எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 13 65

அந்த சிலையில் இருந்து பார்வையை மெல்ல விலக்கிக்கொண்டவள்.. கொஞ்சமாய் மேடிட்டிருந்த தனது வயிறை ஒருமுறை தடவிப்பார்த்தாள்..!! பிறகு.. மதுசூதனனை ஏறிட்டு.. கண்ணீரில் மிதக்கிற கண்களுடனும்.. முற்றிலும் ஜீவன் வற்றிப்போன குரலுடனும்.. மூக்கு விசும்ப சொன்னாள்..!!

“ம்ம்..!!”

மதுசூதனனின் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை.. டெலிபோன் எடுத்து டயல் செய்து.. தனது கார் ட்ரைவரை வரவழைத்தான்..!!

கட்டிய மனைவி மீது பற்றில்லாத மதுசூதனனுக்கோ.. படுக்கைக்கு ஓர் ஆள் தேவைப்பட்டது..!! கருவிலிருக்கும் சிசு மீது பரிவு கொண்ட நீலப்ரபாவுக்கோ.. பாதுகாப்புக்கு ஓர் ஆள் தேவைப்பட்டது..!! இருவரும் அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.. இருவரும் அந்த ஒப்பத்தந்துக்கு இறுதி வரை உண்மையாகவே இருந்தனர்.. இருவரும் ஒருவருடைய தேவையை அடுத்தவர், எந்தக்குறையும் இல்லாமல் இறுதிவரை நிறைவேற்றவே செய்தனர்..!!

கருப்பையில் இருந்து வெளியே வந்த மீராவுக்குத்தான்.. அவளுடைய பிறப்பில் இருந்தே.. அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு நாளும் துயரத்தை தந்தது.. ஒருவித துர்ப்பாக்கியமான நிலைக்கு அவளுடைய வாழ்வை தள்ளியது..!! மீரா எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி என்பதற்கு.. அவளது பிறப்பு சான்றிதழே.. மிக சிறப்பான சான்று..!!

“அப்பா பேர் என்னங்க..??” மீராவை முதன்முதலாய் கையில் ஏந்திய அந்த நர்ஸ், பிறகு பதிவேட்டை ஏந்திக்கொண்டு கேட்டதற்கு,

“மாணிக்கவாசகம்..!!” சிறு உறுத்தல் கூட இல்லாமல், மிக இயல்பாக சொன்னான் மதுசூதனன்.

அப்படித்தான்.. அந்த மாதிரிதான்.. மீரா பிறக்கையிலேயே.. துயரமும் அவளுடன் சேர்ந்து பிறந்தது.. பிறகு வாழ்நாள் முழுக்க அவளை துரத்தி துரத்தி அடித்தது..!! சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் இல்லாமல்.. அவள் அனுபவித்த வேதனையின் வீரியம் அவளுக்கு மட்டுமே புரியும்..!!

“பேசாம.. என்னை கருவுலேயே அழிச்சிருக்கலாமேமா.. உனக்கும் பிரச்சினை இருந்திருக்காது.. எனக்கும் பிரச்சினை இருந்திருக்காது..!!”

அதே அம்மாவின் மடியில்.. பருவ வயதடைந்திருந்த அதே மீரா படுத்துக்கொண்டு.. விழிகளில் நீருடனும், குரலில் வேதனையுடனும்.. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு சொன்னது.. இப்போது யோகாவிலிருக்கிறவளின் மனதை குறுக்கிட்டது..!!

சிறுவயதில் மகள் கேட்கிற கேள்விக்கெல்லாம்.. ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைத்து விடுகிற நீலப்ரபா.. இப்போது வயதும், அறிவும் வளர்ந்த மகளின் வேதனையான வார்த்தைகளுக்கு.. தான் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்..!! குற்ற உணர்வு அவளை பிய்த்து தின்ன.. முணுக்கென்று கண்ணீர் மட்டும் சிந்தினாள்..!!

“அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!”

நீலப்ரபாவின் குரல் திடீரென காதுக்குள் ஒலிக்க.. தியானத்தில் இருந்த மீராவிடம் ஒரு சிறு அசைவு.. அவள் நெற்றியில் மெலிதான சுருக்கம்..!! அம்மாவுடைய ஓலம் அவளுடைய மனதை பிசைந்து ஏதோ செய்தது..!!

“அம்மா..!!” என்று மெலிதாக முனகினாள்.

பிறந்தது முதலே மீராவுக்கு அம்மாதான் எல்லாமே..!! வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருகிற.. அப்படி வருகிறபோதும் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசாத அப்பாவின் மீது.. அவளுக்கு அவ்வளவாக ஒட்டுதல் இல்லை..!! அதுவும்.. அவளுக்கு சற்று விவரம் தெரிந்து, அவள் பள்ளி பயிலுகிற காலத்தில் ஒருநாள்..

“அவகிட்ட தெளிவா சொல்லி வையி.. அங்க போயி நான்தான் அவ அப்பான்னு உளறி கிளறி வைக்கப்போறா..!!”

அறைக்குள் அம்மாவிடம் அப்பா சொன்னது.. இவள் காதில் விழ நேர்ந்தது..!! அந்த வார்த்தைகளை கேட்டு அவள் எந்த மாதிரி துடித்துப் போயிருப்பாள் என்பதை.. என்னாலோ, உங்களாலோ எளிதில் புரிந்து கொள்ள முடியாது..!! அதன்பிறகு.. அப்பா மீதிருந்த கொஞ்சநஞ்ச அன்பும் அவளிடம் சுத்தமாக காணாமல் போனது..!!

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையிலான அந்த ஒப்பந்தத்தால்.. மீரா இழந்தது சமூக அங்கீகாரத்தை மட்டும் அல்ல.. அதனுடன் தொடர்புடைய நிறைய விஷயங்களை.. சின்ன சின்ன சந்தோஷங்களை.. குறிப்பாக.. விலைமதிப்பற்ற குழந்தைப்பருவ குதுகலங்களை..!!

கடந்த ஒருவருடமாகத்தான் மீராவிடம் மனதளவில் பெரிதளவிலான மாற்றம்..!! ஏற்கனவே வலுவற்றிருந்த அவளது வாழ்க்கையை.. சம்மட்டியால் அடித்து நொறுக்கிய அந்த சம்பவத்தின் பிறகேதான்.. மீராவிடம் நிறைய மாற்றங்கள்..!! தைரியமும், துணிச்சலும், நெஞ்சுரமும்.. அதேநேரம் மனதில் தீராத்துயரமும் கொண்ட பெண்ணாக மாறிப்போனாள்..!!

அதற்கு முன்பெல்லாம்.. மீரா ஒரு அப்பாவி.. யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள்..!! அதிர்ந்தென்ன.. யாரிடமும் பேசவே மாட்டாள் என்றே கூட வைத்துக் கொள்ளலாம்..!! அந்த அளவிற்கு.. யாரிடமும் நட்பு கொள்ளாத.. தனித்து திரிகிற ஒருத்தி..!! அதுவும் அவளுடைய சிறு வயதில்..

“நானும் வெளையாட வரவா..??” ஏழு வயது மீரா மிக ஏக்கமாக கேட்டாள்.

Updated: June 15, 2021 — 1:04 pm