எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 65

அம்மா தன்னை விட்டுச்சென்ற நினைவுகள்.. மீராவின் தலைக்குள் உளி கொண்டு அடித்தாற்போல் இறங்க.. மூடியிருந்த அவளது கண்கள் மெல்ல சுருங்கியன.. முகம் இறுகியது.. உதடுகள் படபடவென துடித்தன.. அவற்றை பற்களால் அழுத்தி கடித்துக்கொண்டு.. மூச்சை ஒருமுறை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றி.. அலைபாய்கிற மனதை மீண்டும் தியானத்துக்குள் திருப்ப முயன்றாள்..!!

மனம் அவளுக்கு கட்டுப்பட மறுத்தது.. மொத்த நினைவுகளையும் கன்னாபின்னாவென்று படம் ஓட்டிக்காட்டிட விழைந்தது..!!

அம்மா தவறியதற்கு நான்காம் நாள் அசோக்குடன் செலவழித்த அந்த இரவின் நினைவு..!!

“ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!” – போதையில் சுழல்கிற தலையுடன் மீரா.

“என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??” – கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்.

“தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!”

அசோக்கின் நினைவு வந்ததுமே.. பற்றி எரிகிற அவளுடைய இருதயத்தில்.. திடீரென தென்றல் வீசிட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு..!! அவளையும் அறியாமல்.. அவளது உதடுகள்.. ‘அசோக்..’ என்று மெல்ல முனகின.!!

அதே இரவில்.. அந்த ஹோட்டல் அறையில்..

“என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!” – ஏக்கமான குரலில் மீரா.

“நான் இருக்கேன்டா.. நான் இருக்கேன் உனக்கு..!!” – ஆறுதலான குரலில் அசோக்.

“இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!”

“ஹையோ.. நான்தான் சொல்றேன்ல..?? சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??”

‘அசோக்.. என் அசோக்..!! எவ்வளவு நல்லவன் நீ..?? எவனோ ஒரு கொடியவன், நண்பர்களுடன் சவால் விட்டு என்னை சிதைத்தான் என்று.. உன்னை எந்த அளவிற்கு அலைக்கழித்தேன்..?? எப்படியெல்லாம் உன்னை அவமானப் படுத்தினேன்..?? எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு.. என் மீது உண்மையான காதலை பொழிந்தாயே..?? ஆண்கள் எல்லாம் அரவங்கள் என்றிருந்தவளை.. உனது அன்பின் முன்னால் தோற்றுப்போக வைத்தாயே..??’

‘பாவி நான்.. உன்னோடு வாழ்கிற பாக்கியம் எனக்கு இல்லாமல் போனதே..!! அப்பழுக்கற்ற உன் நேசத்துக்கு.. சிறுகாணிக்கை என்று தருகிற அளவிற்கு.. அந்த கற்பும் கூட என்னிடம் இல்லாமல் போனதே..??’

அசோக்கின் நினைவில் மூழ்கியவளை.. அதற்குள்ளாகவே அந்த அரக்கனின் நினைவு வந்து இம்சித்தது..!!

“It’s just matter of one rupee..!!” – கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தான் அவன்.

“உயிரை விட நான் உன்னை அதிகமா நேசிக்கிறேன்.. நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன்..!!” – மனதுக்குள் மீண்டும் வந்த அசோக், ஏரிப்பாலத்தின் மீது நின்றவாறு சொன்னான்.

“உன் அழகை பாத்ததும்.. எனக்கு ஆசை வந்துடுச்சு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. It’s just happened..!!” – அவன்

“ஹையோ..!! நைட்டு என் ட்ரஸ் ஃபுல்லா நீ வாமிட் பண்ணிட்ட.. போதுமா..?? பயங்கர ஸ்மெல்.. அதோட எப்படி படுக்குறது.. அதான் அலசி காயப்போட்டுட்டு படுத்திருந்தேன்..!!” – இது அசோக்.

அவளது வெற்று முதுகில் முகம் தேய்க்கிற அந்த அரக்கன்..!! தரையில் ஜட்டியுடன் அப்பாவியாக படுத்திருக்கிற அசோக்..!!

Updated: June 15, 2021 — 1:04 pm