காமம் மட்டுமே மனிதனுக்கு சந்தோஷம் கொடுக்கும் 64

“நாளை என்னை விட்டுவிட்டு செல்லப்போகிறாயே…நான் தவிப்பேனே” என்றேன்.

“உங்கள் வாழ்க்கையில் நான் ஒரு அங்கம் தானே மாமா. என்னோட வாழ்க்கையை நான் வாழ வேண்டாமா?”
“……………………………”
“நம் சேர்க்கை ஆனந்தமானது, அர்த்தமானது ஆனால் அங்கீகாரமற்றது தானே?”

என்னிடம் எந்த பதிலுமில்லை, பாசம் என்னும் பிச்சை பாத்திரத்தை பார்வையில் ஏந்தினால் அள்ளியிட யாருமில்லை, அதைப்பெற எனக்கு யோக்கியதையில்லை?

காமம் என்னுமோர் அன்பளிப்பை பெற மட்டும் எப்படியோ தகுதியாகி விட்டேன்? அதுவும் தற்காலிகமாக.

அடுத்த வேளை சோறாகிப்போனது, நான் ஏங்கும் ஸ்பரிசம், பாசம்….
காமம் என்னும் இலவச இணைப்புடன் தான் அது வரலாம்.
அந்த தகுதி தான் கள்ள உறவோ?

மறு நாள்….

மது கிளம்பிப்போய் வெகுநேரமானது. எண்ணங்கள் மரத்துப்போக எதுவும் செய்வதறியாமல் படுத்திருந்தேன்.

கனவுகள், கற்பனைகள் ….எல்லாமுமே கல்லூரி வாழ்க்கை வரை தான்… கல்யாணம் ஆகி கரைசேர்ந்தபின் வற்றிய குளமாய் மனது…
ஈரம் சோரம் போக எதுவுமில்லை வாழ்க்கையில்,
மனைவி என்னும் ஆதாரம் அர்த்தமுள்ள வடிகால்…
தாம்பத்தியம் என்பது அப்பழுக்கற்ற சேர்க்கை. அது மனைவியுடன் மட்டும் தான் இனிக்கும், குற்றவுணர்ச்சிக்கு அங்கே இடமில்லாததால் குதூகலமும் நிம்மதியும் குறையின்றி கூடவரும்.

ட்ட்ரிங் ட்ட்ரிங்…
காலிங் பெல் அடித்தது.
கதவை திறந்தேன்.

இனியா….என் உறவுக்காரப்பெண்…
மனைவி வகையில் உறவு. கணவனை இழந்தவள்.
என்னைப்போலவே வாழ்வில் தட்டுத்தடுமாறி கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஜீரணித்து பயணிக்கும்

அவள் ஒரு கைம்பெண்…வாழ வேண்டிய நேரம்..வாழத்தலைப்பட்ட காலகட்டத்தில் ஹார்ட் அட்டேக்கில் கணவன் கைவிட்டு செல்லும்போது இரண்டு குழந்தைகள் – வளர்ந்து கல்யாணம் செய்து கொடுத்து விட்டாள். எல்லாம் அவரவர் வாழ்க்கையில் பயணிக்கையில் இவள் மகனிடமும் மகளிடமும் சென்று தங்கி வருவாள். இதற்கிடையில் என்னிடமும் வந்து செல்வாள், என் தனிமைக்கு துணையாக.

என்னை விட ஓரிரு வயது குறைந்தவள், ஆனால் வயதுக்கு மீறிய அபரிதமான வளர்ச்சி…செழுமையுடன் வளர்ந்தவள்…சிறந்த மேனியுடையவள்.

காமம் கண்களில் சுரப்பவள், காந்தமாய் ஈர்ப்பவள்.

“எப்ப கிளம்பினே அங்கிருந்து,…”
“எட்டு மணிக்கு…”
“போன் பண்ணியிருக்கலாமில்ல.”

“காபி போடவா.”
“ம்..”
“நல்லா தூங்கினீங்களா?”
“ம்..தூக்கம் வந்தாலும் வரலைன்னாலும் புரண்டு புரண்டு தானே படுக்கணும்…”