“ரொம்ப ஆழமா இருக்குமா?”
“ஆமாம். ஏரியோட மையப் பகுதி 132 அடி ஆழமானது. நீள அகலம் பாத்தோம்னா, ஒரு கிமீ நீளம் அரை கிமீ அகல பரப்பளவுல இந்த ஏரி இருக்கு.”
“ம்…!”
“ஏரியைச் சுத்தி அமைஞ்சிருக்கிற இந்த பகுதி அடர்த்தியான வனம் நிறைந்த மலைகளால் சூழப்பட்டு பாக்கிறப்போ ரொம்ப சூப்பரா இருந்துச்சு. ப்ராணீகத்தின் படி ஒரே நேரத்துல ஏரியோட ஒன்பது கோனங்களையும் யாரால பாக்க முடியுதோ, அவர் மேக மண்டலத்தில் கரைஞ்சு. புண்ணையத்தை அடைஞ்சிடுவாங்கன்னு சொல்றாங்க.
அப்புறம் ட்ரெக்கிங்கும், பாரா கிளைடிங்க் செய்யலாமுன்னு சொன்னாங்க. உன்னை தனியா விட்டுட்டு வந்ததினாலே, அதை எல்லாம் என்ஜாய் செய்யாம, அடுத்த இடத்துக்கு போனோம்.”
“அடுத்தது எங்கே போனீங்க?”
“இரானிகெட். அல்மோரா மாவட்டத்தின் மலைப் பிரதேசம். இராணுவப் பாசறை நகரம். இமயமலைத் தொடரின் அழகை நமது கண்களுக்கு விருந்தளிக்கும் இடம். அடர்த்தியான ஓங்கி உயர்ந்து வளர்ந்த பைன் மரங்களால சூழப் பட்டிருக்கிற இந்த மலை வாசஸ்தலம், நைனிடால்ல இருந்து 63 கிமீ தூரத்துல இருக்கு. இராஜா சுதர்தேவ், அரசி இராணி பத்மினி மேல தீவிரமா காதல் கொண்ட இந்த இடத்த அரசியின் இருப்பிடமாகவே மாத்த முடிவு செஞ்சு உருவாக்கிய இடமாம் இது.”
“ ம்…”
Next please 7
Good going Sir. . . Thank you. Please keep it up. / / /
Awaiting for your next update please. . .
Next 7 part