எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 10 38

“எப்போவுமே ஃபர்ஸ்ட் கிஸ் ரொம்ப ஸ்பெஷல்தான்.. இல்ல..??”

அவ்வளவுதான்..!! மீராவுக்கு சுரீர் என்று இருந்தது..!! மயக்கத்தில் செருகியிருந்த அவளது விழிகள் ரெண்டும்.. இப்போது படக்கென்று இமைகள் திறந்தன..!! அசோக்கின் மார்மீது இரண்டு கைகளையும் வைத்து.. அவனை சரக்கென்று தள்ளிவிட்டாள்..!! முகமெல்லாம் அவளுக்கு வெளிறிப் போயிருக்க.. கண்கள் ஒரு மிரட்சியுடன் அகலமாய் விரிந்திருந்தன.. முத்தமிட்டு களைத்திருந்த உதடுகள் இப்போது வெடவெடத்தன.. மார்புகள் குபுக் குபுக்கென சுருங்கி விரிந்தன..!! எதையோ பார்த்து பயந்துவிட்டவள் மாதிரியான ஒரு முகபாவம்..!! அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!!

“ஹேய்.. மீரா.. என்னாச்சு..??”

மீரா பதில் ஏதும் பேசவில்லை. அசோக்கின் முகத்தையே மலங்க மலங்க பரிதாபமாக பார்த்தாள்..!! முணுக்கென்று அவளுடைய கண்களில் நீர் பூத்தது.. சர்ரென்று அவளது கன்னங்கள் நனைத்து ஓடியது..!! அசோக் பதறிப் போனான்..!!

“ஐயோ.. மீரா.. என்னம்மா.. என்னாச்சு..??”

என்றவாறே அவளுடைய கன்னத்தை பற்றினான். மீரா அவனது கையை வெடுக்கென தட்டிவிட்டாள். இப்போது அசோக்கின் இதயம் துடிதுடித்து போனது.

“என்னடா.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??”

“……..”

“நா..நான்.. நான் கிஸ் பண்ணது தப்பா..??” அசோக்கின் ஏக்கமான கேள்விக்கு, மீரா இப்போது பதில் சொன்னாள்.

“இல்ல.. நான் கிஸ் பண்ணது தப்பு..!!”

“எ..என்ன.. என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்..??”

அசோக் புரியாமல் கேட்க, மீரா அவனுக்கு பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாய்.. அவசரமாக அவளது விழிநீரை துடைத்துக் கொண்டாள்..!! மூக்கை மெல்ல விசும்பிக்கொண்டு.. அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்..!! மிகவும் கஷ்டப்பட்டு.. ஒரு புன்னகையை சிந்த முயன்றாள்..!! பிறகு உடைந்து போன குரலில்..

“நா..நான் கெளம்புறேன் அசோக்.. எ..எனக்கு வேலை இருக்கு.. நாளைக்கு பாக்கலாம்..!!” என்றவள்,

அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், திரும்பி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் எதுவுமே புரியாமல்.. அவள் அறையை விட்டு வெளியேறுவதையே பார்த்தவாறு.. உறைந்து போய் நின்றிருந்தான்..!!

அடிவயிற்றில் சென்ஸார் தாங்கியிருந்த அந்த நீர்க்குழாய்.. அசோக்கின் கைகள் குறுக்காக வந்ததுமே.. சரியாக புரிந்துகொண்டு சர்ரென நீர்க்கற்றையை கொட்டியது..!! கைகளை முதலில் கழுவிக்கொண்ட அசோக்.. பிறகு கழுவிய கைகளில் கொஞ்சமாய் நீர் தேக்கி.. வாயும் கொப்பளித்துக் கொண்டான்..!! டிஷ்யூ பேப்பர் உருவி, கைகளை துடைத்துக்கொண்டே.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை கவனமாக பார்த்தான்..!! சற்றே கலைந்து ஒதுங்கியிருந்த முடிக்கற்றையை.. கைவிரல்களாலேயே ஒழுங்கு படுத்திக் கொண்டான்..!! சுருட்டப்பட்ட டிஷ்யூ பேப்பரை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு.. விருட்டென வாஷ்ரூம் கதவு திறந்து வெளியேறினான்..!!

