காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 6 42

அவ்வளவுதான், வினோத்திற்கு கோபம் வந்தது.

மிஸ்டர் மோகன், அவ்ளவுதான் மரியாதை. வயசுல பெரிய ஆளாச்சேன்னு பாக்குறேன். எங்க அப்பா கூட, என்னை அடிச்சதில்ல. நீங்க ஏற்கனவே ரெண்டு அடி அடிச்சிட்டீங்க. இனி கையை ஓங்குனீங்க…. அப்புறம்

மோகன் சீதாவிடம், உன்னாலதாண்டி, நீ இப்படி வழிஞ்சதுனாலதான், கண்ட நாய்லாம், என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டுறான்.

வேனாங்க, ரொம்ப தப்பு பண்றீங்க… இது நல்லதுக்கில்லை. ப்ளீஸ், அவருகிட்ட சாரி சொல்லுங்க!

இந்த நாய்கிட்ட, நான் சாரி சொல்லனுமா? என்று மீண்டும் வினோத்தை பார்த்துக் கத்தினான்.

சாரி வினோத்! ரொம்பவே சாரி. அவருக்கு ஏதோ கிறுக்கு புடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். எனக்காக உங்களுக்குதான் சங்கடம். ரியல்லி சாரி. நீங்க கிளம்புங்க. நாம, இன்னொரு நாள் மீட் பண்ணலாம். உங்களை சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றாள்.

யாரோ லூசுத்தனமா நடந்துக்குறதுக்கு, நீங்க எதுக்கு மேடம் சாரி சொல்லிகிட்டு. ஆக்சுவலி, உங்களை மீட் பண்ணது எனக்குதான் சந்தோஷம். கண்டிப்பா நாம மீட் பண்ணலாம். பை தி வே, இந்தாங்க என் கார்டு. நம்பரை நோட் பண்ணிக்கோங்க. நெக்ஸ்ட் மீட்டிங் பத்தினாலும் சரி, இல்ல இந்தாளு, திரும்ப ஏதாவது லூசுத்தனமா நடந்துகிட்டாலும் சரி, உடனே எனக்கு கால் பண்ணுங்க என்றவன்…

மிஸ்டர் மோகன், இவிங்களுக்காக உங்களை சும்மா விடுறேன். இல்லாட்டி என்னை அடிச்சவனை நான் சும்மா விட்டதில்லை. இனி என் மேல மட்டுமில்லை, உங்க ஒய்ஃப் மேல உங்க கை பட்டா கூட, நான் சும்மா இருக்க மாட்டேன். என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாது. ஜாக்கிரதை!

வினோத் சொல்லிவிட்டு திரும்பினான்.

நேற்று இரவு நடந்ததும், மதனிடம் தோற்றதும், சீதாவின் நடவடிக்கையும், அவள் எதிர்த்து பேசுவதும், தன்னை விட்டு விட்டு இன்னொருத்தரிடம் நெருக்கமாவதும், தன் வீட்டுக்கே வந்து வினோத் மிரட்டுவதும் என எல்லாம் சேர்ந்து மோகனை பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது.

சூழ்நிலையை மறந்த மோகன், வெறியுடன் வினோத்தை பார்த்து கத்தினான்.

சர்தான்… போடா வெளிய!

வினோத் கடும் கோபமடைந்தாலும், மோகனை முறைத்து விட்டு வெளியே போனான்.

அவன் சென்றதும் சீதாவை பார்த்து கத்தினான். என்னடி திமிரா?

வேணாங்க… ரொம்ப ஓவரா போறீங்க? வேணாம்…

என்னடி? என்னையே மிரட்டுறியா? அவன்கிட்ட வழியிற, என்னை மிரட்டுற, அவ்ளோ திமிரா? கோபத்தில் மோகன் பெல்ட்டை உருவி, சீதாவை அடிக்க கை ஓங்கினான்.