எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

“ஹையோ.. எ..என்ன பாட்டி இது.. ப்ளீஸ்.. வேணா..”

“இல்ல இல்ல.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. மொத மொறையா வீட்டுக்கு வந்திருக்குற.. உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு பாட்டிக்கு ஆசை இருக்காதா..?? ம்ம்..??”

“பாட்டி ரொம்ப ஆசைப்பட்டு தர்றா.. வேணான்னு சொல்லக்கூடாது மீராக்கண்ணு.. போட்டுக்கோ..!!”

கோமளவல்லியோடு சேர்ந்து நாராயணசாமியும் மீராவை வற்புறுத்த, வேறு வழி இல்லாமல் மீரா அந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டி இருந்தது. பளிச்சிடுகிற சிறுசிறு வெண்ணிற கற்கள் பாதிக்கப்பட்டு.. பளபளத்த அந்த மோதிரத்தை.. பார்த்துக்கொண்டே இருந்த மீராவுக்கு.. அவளையும் அறியாமல் கண்கள் பனித்துக் கொண்டன..!!

கொஞ்ச நேரத்திலேயே சங்கீதா பாட்டியின் அறைக்குள் கடுகடுத்த முகத்துடன் நுழைந்தாள்.

“போதும் போதும்.. ஆளாளுக்கு பேசி அண்ணியை மொக்கை மேல மொக்கை போட்டது..!! இன்னும் ஒரு மணி நேரத்துக்கு என்னோட கோட்டா.. அண்ணியை என் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்.. யாரும் எங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்..!!” என்றவாறே உள்ளே வந்தவள், மீராவை நெருங்கி உரிமையாக அவளுடைய கையை பிடித்து எழுப்பினாள்.

“வாங்க அண்ணி.. என் ரூமுக்கு போகலாம்..!! உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு எக்கச்சக்கமான மேட்டர் இருக்குது..!!”

மீரா சங்கீதாவுடன் அவளுடைய அறைக்கு நடந்தாள். ‘பேசுறதுக்கு’ என்று சங்கீதா சொன்னது தவறு.. ‘பாடுறதுக்கு’ என்று சொல்லியிருக்க வேண்டும்..!! தன்னுடைய லேப்டாப் திறந்து.. தான் தயாரித்து வைத்திருந்த வாய்ஸ் ஆல்பத்தை.. மீராவுக்கு போட்டுக் காட்டினாள்..!!

“ஹெட்ஃபோன் போட்டுக்கங்க அண்ணி.. அப்போத்தான் க்ளியரா இருக்கும்..!!”

சங்கீதாவே மீராவுக்கு ஹெட்ஃபோன் மாட்டி விட்டாள். Folk, Hindustani, Carnatic, Western என.. விதவிதமாய் தனது குரல் திறமையை கொட்டி.. இசையுடன் சேர்த்து பாடி வைத்த பாடல்களை எல்லாம்.. ஒவ்வொன்றாக ஓடவிட்டாள்..!! சங்கீதாவின் அறையில் மீரா இருந்த முக்கால்வாசி நேரம்.. அவளுடைய பாடலைக் கேட்பதிலேயே கழிந்து போனது..!!

“இதை கேளுங்க அண்ணி.. இது ரொம்ப நல்லா இருக்கும்..!! பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஆலாபனை பண்ணிருப்பேன்.. அதுதான் ரொம்ப ஸ்பெஷல்.. கேட்டுப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!!”

ஹெட்ஃபோனில் கசிகிற சங்கீதாவின் குரலை மீரா ரசிக்க.. தனது குரலை ரசிக்கிற அண்ணியின் முகபாவனையையே சங்கீதா ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! பாடலை கேட்டு முடிந்ததும்..

“எப்படி அண்ணி இருக்கு..??” சங்கீதா ஆர்வமாக கேட்க,

“சான்ஸே இல்ல.. லவ்லி வாய்ஸ் உனக்கு..!!” மீரா மனம் திறந்து பாராட்டினாள்.

“ரியல்லி..?? பிடிச்சிருக்கா உங்களுக்கு..??” சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. க்ரேட்..!!!”

“தேங்க்யூ அண்ணி.. தேங்க்யூ ஸோ மச்..!!”

“ஹ்ம்ம்.. நீ இவ்வளவு நல்லா பாடுற.. அசோக் உன் வாய்ஸ் பத்தி என்னல்லாம் சொல்லிருக்கான் தெரியுமா..?? அவனுக்கு ரசனையே இல்ல சங்கி.. சுத்த வேஸ்ட்டு..!!”

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.