நண்பனின் காதலி – 1 159

ஆரம்பிச்சுட்டா டா என்று நினைத்து கொண்டு சரி அழாத இப்ப என்ன பண்ண நீயே சொல்லு என்றான் .அவள் கண்களை துடைத்து கொண்டு சொன்னாள் இன்னைக்கு ஒரு நாள் நான் உன் அப்பர்ட்மெண்ட் தங்கிக்கி றவா என்றாள் .
என் இந்நேரம் வரைக்கும் நான் உன் கூட பட்ட டார்ச்சர் பத்தாதா எனக்கு .இனி உன்னையே கொண்டு போயி என் வீட்ல வச்சு வேற சிரம படனுமா என்றான் .விக்கி எனக்கு ஓரளவு போதை தெளிஞ்சுருச்சு இனி நான் உன் வீட்டுக்கு வரும் போது நார்மலா இருப்பேன் என்னால ஒரு பிரச்சினையும் வராது என்றாள் .
என்னடா இது இவள் இப்படி சொல்கிறாள் இவளை எப்படி கழட்டி விடலாம்ன்னு யோசிச்சு கிட்டே சுவாதி நீ என் வீட்ல தங்குறத பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல .உனக்கு ஏதாவது என்று இழுத்தான் .
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல என்றாள் பட்டென்று .அவன் விடவில்லை இல்ல சுவாதி நான் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக் அது தெரியுமா உனக்கு என்றான் .தெரியுமே ஆனா நீதான் அடுத்தவன் லவரையோ பொண்டாட்டியொவொ தொட மாட்டேன்னு கொள்கை வச்சுருக்கேலே அப்புறம் என்ன தயக்கம் என்றாள் .
அவன் இல்ல என்று இழுத்தான் ,அவன் தயங்குவதை பார்த்த சுவாதி பாத்தியா பாத்தியா நீயும் உன் பிரண்டு மாதிரியே என்னையே கழட்டி விடுற நான் என்ன கேட்டேன் இன்னைக்கு ஒரு நாள் அஸ் எ பிரண்டா என்னையே உன் வீட்டுல தங்க வைக்க மாட்டியா என்று சொல்லி கொண்டு அழுதாள் .
சரி இந்த நிலையில் இவள் என்ன சொன்னாலும் அழுவாள் .அதனால இவள வீட்டுக்கு கூப்பிட்டு போவோம் என்று நினைத்து கொண்டு சரி அழுவாத வா போலாம் என்று அவளை அவன் வீட்டிற்கு கூப்பிட்டு போனான் ,
வீட்டிற்கு வந்ததும் காரை நிப்பாட்டி சுவாதி வீடு வந்துருச்சு இறங்கு போகலாம் என்றான் .அவள் பேசமால் இருந்தாள் .இவன் திரும்பி பார்த்தான் .பின் சீட்டில் இவனுக்கு என்று வாங்கி வைத்து இருந்த பீர் பாட்டிலை அவன் கார் ஓட்டும் போது அவனுக்கே தெரியமால் குடித்து இருந்தாள் .
போச்சுடா என்று அவளை தட்டி எழுப்பினான் .அவள் போதையில் டேவிட் ரூம் உன் இடத்துக்கு வந்துட்டோமோ என்றாள் .போச்சுடா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சுடுச்சு என்று நினைத்து கொண்டே அவளை காரில் இருந்து இறக்கி போதையோடு இருந்த அவளை சிரமப்பட்டு தூக்கி கொண்டு சென்றான் .
நம்ம ஊரில்தான் ஒரு பெண்ணை இப்படி தூக்கி கொண்டு இரவில் ரூமிற்கு சென்றால் திட்டி வெளியே அனுப்பி விடுவார்கள் .மும்பையில் இது சகஜம் ஆகி விட்டதால் அவன் பாட்டுக்கு தூக்கி கொண்டு சென்றான் .
போயி ரூம் கதவை திறந்தான் .உள்ளே நுழைந்ததும் அவள் இவன் மேல வாந்தி எடுத்தாள் .போச்சுடா இனி இது வேறயா என்று நினைத்து கொண்டு அவளை விறுவிறுவென்று பாத் ரூம் க்கு கூப்பிட்டு போயி வாந்தி எடுக்க விட்டான் .
அதன் பின் அவள் மீது லேசாக தண்ணியை தொளித்து விட்டு அவளை கொண்டு போயி சோபாவில் படுக்க போட்டான் .அதன் பின் இவன் தன் சட்டையை கழட்டி விட்டு அவள் வாந்தி எடுத்த இடத்தை சுத்த படுத்தி விட்டு குளிக்க சென்றான் .