ஒரு நாள் குத்து 1 203

நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன் அப்பொழுது என் நண்பன் சரவணன் போன்செய்தான் என் அம்மாவும் ரவியும் அடுத்த வாரம் சென்னை வருகிறார்கள் என்று கூறினான். எனக்கு உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை நான் என் எச்சோடியிடம் போய் என் அம்மாவும் தம்பியும் வருவதைக் கூறினேன். அவர்கள் இருவரும் வருவதால் நான் கதிருடன் அவன் வீட்டுக்கு போகட்டுமா என்று கேட்டேன். அவர் கொஞ்சம் நேரம் யோசித்து நீ மும்பை போய் அந்த கம்பனி ஆட்களை சந்திக்க நான் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறினார். நானும் அவர்கள் வந்தால் தான் பேசிகொள்வதாகவும் கூறினார். என் அம்மாவும் தம்பியும் வருவதற்கு முதல் நாள் இரவு நான் மும்பைக்கு flightல் அனுப்பினார்.

அடுத்த நாள் காலை ஒரு பத்து மணிக்கு என் அம்மாவும் தம்பியும் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர் அவர்கள் என்னை பற்றி கேட்க நான் மும்பைக்கு போனதும் நான் பல்கலைக்கழகத்தில் இல்லை என்று கூறி மேலும் எதாவது விவரம் வேண்டும் என்றால் எச்சோடியிடம் போய் கேட்க சொல்ல அவர்களும் என் எச்சோடியிடம் போய் என்னை பற்றி கேட்க அவர் அவர்களை நோக்கி அவர்களை பற்றி கேட்க என் அம்மா அவரிடம் நான் ராஜாவின் அம்மா இவன் அவனின் தம்பி என்று அறிமுகப்படுத்தினார். உடனே எச்சோடி நான் மும்பைக்கு செனறுருப்பதகவும் வர நான்கு நாட்கள் ஆகும் என்று கூறி ராஜா வந்தால் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்க அம்மா அவரிடம் நான் ஒரு வருடமாக வீட்டிற்கு வருவது இல்லை என்று கூற அதற்கு எச்சோடி ஏன் ராஜா வீட்டிற்கு வராமல் இருக்க எதாவது காரணம் இருக்கும் இல்லையா ஏன் என்றால் ராஜா தான் இந்த பல்கலைக்கழகத்தில் முதல் மானவன் படிப்பில் அதுமட்டுமின்றி மிகவும் நல்ல மானவன் ஒழுக்கத்திலும். அப்படிப்பட்ட ஒருவன் வீட்டிற்கு வருவது இல்லை என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் அல்லவா என்று கேட்க உடனே அம்மா நான் பைக் வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் என் அப்பா வாங்கிக் தரமாட்டேன் என்று கூற நான் கோபமடைந்து வீட்டிற்கு வருவதில்லை என்று கூறினாள் உடனே எச்சோடி சிரித்துக் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் எனக்கு எல்லாம் தெரியும் கடைசியாக ராஜா வீட்டிருந்து வந்த பிறகு அவன் ஒரு சூப்பர் மார்க்கெட்க்கு வேலைக்கு போனான் அப்பொழுது நான் தான் அவனை அழைத்து அவன் ஏன் வேலைக்கு போகிறாய் என்று கேட்டேன் அதற்கு அவன் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்னை பொறுக்கி என்று தான் கூறுகின்றனர் அதுமட்டுமின்றி என் வீட்டில் உள்ள என் தம்பிகளுக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார் நான் கேட்டதற்கு முடியாது என்று கூறினான் எனக்கு வீட்டில் மரியாதை இல்லை என்று கூறினான் இதுதானே உன்மையில் என்று எச்சோடி கேட்க அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மையே என்று கூற என் எச்சோடி நீங்கள் ராஜாவின் அம்மா தானே உங்கள் வேறு பிள்ளைகள் ஒருவனை தொடர்ந்து அவமான படுத்தும் போது நீங்கள் எப்படி சும்மா இருந்தீர்கள் அப்போதே உங்கள் பிள்ளைகளை கண்டித்து இருந்தால் இன்று இப்படி ஒரு நிலமை வந்திருக்காது என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே ரவி நீங்கள் ஏன் அந்த பொறுக்கிக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று சொல்லி முடிக்கும் முன்பே அம்மா பளார் என்று ஒங்கி அவனது கன்னத்தில் அறைந்தாள் பிறகு கோவமாக அவனை வெளியே இருக்க சொல்லி விட்டாள் அவனும் வெளியே செல்ல அம்மா எச்சோடியிடம் மன்னிப்பு கேட்க எச்சோடி இதை நீங்கள் அவன் சிறுவனாக இருக்கும் போதே செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது என்று கூற அம்மா அவரிடம் இனிஅதுமாறி தவறுகள் நடக்காது என்று கூற எச்சோடி அம்மாவிடம் பாரதியார் சொல்லி இருக்கிறார் நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்று அதுபோல் ஒரு நல்ல பிள்ளையாக இருந்தவனை அவமான படுத்திட்ர்கள் அந்த காயம் ஆற சிறிது காலம் பிடிக்கும் எனவே நீங்கள் இன்று போய் வாருங்கள் நான் அவனிடம் பேசுகிறேன் என்று கூறி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தார். இதை அவர் என்னிடம் கூறும்போது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் மாறியது போல் தோன்றியது என்று கூறினார். அதற்கு நான் அந்த நம்பிக்கை எனக்கு வரும் போது நானே வீட்டிற்கு போவேன் அதுவரை என் காயம் ஆறாது என்று கூறினேன். அதற்கு உன் இஷ்டம் என்று கூறினார்

நான் அந்த டெமோ கொடுக்க லண்டன் செல்ல என் கூட எச்சோடியும் வந்தார். நான் அந்த பிராஜெக்ட் டெமோவை CEO முன்பு காட்டினேன். என்னைபோல் ஒரு பத்து காலேஜில் இருந்தும் குழுக்கள் வந்திருந்தனர் எல்லோரும் டெமோ கொடுத்து முடித்ததும் என் பிராஜெக்ட் மிகவும் நன்றாக இருக்கிறது என்று CEO மற்றும் அந்த கம்பனி ஊழியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக இருந்தது. அன்று முதல் என் வேலை அந்த பிராஜெக்ட்ல் வாராவாரம் அவுட் லைன் ரெடி பண்ணி அனுப்பவேண்டும் என்று கூறினார்கள் அதேபோல் நான் அந்த பிராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்து விட்டேன். அதன் பிறகும் பல வேலைகளை அந்த கம்பனிக்காக செய்து கொடுத்தேன்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.