“அப்படி வா வழிக்கு” என்று சொல்லிவிட்டு, புன்னகைப் பூ, புவனா ஆன்டி சென்று விட, அம்மா மனதில் ஒரே குழப்பம்.
இது தப்பா சரியா? பையனுக்காக இதுக்கு உடன்பட்டா, கற்புங்கிறது களங்கமாகிடுமோ? உடன் படாம போனா, ரெண்டு பேர் வாழ்க்கையும், எந்த வித சுகத்தையும் அனுபவிக்க முடிஞ்சு போய்டுமோ? வாழ்க்கையை அனுபவிக்கிறது பெரிசா? இல்லை,… கற்பை காப்பாத்தறது பெரிசா? கற்புன்னா என்ன? இன்றைக்கு எத்தனை பேர் கற்புடன் இருக்கிறார்கள்? கற்புடன் இருப்பவளுக்கு இந்த உலகம் என்ன வெகுமதி தருகிறது. பணம் இருந்தால் பரத்தையரும் சமூகத்தால் பாராட்டப் படுகிறார்களே? என்று எனென்னவோ யோசனைகள் அம்மாவின் மனதை அலை கழித்தன.
ஒரு வாரம் சென்றிருக்கும்.
கொஞ்ச நாள் கழித்து, புன்னகைப் பூ, புவனா ஆன்டி ஒரு வாலிபப் பையனோடு வந்தாள்.
அந்த வாலிபப் பையனை எங்கோ பார்த்தது போல ஞாபகம், நானும் அவனும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்து நின்ற போது,… சுழன்ற நினைவுச் சக்கரத்தில் சரியாகச் சிக்கிவிட்டான்.
“நீ,…. சுரேஷ் தானே!!.”
“அட!,…ஆமாம்!!. நீ கார்த்திதானே!!!….”
உள்ளத்தில் இளமைக் கால நண்பனை, பள்ளித் தோழனை பல ஆண்டுகள் கடந்து பார்த்த சந்தோஷம் இருவர் முகத்திலும் பிரகாசிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு கலந்த நட்புணர்வோடு கட்டி அணைத்துக் கொண்டோம்.
“என்ன தம்பி. இவரை உங்களுக்கு முதல்லியே தெரியுமா?” என்று கேட்டாள் அம்மா.
“ஆமாம்மா…. இவன் என் ஹைஸ்கூல் ஃப்ரண்ட். பேரு சுரேஷ்.”
“அப்படியா,… நல்லதா போச்சு.”
“இவன் தான் உன் ஃப்ரண்டுன்னு எனக்கு நீ சொல்லவே இல்லையேடா”
“மேல் படிப்புக்காக, அங்கே இங்கே போனதுக்கப்புறம், நானே இப்பதானே இவனைப் பார்க்கிறேன். அதுவும் இல்லாம சொல்ல சந்தர்ப்பமும் கிடைக்கலை.”
Next please 7
Good going Sir. . . Thank you. Please keep it up. / / /
Awaiting for your next update please. . .
Next 7 part