“சரி,…. பிலோமினா,…. வர்ற மாசம் 15 ஆம் தேதி, என் பையனுக்கும், டில்லியிலே இருக்கிற என் தங்கச்சி பொண்ணுக்கும் கல்யாணம். கன்டிப்பா நீங்க எல்லோரும் வந்திடணும்.” பதட்டமில்லாமல், பாசமாகச் சொன்னாள் புவனா.
புரிந்து அதிர்ச்சியடைந்த அம்மா, “என்னடி சொல்ற, உன் தங்கச்சி பொண்ணா? உன் பையனுக்கு, உன் தங்கச்சி பொண்ணு, தங்கச்சி முறையாச்சேடி?” அதிர்ச்சி கலந்த பதட்டத்துடன் கேட்டாள்.
“ஆமாம்டி,…. தவிர்க்க முடியாத சூழ் நிலை. இது உன் குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிஞ்ச விசயம். மத்தவங்களுக்கு, இவனுக்கு பொண்ணு பாத்திருக்கிறது, இவனோட சித்தி பொண்ணுன்னு தெரியாது. ஏதோ டில்லியிலே தூரத்து சொந்தத்துல ஒரு வரன் பாத்திருக்கிறதாதான் நினைச்சிகிட்டு இருக்காங்க.”
“கொஞ்சம் விளக்காமாதான் சொல்லேன்டி.”
“ என் தங்கச்சியை நீ பாத்திருக்க மாட்டே. என்னை விட 5 வயசு சின்னவ. என்னை விட அழகா இருப்பா. படிக்கிற வயசிலேயே காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டு டில்லி போய் செட்டில் ஆனவதான். ஊர் பக்கம் வரவே இல்லை. வீட்ல பெத்தவங்க பேச்சை கேக்காமே, ஓடிப் போய் கல்யாணம் செஞ்சுகிட்டதினாலே அவளை வெறுத்து, கோபப் பட்டு வீட்டை viவிட்டே ஒதுக்கிட்டோம்.
போன மாசம் அம்மா இறந்ததுக்கு வந்துட்டு, ‘உன் பேச்சை கேக்காமே காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்டு, இப்படி தனியா சொந்த பந்தங்களே இல்லாத மாதிரி டில்லிலே இருக்கேனே’ ன்னு சொல்லி ‘ஓ’ன்னு அழுதா. சரி போனா போகுதுன்னு, மனசு இரக்கப் பட்டு, என்னை விட்டா அவளுக்கு யாரு இருக்கான்னு நினைச்சு, அவ செஞ்சதை மன்னிச்சு, மறந்து, நான் அவளோட சொந்தம் கொண்டாட ஆரமிச்சேன்.
அவளோட ப்ருஷன் நல்லா ஹேன்ட்சம்மா இருப்பார். நார்த் பார்டர்ல பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்லே மேஜரா இருக்கார். ஆனா, எப்ப பாத்தாலும் என் தங்கச்சி கூடவே இருக்கணும்னு நெனைப்பார். அந்த அளவுக்கு அவ மேலே ஆசை.
Next please 7
Good going Sir. . . Thank you. Please keep it up. / / /
Awaiting for your next update please. . .
Next 7 part