என் தேவதை – Part 1 175

நிருதி வீட்டை விட்டு கிளம்பி வெளியே வந்ததும் ஒரு ஓரத்தில் பைக்கை நிறுத்தினான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து தமிழ்ச் செல்விக்கு போன் செய்தான். ரிங்காகி எடுத்தாள்.

“ஹலோ?” அவனுக்கு முன் அவளே பேசினாள்.

அவள் குரலைக் கேட்டதும் சிலிர்த்தான்.
“ஹாய் தமிழ்.. நான் கிளம்பிட்டேன்”
“ம்ம்.. வாங்க”
“எங்க வரது?”
“என்… என்.. வீட்டுக்கே வந்துர்ரீங்களா?”
“உன் வீட்ல ஆள் இல்லையா?”
“இருக்காங்க..”
“அப்றம் நான் எப்படி வரது .?”
“ஆமால்ல..? சரி.. என்ன பண்றது இப்ப?”
“வெளிய வா..”
“வரேன்.. ஆனா என்ன சொல்லிட்டு வரதுனுதான் தெரியல”
“புவி வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வா..”
“அவ வீட்டுக்குன்னு சொன்னா அம்மா திட்டுவாங்க.. பொறந்த நாளும் அதுவுமா எனக்கு திட்டு வாங்க விருப்பம் இல்ல..”
“ம்ம்.. சரி.. இப்ப நான் என்ன பண்ண? நான் உனக்காகத்தான் லீவ் போட்டேன்”
“ஹையோ.. சரி வாங்க..”
“எங்க வரது? உன் வீட்டுக்கேவா?”
“நோ.. நோ.. வீட்டுக்கு வேண்டாம். அதுவும் வம்பாகிரும்”
“……”
“அலோ…?”
“சொல்லுடி செல்லம்.. இப்ப நான் என்னதான் பண்ண?”
“வரேன்ன்ன்.. டென்ஷனாகிடாதிங்க..”
“இல்ல.. வா..”
“வந்து… எங்க ஏரியா பஸ் ஸ்டாப்… இல்ல இல்ல அங்க வேண்டாம்.. அந்த ஸ்கூல் இருக்கில்ல? அங்க பக்கத்துல வெய்ட் பண்ணுங்க.. நான் வீட்லருந்து வெளிய வந்ததும் உங்களுக்கு கால் பண்றேன்”
“உன்ன பாக்க ரொம்ப ஆசையா இருக்கேன் செல்லம்”
“ம்ம்.. வரேன்ப்பா..”
“ஏய் தமிழ்..”