நண்பனின் காதலி – 1 158

அவளை கொண்டு போயி அவன் காரில் பின் சீட்டில் உக்கார வைத்து விட்டு இவன் வண்டியை ஓட்டினான் .ஒரு சில நொடிகளில் அவள் ஓரளவு போதை தெளிந்து விக்கியின் காரில் இருப்பதை தெரிந்து கொண்டு ஓரளவு போதையில் கேட்டாள் .
டேய் விக்கி எங்கடா கூப்புட்டு போற என்னையே என்றாள் ,விக்னேஷ்க்கு அவளிடிம் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது என்று புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான் .
அவளாக மீண்டும் பேசினாள் எனக்கு புரிஞ்சு போச்சு என்னையே கூப்புட்டு போயி ரகசியமா கல்யாணம் பண்றதுக்காக வர சொல்லி டேவிட் அனுப்புச்சனா என்றாள் சிரித்து கொண்டே .
இவன் மனதிற்குள்ளே ஆமா நான் நாடோடிகள் சசிகுமார் பாரு உங்கள சேத்து வைக்க ,என்று நினைத்து கொண்டான் .
அவள் எனக்கு தெரியும் அந்த ராஸ்கலால என்னையே மறக்க முடியாதுன்னு எங்க என்னையே வர சொல்லிருக்கான் என்று வண்டி ஒட்டி கொண்டு இருந்த விக்கியை இழுத்தான் .
அவன் பதில் சொல்ல வில்லை .இவள் மறுபடியும் சொல்றா எங்க வர சொல்லிருக்கான் என்று அவனை மீண்டும் இழுத்தாள் .அவன் பதில் ஏதும் சொல்லமால் இருப்பதால் அவனை பலமாக பிடித்து இழுத்தாள் .
அவள் இழுத்த இழுவையில் அவனால் ஒரு நிமிடம் கார் ஓட்ட முடியமால் திணறி ஒரு மரத்தில் மோத தெரிந்தான் .பின் அந்த கடுப்பில் அவளிடிம் கத்தினான் டேவிட்க்கு நேத்தே கல்யாணம் ஆகிடுச்சு யூ இடியட் என்றான் கோபமாக .

அவள் அதை கேட்டு அமைதியாகி ஆமால நான்தான் இடியட் என்று சொல்லி அழுக ஆரம்பித்தாள் .அவளை கண்டுகொள்ளமால் சீக்கிரம் இந்த தொல்லையே விட்டுட்டு திரும்ப பப்க்கு போனும் என்று நினைத்து கொண்டு வண்டியை ஓட்டினான் .அவள் பின் சீட்டில் உக்காந்து அழுது கொண்டு இருந்தாள் .

ஒரு பாதி தூரம் போயிருப்பான் .சுவாதி அழுதுகொண்டே காரை திறந்து குதிக்க முயற்சி செய்தாள் .இவளா பேசாம இங்கயே இறக்கி விட்ரனும்னு காரை நிப்பாட்டி இறக்கி விட பார்த்தான் .ஆனால் அந்த ஆள் இல்லா சாலையில் அவளை தனியாக விட மனம் இல்லை அவனுக்கு .அதனால் அழுது பொலம்பி கொண்டு இருந்த அவளை பளார் பளார் என்று ஓங்கி இரு கன்னங்களிலும் அரை விட்டான் .