டாள்,” நாம போய் குழந்தையை பார்த்திட்டு வரலாம்மா?”

“இல்லை மீரா, அது சரி வரத்து,” என்ற சரவணன், மீராவின் முகத்தில் ஏமாற்றத்தை பார்க்க முடிந்தது.

அவளை ஏமாற்ற விரும்பவில்லை என்றாலும் அதுதான் சரி என்று சரவணனுக்கு பட்டது. அந்த மாதத்தில் மீரா அடிக்கடி அந்த குழந்தை பற்றி நினைத்திருப்பாள். ‘குழந்தை எப்படி இருக்கும்?’ “என் கணவர் போல ?? கோமதி போல ?? ’‘ கோமதியின் மகன் அவள் காணார் மூலம் பிறந்தது என்ற எண்ணத்தில் அவள் மனம் மூழ்கியது. குழந்தையைப் பார்க்க அவள் ஏங்கினாள். ஒரு நான்கு மாதத்துக்கு பிறகு ஒரு நாள் அவர்கள் வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கம் சத்தம் கேட்டது. சரவண எழுந்து சென்று கதவை திறந்தான். அவனுக்கு தெரியாத ஒரு கார் நின்றிருந்தது. அதில் இருந்து பிரபுவும் கோமதியும் வெளி ஆனார்கள். கோமதி கையில் அவள் குழந்தை, பிரபு கையில் அவர்கள் மகள் கையை பிடித்திருந்தான்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது, மீரா அவர்களைப் பார்த்ததும், அவள் விரைவாக எழுந்து, கிட்டத்தட்ட கோமதியிடம் ஓடினாள், அவள் முகம் புன்னகையில் பிரகாசமாக இருந்தது. மீரா குழந்தையை கோமதியின் கைகளிலிருந்து வாங்கி கொண்டு, குழந்தையை கொஞ்சிக்கொண்டு, முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அது அவளுடைய சொந்த குழந்தை போல கொஞ்சினாள்.

மீராவின் பிள்ளைகள் அங்கே அப்போது இருந்தார்கள், அவர்களிடம் காட்டி, “இங்கே பாருங்க, தம்பி எவ்வளவு அழகாக இருக்கான்.”

சம்பிரதாயத்துக்கு குழந்தையை தம்பி என்று குறிப்பிடுவார்கள் அனால் இங்கே உண்மையில் அது அவர்கள் தம்பி என்று அவர்களுக்கு தெரியாது. அவர்களும் குழந்தையை சுற்றிக்கொண்டு கொஞ்சினார்கள். அங்கே அவர்கள் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் என்றால், சரவணன், பிரபு மற்றும் கோமதி. மீரா கவனம் எல்லாம் அத குழந்தை மேல.

அவர்கள் காபி எதுவும் வேண்டாம் உண்டார்கள், குழந்தையை காண்பிக்க வந்தார்கள் என்று சொன்னார்கள். பிரபு சரவணனை தனியாக அழைத்தான்.

6 Comments

  1. Mannichidunga ram kulanthaikalukaha ithai pannuren story sooper
    Continue next part

    1. Ean Manika solringa. Unga life la ithu pola nadathucha

  2. சிறப்பு….

  3. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்..

  4. “போடா போடி” பாகம் இரண்டு தொடங்கலாமே…

  5. அருமையான கதை. இந்த கதையின் முன்னோட்டத்தை பிரபு திருமணத்திற்கு முன் வரை வேறு கதையாக படித்து இருக்கிறேன். ஆனால் திடீரென்று முடிந்த கதை எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. இப்போது ஜாதி மல்லியை முழுக்க படித்தேன். உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் கண் முன்னே நிகழ்வது போல் இருந்தது. அருமையான மனம் நிறைந்த முடிவு

Comments are closed.