என் தேவதை – Part 1 174

“எப்படி இருக்கா?”
“பைன்.. என்ன திடீர்னு அவளை பத்தி?”
“உன் பர்த் டே இல்ல? வந்தாளா?”
“வரல. லீவ் கெடைக்கலனு எர்லி மார்னிங் போன் பண்ணி விஷ் பண்ணா”
“ம்ம் குட். உங்கக்கா லவ் என்னாச்சு? ”
“போயிட்டிருக்கு போல..”
“எப்ப மேரேஜ்?”
“அது தெரியல. ஏன்?”
“சும்மாப்பா.. ”
“அவள்ளாம் உங்களுக்கு செட்டாகமாட்டா”
“ஹே.. லூஸு. நானே உன்னை லவ் பண்றேன். உன்னை விட்டு அவளை ட்ரை பண்ணுவேனா?”
“நம்ப முடியாதுப்பா இப்பல்லாம்..”
“எனக்கு நீ போதும். உன் அக்கா வேண்டாம் ”
“நான் ஒண்ணும் ஓகே சொல்லல?”
“நோ ப்ராப்ளம்”

கோவில் சென்றபோது தமிழ் அவனிடம் மிகவும் நெருக்கமாகியிருந்தாள். அவளின் உடல் அவன் உடலின் எந்த பாகத்திலும் இயல்பாக பட்டு விலகியது.

தோழியுடன் இணைந்து அவனையும் அழைத்துக் கொண்டு அந்த கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தாள். சாமி தரிசனம் பெற்றாள்.

கோவிலை விட்டு வெளியே வந்து வெளிப் புறங்களிலும் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தனர். அவள் தோழி ரூபாவும் நிருவுக்கு நெருக்கமாகி விட்டாள்.

இரண்டு மணி நேரம் கழித்து கோவிலை விட்டு கிளம்பினர்.

“நெக்ஸ்ட் எங்க போலாம்?” நிருதி கேட்டான்.
“ரூபா வீட்டுக்கு ” என்றாள் தமிழ் .
“ரூபா வீட்டுக்கா?”
“ம்ம் ”
“ஏன்.. அங்க என்ன?”
“ஒண்ணுமில்ல.. ரூபாவ ட்ராப் பண்ணிட்டு நேரா என்னை கொண்டு போய் என் வீட்ல ட்ராப் பண்ணிருங்க.. தட்ஸ் ஆல்”
“அவ்ளோதானா?”
“அவ்ளோதான்” என்றாள் தீர்மானமாக.. !!

“அவ்ளோதானா?” மீண்டும் கேட்டான் நிருதி.
அவன் பார்வை தமிழின் முகத்தில் நிலைத்திருந்தது.

“அவ்ளோதான்” மீண்டும் சிரித்தபடி சொன்னாள் தமிழ்.

“ஸோ ஸேடு”
“ஏன்?”
“அப்போ நான் இன்னிக்கு லீவு போட்டது வேஸ்ட்”
“வேற என்ன பண்ணனும்ங்கறீங்க?”

நிருதி ரூபாவைப் பார்த்தான். அவள் குழப்பமான மன நிலையுடன் அவர்களின் உரையாடல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஸாரி மிஸ் ரூபா”
“என்ன?”
“உன்ன நான் ஒண்ணு கேக்கணும்?”
“ம்ம்.. கேளுங்க?”
“உனக்கு பாய் பிரெண்டு இருக்கா?”