எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 65

“டேய்.. முட்டாக்…!! சும்மா சும்மா நெகட்டிவா பேசாதடா.. வெண்ணை..!!”

“ம்க்கும்.. போடா வெளக்கெண்ணை..!! அங்க பாரு.. அந்த அப்பார்ட்மன்ட்சை பாரு..!! அதுல மட்டுமே கொறைஞ்சது நூறு வீடு இருக்கும்.. எல்லா ஜன்னலும் இங்கதான் பாக்குது..!! அது மாதிரி இன்னும் எத்தனை அப்பார்ட்மன்ட்ஸ் இருக்குது பாரு..!! ஒன்னு.. ரெண்டு.. மூணு..”

“ஏய் ஏய்.. நிறுத்துடா..!! மொத்தமா பார்த்தா எல்லாம் கஷ்டமாத்தான் இருக்கும்.. ஒன்னு ஒன்னா பாரு.. ரொம்ப ஈஸியா இருக்கும்..!! இருபத்தஞ்சு போர்டை இப்போ ஒத்தை போர்டா மாத்தலையா..?? அந்த மாதிரிதான்..!! இங்க இருக்குற ஒவ்வொரு வீடா போறோம்.. ஒன்னு ஒன்னா ஃபில்ட்டர் பண்றோம்.. கோழியை அமுக்குற மாதிரி அவளை அமுக்குறோம்..!!”

“ஹ்ம்ம்.. இவ்வளவு கொள்ளைல அந்த கோழியை எங்க இருந்து தேட ஆரம்பிக்கிறது..??”

“எங்கயாவது இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்..!! இங்க இருந்து எந்த வீடு.. க்ளியர் வ்யூல இருக்கு.. ம்ம்ம்ம்.. ஆங்.. அதோ.. அந்த வீட்டுல இருந்து ஆரம்பிக்கலாம்..!!”

கேஷுவலாக சொன்னவாறே.. அசோக் தூரத்தில் தெரிந்த ஒரு வீட்டை நோக்கி கை நீட்டினான்..!!

அதே நேரம்.. அவனுடைய கை நீண்டிருந்த அதே திசையில்.. அவனது விரல்கள் சுட்டிக்காட்டிய அதே வீட்டுக்குள்.. சிறிதாக தெரிந்த அந்த ஜன்னலின் வழியாக.. ஒரு ஜோடிக் கண்கள்.. இவர்கள் இருவரையுமே சற்று மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தன..!! அவை.. சாட்சாத்.. நமது கதாநாயகியின் கவின்மிகு கண்கள்தான்..!!

தும்பைப்பூவின் வண்ணத்துடன் மிக தூய்மையாகவே காட்சியளித்தது அந்த அறை..!! திரும்புகிற பக்கம் எங்கெங்கிலும்.. வெண்ணிறமே பொங்கி வழிந்தது அந்த அறையில்..!! வெள்ளி நிலவை வெட்டிக்கொணர்ந்து.. பாலீஷிட்டு பதித்திட்டமாதிரி.. தளத்தில் அணிவகுத்திருந்த டைல்ஸ்..!! கறந்த பாலை நிறமியாக்கி.. பெயிண்ட் என்ற பெயரில் தடவினார்களோ என தடுமாறும் அளவிற்கு.. சுவற்றிலும் ஸீலிங்கிலுமான வர்ணப்பூச்சு..!! சிறிய அறைதான்.. அதன் பெரும்பான்மையான பரப்பு வெறும்பான்மையாகவே காட்சியளித்தது..!! ஓரமாக கிடந்த படுக்கையும், சாய்வாக நின்றிருந்த இருக்கையும்.. வெண்ணிற விரிப்பையே வெளிப்புறம் போர்த்தியிருந்தன..!! வெண்மையான வெளிச்சத்தை மட்டுமே கசிவேனென்று.. ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தது மின்விளக்கொன்று..!! அந்த அறைக்குள் உலவித் திரிந்தால்.. உடைத்த தேங்காய்க்குள் ஊர்ந்து திரிகிற.. ஒரு கட்டெறும்பின் உணர்வு கிட்டுவது கட்டாயம்..!!

அறையின் நிறம் மட்டுமல்ல.. அதன் மையத்தில் அமர்ந்திருக்கிற.. மீராவுடைய அகத்தின் நிறமும் அஃதேதான்..!!

