அடுத்த நாள் மோகனும் சீதாவும் எழுந்த போது மதியம் ஆகியிருந்தது. மோகன் மிக நீண்ட நேரம் தூங்கவில்லை. அவனுக்கு, மதனின் மேல் கொஞ்சம் சந்தேகம் கூட வந்திருந்தது. சீதாவின் மேல் பயங்கர கோபமும் இருந்தது. இருந்தாலும், இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்றே அவனுக்கு புரியவில்லை. அதை யோசித்தே நீண்ட நேரம் முழித்திருந்தான்.
ஒரு வழியாக எழுந்தாலும், மதனின் முகத்தில் முழிக்க அவனுக்கு அசிங்கமாய் இருந்தது.
நல்ல வேளையாக, மதன் வீட்டில் இல்லை. முக்கிய விஷயமாய் வெளியோ போவதாகவும், இரவில் மிகவும் லேட்டாகத்தான் வர முடியும் என்று அவனுக்கு SMS அனுப்பியிருந்தான். மோகனுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
மதியம் லஞ்ச் சமயத்தில், மதனே கூப்பிட்டிருந்தான்.
ஒரு சின்ன ஹெல்ப் மாம்ஸ்!
என்ன மதன்?
ஒண்ணுமில்லை, என் ஃபிரண்ட் இன்னிக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வந்து ஒரு ஃபைல் கொடுப்பான். அதை வாங்கி வெச்சிக்கறீங்களா? ப்ளீஸ்!
அவன் நக்கலாகப் பேசவில்லை. நார்மலாகத்தான் பேசுகின்றான் என்று மிகவும் சந்தோஷம் மோகனுக்கு!
ஷ்யூர் மதன். நான் பாத்துக்குறேன்.
தாங்க்ஸ் மாம்ஸ்!
பெருமூச்சு விட்டான் மோகன். இப்ப, சீதாகிட்ட எப்டி இதைக் கேக்குறது என்று யோசித்தான்.
மதனைப் போலவே சீதாவும், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் இருந்தாலும், அவள் அணிந்திருக்கும் கேஷூவல் டிரஸ்ஸே மிகவும் மாடர்னாக, கொஞ்சம் செக்சியாக இருப்பது, இனி சீதாவின் டிரஸ்ஸிங் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காட்டியது.
அது அவனை மேலும் குழப்பியது! டிரஸ்ஸிங் மட்டும் அப்படியா? இல்லை மத்த விஷயத்திலுமா? இதை எப்படி கேக்குறது?
மதியத்திற்கு மேல் அவன் இருப்பு கொள்ளாமல், சீதாவிடம் போய் நின்றான்.
என்னங்க?
உன்கிட்ட கொஞ்சம் பேசனும்!
என்ன விஷயங்க? சொல்லுங்க!
அது வந்து… நே… நேத்து…
நேத்து?
(என்ன இவ, இவ்ளோ கேஷூவலா கேக்குறா? நாந்தான் ஓவரா திங் பண்றேனா?)…