நண்பனின் காதலி – 1 159

அடப் போங்க பாசு நீங்களும் உங்க துருபுடிச்ச கொள்கையும் என்று சொல்லிவிட்டு அவன் அடுத்த கஸ்டமரை கவனிக்க சென்றான் .விக்கி ட்ரிங்க்ஸ்யை மெல்ல குடித்து கொண்டு இருந்தான் .அப்போது யாரோ ஒரு பெண் அழுகும் சத்தம் கேட்டது .அவன் போதையில் வர வர இவங்கே பாட்டலாம் பொண்ணுக அழுது ஒப்பாரி வைக்கிற மாதிரி மியூசிக் போடறாங்க சினிமால
எவண்டா அது சவுண்ட குறைச்சு வைங்கடா என்று கத்திவிட்டு மீண்டும் குடித்து கொண்டு இருந்தான் .அவனுக்கு மீண்டும் யாரோ ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது .யாருடா சந்தோசமா இருக்க வேண்டிய இடத்துல வந்து ஒப்பாரி வைக்கிறது என்று அழுகை சத்தம் வந்த பக்கம் திரும்பினான் .
அந்த பக்கம் ஒரு இருட்டில் ஒரு சேரில் ஒரு பெண் தனியாக அழுது கொண்டு சரக்கு அடித்து கொண்டு இருந்தாள் .யாருடா இது இங்க வந்து இப்படி அழுதுகிட்ட இருக்கிறது என்று தன் கண்களை துடைத்து கொண்டு பார்த்தான் .அது எங்கோ இவன் பார்த்து பழகிய பெண் போல இருந்தாள் .
யாரு இது நம்ம பழைய பார்ட்டி எதுவுமா என்று மீண்டும் கண்களை துடைத்து கொண்டே அவள் அருகே சென்ற போதுதான் தெரிந்தது அது சுவாதி .விக்கியின் நண்பன் டேவிட்டின் முன்னால் காதலி
டேவிட்டும் சுவாதியும் ஒன்றரை ஆண்டாக காதலித்து வந்தனர் .ஒரு 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் .
இந்த நிலையில் ஒரு இரண்டு நாட்களுக்கு முன்பு டேவிட் தமிழ்நாட்டிற்கு சென்று அவன் பெற்றோர் சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான் .
இதலாம் விக்கிக்கும் தெரியும் இருந்தாலும் அப்போதைக்கு சுவாதியை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக மெல்ல அவளை கூப்பிட்டான் .
அழுது கொண்டு இருந்த அவள் மெல்ல இவனை நிமிர்ந்து பார்த்தாள் .
என்ன சுவாதி இந்நேரம் இங்க குடிச்சுட்டு அழுதுகிட்டு இருக்க என்ன விஷயம் என்றான் .அவள் அழுதுக்கொண்டே கோபமாக அவனடிம் ஏன் உனக்கு தெரியாதாக்கும் என்றாள் .

தெரியும் இருந்தாலும் என்று இழுத்தான் .அவள் அழுதுகொண்டே டேபிள் மீது இருந்த இன்னொரு கிளாஸ் சரக்கை எடுத்து குடித்து கொண்டே கேட்டாள் ஏன் நீ கல்யாணத்துக்கு போகலையா என்றாள் .

ம்ம் போகல என்றான் .ஏன் உன்னையே அவன் கூப்பிடலயா என்னையே மாதிரியே உன்னையும் தண்ணி தெளிச்சு விட்டானா என்றாள்

இல்ல கூப்பிட்டான் நாந்தான் போகல எனக்கு தமில் நாட்டுக்கு போகவே பயமா இருக்கு எங்கிட்டும் தெரிஞ்சவன பாத்துடுவநேனோன்னு எப்படினாலும் இங்க ரிசப்சன் வைப்பான்ல அப்ப போயிக்கலாம்னு இருக்கேன் .