திரைச்சீலை விலகியிருந்த அறையின் ஜன்னல்.. கதிரவனின் வெளிச்சத்தையும், காலைநேர காற்றினையும்.. அறைக்குள் ஒருசேர அனுப்பிக்கொண்டிருந்தது..!! மீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்..!! வலது கால் இடது தொடையின் மீது.. இடது கால் வலது தொடையின் மீது.. தளிர்ப்பாதங்கள் இரண்டும் தடம்புரண்டு மேலே பார்த்தன..!! முழங்கால் தரையை தீண்டியிருக்க.. முதுகுத்தண்டு விறைப்பாய் நின்றிருக்க.. மூக்கு சீராக மூச்சினை வெளியிட்டது..!! இமைகள் விழிகள் மீது முழுமையாய் கவிழ்ந்திருந்தன.. இரண்டு கைகளும் மார்பின் குறுக்கே மையமாய் குவிந்திருந்தன..!! குழைவான இடுப்பின் சதைப்பிதுக்கத்தில்.. துளிர்த்திருந்த சில வியர்வை முத்துக்கள்.. ஜன்னல் வெளிச்சத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன..!! புஜங்கள் அணையிட்ட நெஞ்சத்தடாகத்தில்.. பூத்திருந்த இரு தாமரை மொக்குகள்.. விடுகிற மூச்சுக்கு விரிந்து கொண்டிருந்தன..!!

யோகா..!! ரத்த ஓட்டம் சீராகும்.. நல்ல சிந்தனை பெருகும்.. ப்ரெஷர் குறையும்.. டென்ஷன் கட்டுப்படும்.. இவையெல்லாம் யோகாவின் நன்மைகளாக கூறப்படுகின்றன.. அந்த நன்மைகள் எல்லா நேரமும் உண்மைகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை..!! யோகாவில் உளமாற ஈடுபடுபவர்களுக்குத்தான் அவை உண்மைகளே ஒழிய.. மீராவுடைய அழகு யோகாவை அருகிலிருந்து பார்க்கிற ஆடவருக்கு.. மேற்சொன்ன நான்கிற்கும் எதிர்ப்பதமான விளைவுகளே ஏற்பட நேரிடும்..!!

கடந்த ஒரு வருடமாகவே.. கலங்கிய குளமாய் அடிக்கடி மாறிப்போகிற மனதினை.. தெளிய வைத்து தேற்றிட.. மீரா அடிக்கடி தேர்ந்தெடுப்பது இந்த யோகாதான்..!! அறையின் நிறத்திலான அவளுடைய மனது.. இன்று ஏனோ அபரிமிதமான குழப்பத்துக்குள் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருந்தது..!! கொதிநிலை கூடிப்போன உலையிட்ட பானை.. திண்ணமான மூடியையும் தூக்கியெழுப்பி.. வெப்பமான குமிழ்களை உமிழுமே..?? அதுபோல.. குழம்பித் தவித்திட்ட மீராவின் உள்ளம்.. வன்மையான தியானத்துக்கும் கட்டுப்படாமல்.. வேதனையான நினைவுகளை வெளிக்கசிந்தது..!! அந்த நினைவுகள் எல்லாம்.. நிழற்படமாய் அவள் நெஞ்சிலே ஓடின..!!

“அப்பா ஏன்மா நம்ம கூடவே இருக்க மாட்டேன்றாரு..??” அஞ்சு வயது மீரா, ஏக்கம் மிகுந்த பிஞ்சு குரலில் அம்மாவிடம் கேட்டாள்.

“அ..அப்பாவால.. எப்பவும் நம்ம கூட இருக்க முடியாதுடா சின்னு.. அ..அவருக்கு.. வெளியூர்ல வேலை.. அதான்..!!”

மடியில் படுத்திருந்த மகளின்.. தலையை மெல்ல வருடியவாறே.. தடுமாற்றமாக சொன்னாள் நீலப்ரபா.. மீராவின் அம்மா..!! வைத்திருந்த பெயர் வேறானாலும்.. நீலப்ரபா தன் மகளை சின்னு என்று செல்லமாக அழைப்பதுதான் வழக்கம்..!!

“அப்பா அங்க எங்க படுத்துகுவாரு..??”

“அ..அங்க.. இன்னொரு வீடு இருக்குமா.. அங்க படுத்துப்பாரு..!!”

“ம்ம்.. நாமளும் அந்த வீட்டுக்கே போயிடுவமா..??”

“இ..இல்லடா சின்னு.. நா..நாம.. நாம அந்த வீட்டுக்கு போக முடியாது..!!” – நீலப்ரபாவிடம் ஒரு பதற்றம்

“ஏன்மா..??”

“அ..அது அப்படித்தான்..!! சொன்னா உனக்கு புரியாது..!!”

அதற்குமேலும் அம்மாவிடம் குறுக்கு கேள்வி கேட்கிற அளவுக்கு.. ஐந்து வயது மீராவுக்கு அப்போது அறிவில்லை..!! தெளிவாக புரியாவிட்டாலும்.. அம்மா சொன்ன வார்த்தைகளை, அப்படியேதான் நம்பினாள்..!! அவளுக்கு அப்போது தெரியாது.. அப்பாவுக்கு தன் அம்மா வைப்பாட்டியாக வாழ்கிறாள் என்பதும்.. அவரால் இந்த வீட்டுக்கு வாரத்துக்கு ஒருமுறைதான் வந்து செல்லமுடியும் என்பதும்..!!

Updated: June 15, 2021 — 1:04 pm