மாலைநேரம் அது.. மஞ்சள்நிற நியான் விளக்குகளை ஸீலிங்கில் தாங்கிய காரிடார் அது.. கால்களை கவ்வியிருந்த கேன்வாஸ் ஷூ, டைல்ஸ் தளத்தில் அழுந்தி ‘டக்.. டக்..’ என சப்தம் எழுப்ப.. கைவிரல்கள் கோர்த்து சொடுக்கெடுத்தவாறே அசோக் மெல்ல நடந்தான்..!! சிறிது தூரம் நடந்து இடப்பக்கம் திரும்பியதுமே.. ஃபுட்கோர்ட்டின் அந்த விஸ்தாரமான மையப்பகுதி பார்வைக்கு வந்தது..!! தூரத்தில் மீரா தெரிந்தாள்.. அவள் வழக்கமாக அமர்கிற அதே டேபிளில்.. கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.. அவளை நோக்கி நடந்து செல்கிற இவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு எதிரே கிடந்த சேரில் சென்று இவன் அமர்ந்ததுமே.. அவளை ஏறிட்டு அவசரமாக சொன்னான்..!!

“ம்ம்.. சாப்பிட்டும் முடிச்சாச்சு.. இப்போவாவது சொல்லு..!!”

“ஜூஸ் இன்னும் மிச்சம் இருக்கே..??”

மீரா கூலாக டேபிளை கைகாட்ட, அசோக் இப்போது அவளுடைய முகத்தை கூர்மையாக பார்த்து ஒரு முறை முறைத்தான். ‘ஹ்ம்ம்..’ என்று ஒரு சலிப்பு மூச்சு விட்டுக்கொண்டான். பிறகு ஜூஸ் தம்ளர் எடுத்து, கடகடவென மொத்த ஜூஸையும் ஒரே மடக்கில் அருந்தி முடித்தான். காலியாகிப்போன கண்ணாடி தம்ளரை ‘படார்’ என்று டேபிளில் வைத்தவாறு, பொறுமையற்றவனாய் கேட்டான்.

“ம்ம்.. போதுமா..? ஜூஸும் ஓவர்..!! இப்போ சொல்லு..!!”

“என்ன சொல்லனும்..??” அவள் குரலில் தெரிந்த ஒரு விளையாட்டுத்தானம் அசோக்கை இப்போது எரிச்சலாக்கியது.

“ப்ச்.. வெளையாடாத மீரா..!! காலைல இருந்து நானும் திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்குறேன்.. நீயும் சும்மா சும்மா பேச்சை மாத்துறதுலயே குறியா இருக்குற.. நான் கேட்டதுக்கு இதுவரை பதிலே சொல்லல..!! இப்போ வந்து ஒன்னுந்தெரியாத மாதிரி ‘என்ன சொல்லனும்’னு கேட்டா என்ன அர்த்தம்..?? என்னைப் பாத்தா எப்படி தெரியுது உனக்கு..??”

“ம்ம்..?? ஜூஸ் சாப்பிட்டுட்டு.. வாயை தொடைக்காதவன் மாதிரி தெரியுது..!!”

குறும்பாக சொன்ன மீரா, கையிலிருந்த அவளுடைய கர்ச்சீஃபை அசோக்கின் வாய்க்கருகே கொண்டு செல்ல, அவன் அவளுடைய கையை பட்டென தட்டி விட்டான். தனது புறங்கையாலேயே உதட்டை துடைத்துக்கொண்டவன், சற்றே எரிச்சலான குரலில்..

“Be serious Meera.. Please..!!” என்றான்.

1 Comment

  1. ?❤️❤️❤️❤️❤️❤️???

Comments are closed.