ஓங்கியவனால், சீதாவை அடிக்க முடியவில்லை. ஏனெனில், அங்கு பெல்ட்டை பிடித்துக் கொண்டு நின்றிருந்தது…
அங்கு நின்று கொண்டிருந்தது வினோத்!
டேய், நீ ஏண்டா மறுபடி உள்ள வந்த? வெளிய போடா.
மோகனுக்கு பதில் சொல்லாமல், வினோத் அவன் கையிலிருந்த பெல்ட்டை இழுக்க, அது, மோகனின் கைகளில் இருந்து வினோத்தின் கைக்கு வந்தது.
மோகனை சிறிதும் சட்டை செய்யாதவன், சீதாவின் அருகில் சென்று, அவளது கன்னத்தை தொட்டு ஆராய்ந்தான். அவளை அணைத்தவாறு கேட்டான்,
திரும்ப அடிச்சானா மேடம்?
இல்ல, அடிக்க ஓங்கினப்ப, நீங்க வந்துட்டீங்க! தாங்க்ஸ்!
டேய், வெளிய போடா! நான் இங்க பேசிட்டு இருக்கேன், அங்க என் பொண்டாட்டிகிட்ட என்னடா பேச்சு.
வினோத் அலட்சியமாக மோகனைப் பார்த்தான், அதாவது, மிஸ்டர் மோகன் சிலருக்குல்லாம் சாதாரணமா சொன்னா புரியாது! அவிங்க பாஷைல சொன்னாதான் புரியுமாம்…
நாந்தான் திரும்பத் திரும்ப சொன்னேன்ல? என் மேலயோ, மேடம் மேலயோ கை வைக்கக் கூடாதுன்னு? என்னை புடிச்சு தள்ற? மேடமை அடிக்க பெல்ட் எடுக்குற? ம்ம்ம்… என்று சொல்லிக் கொண்டிருந்தவன், திடீரென்று ஒரு அறை அறைந்தான்.
பளார்!
மோகனுக்கு பொறி கலங்கியது.
சீதாவோ, பாவம் வினோத், விட்ருங்க இந்தாளை! தேவையில்லாம வாங்கி கட்டிகிட்டு இருக்காரு. அறிவே இல்லை…
அந்த அடியை விட, சீதா திட்டுவது மோகனுக்கு இன்னும் வலித்தது.
ஏய், என்னடி ஓவரா பேசுற? உன்னை… என்று அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான்.
இடையில் வினோத் வந்து நின்றான்…
முன்பு போல், இப்பொழுது வினோத்திடம் திமிராகப் பேச முடியவில்லை மோகனால். ஏனெனில் அவனது அடி மிகவும் வலித்தது.
டேய்… இவ, என் பொண்டாட்டிடா! கொஞ்சம் கெஞ்சலாக வந்தது மோகனின் குரல்.