“அதை ஏன் கேக்கிறே மீனா? அங்கேயும், இங்கேயும் ஆர்வமா சுத்தி பாத்துலே நேரம் போனதே தெரியலே. ட்ராபிக் ஜாம் வேற. அதான் லேட்.”
அது சரி,…இன்னைக்கு எந்த எந்த இடத்த சுத்திப் பாத்தீங்க?”
“ முதல்ல பாத்த இடம் பங்கோட். இங்க கொஞ்ச நேரம் இருந்தா போதும், இங்க இருக்கிற அமைதியான சூழ்நிலைலே மயங்கி, இப்ப இருக்கிற பரபரப்பான வாழ்க்கையையே நாம மறந்துடுவோம்..”
அந்தக் காலத்துல நடக்கிற மாதிரி வர்ற கதைகள்ல வர்ற கிராமம் மாதிரி, ஒரு லைட் ஷேடோல வரைஞ்ச ஓவியம் மாதிரி இந்த கிராமமும், இதைச் சுத்தி இருக்கிற அடர்ந்த மலை வனமும், வனம் நிறைய,….. இங்கேயும், அங்கேயும் பறந்துகிட்டு இருக்கிற பல வண்ணப் பறவைகளும்…பாக்க பாக்க அழகா இருந்துச்சு.
இங்கே இருக்கிற பறவைகள் சில நேரம் ஒன்னா சேந்து இடைவிடாம மாத்தி மாத்தி எழுப்புற ஓசை,….சிம்பொனி’ன்னு சொல்வாங்களே,…அந்த மாதிரி இனிமையான இசைக் கலவையை கேட்டது மாதிரி, அவ்வளவு அழகா இருந்துச்சு.
இந்த இடத்தை பாத்துகிட்டு இருந்தப்ப, இந்த இடத்த பாத்த நீ ரொம்ப சந்தோஷப்படுவேன்னு உன்னைத்தான் நினைச்சுகிட்டேன்,”
“என்னோட நெனப்பு கூட இருந்துச்சா உனக்க்கு. பரவாயில்ல,….அவ்ளோ அழகாவா அந்த இடம் இருந்துச்சு?!!”
“ஆமாம், அப்புறம் அதை பாத்துட்டு, நகுச்சியா தால் போனோம். நைனிடால் நகரின் மையப் பகுதியிலிருந்து 24 கிமீ தொலைவுக்கு இது இருக்கு. இந்த ஆழமான ஏரில ஒன்பது கார்னர்ஸ் இருக்கு,”
Next please 7
Good going Sir. . . Thank you. Please keep it up. / / /
Awaiting for your next update please. . .
Next 7 part