குறைந்த பட்சம், என் ஆசைக்கு மதிப்பு கொடுத்து, சரிம்மா, நீ ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை செஞ்சுக்கோ, ஆனா, என் முன்னாடி செய்யாதன்னு கூட ஒரு வார்த்தை சொல்லலியே நீங்க! இப்ப, என்னை மட்டும் கேள்வி கேக்குறீங்க?
மோகன் வாயடைத்துப் போயிருந்தான். நான் அவளைக் கேள்வி கேட்க நினைத்தால், இவள் என்னைக் கேட்கிறாள் என்று கடுப்பானான். அதே சமயம் அவளது கேள்விகளுக்கு அவனால் பதிலும் சொல்ல முடியவில்லை!
சொல்லுங்க, இப்ப மட்டுமே ஏன் பேச மாட்டேங்குறீங்க? உங்களுக்குப் புடிக்காத ஒரு விஷயம்னா நேத்தே சொல்லியிருக்கலாமே?
தனக்கும் மதனுக்கும் இடையில் இருந்த பந்தயத்தைப் பற்றி சொன்னால், இவள் இன்னும் கடுப்பாகக் கூடும் என்று மோகனுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதே சமயம், இனி இது தொடரக் கூடாது என்று எண்ணிய மோகன்,
சரி, நடந்ததெல்லாம் விட்டுடலாம். இனி, நீ மதன் கூட எதுவும் வெச்சுக்காத. என் முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி! ஓகேயா?
மீண்டும் மோகனை ஆழமாகப் பார்த்த சீதா, சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கடுப்புடன் சொன்னாள்.
சரி, உங்களுக்காக, இனி மதன் கூட இது மாதிரி எதுவும் வெச்சுக்க மாட்டேன். அதுவும், உங்களுக்காக! நீங்க சொல்றீங்கங்கிறதுக்காக!
மோகனுக்கு, எப்படியோ இந்தப் பிரச்சினையை சமாளித்ததில் மகிழ்ச்சி! நேற்று இருந்த கவலைகளை கொஞ்சம் மீண்டும் ஒரு முறை தூங்கி எழுந்தான்! அன்றிரவு, அவனுக்கு காத்திருக்கும் அடுத்த சோதனை என்னவென்று தெரியாமல்…
.
மாலை 7 மணி.
மிகவும் ஹேண்ட்சமாக, ஒருவன் வீட்டிற்குள் வந்தான்.
மிஸ்டர் மோகன்?
யெஸ்?
ஹல்லோ சார், என் பேரு வினோத். மதன்கிட்ட இந்த ஃபைலை கொடுக்கனும்.
யெஸ், யெஸ்… மதன் என்கிட்ட சொல்லியிருந்தான். உங்ககிட்ட வாங்கி வைக்கச் சொல்லி… சிட் டவுன்! என்ன சாப்பிடுறீங்க?