ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 2 49

ஆர்டர் செய்த ஐட்டங்கள் வந்து சேர்ந்தன. பட்டர் நாண்.. பேபிகார்ன் கேப்சிகம் மசாலா.. தந்தூரி பன்னீர்..!! பொதுவாக எதோ பேசிக்கொண்டே, பொறுமையாக சாப்பிட ஆரம்பித்தோம். நான் முதலில் நாணை பேபிகார்ன் மசாலாவில் நனைத்து சாப்பிட்டேன். பாதி நாண் சாப்பிட்டுவிட்டு, தந்தூரி பன்னீரில் ஒரு துண்டை எடுத்து என் வாயில் போட்டபோது, ‘ஹாய்…. அசோக்…!!!!!!!!!!!’ என்று அலறிக்கொண்டே ஓடி வந்த அந்த பெண், அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, அவருடைய தோளில் கை போட்டாள்..!! அவ்வளவுதான்..!! அதைப் பார்த்த எனக்கு.. ஜிவ்வென்று ஒரு பொசஸிவ் ரத்தம் உடனடியாய் உற்பத்தி ஆகி, உடலெங்கும் தறி கேட்டு ஓட ஆரம்பித்தது..!!

“ஹே..ஹேய்… லா..லாவண்யா…!! எப்படி இருக்க..?” என இப்போது அசோக்கும் ஆச்சரியப்பட்டார்.

“நான் நல்லாருக்கேன்பா.. நீ எப்படி இருக்க..?”

“ம்ம்.. ஐ’ம் குட்..!! அ..அப்புறம்.. நீ.. நீ.. எப்டி இங்க..?” அவர் திக்கி திணறி கேட்டார்.

“என்னது..??? அதை நான் கேக்கணும்..!!!”

“என்ன சொல்ற..?”

“ஆமாம்..!!! நீ உக்காந்திருக்குற இந்த சேர்.. இந்த டேபிள்.. ப்ளேட்.. நீ கைல வச்சிருக்குற அந்த ஸ்பூன் மொதக்கொண்டு.. எல்லாம் என்னோட ப்ராப்பர்ட்டி..!!” அவள் பெருமையாக சொன்னாள்.

“லா..லாவண்யா.. அ..அப்போ..”

“எஸ்.. இந்த ரெஸ்டாரன்ட்.. ரிசார்ட்.. எல்லாத்துக்கும் நான்தான்பா ஓனர்.!! அப்பா பாத்துட்டு இருந்தார்.. இப்போ ரெண்டு வருஷமா நான்தான் மேனேஜ் பண்ணிட்டு இருக்குறேன்..!!”

“வாவ்…!! ஐ கான்’ட் பிலீவ் திஸ்..!!”

“ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஓகே.. இப்போ சொல்லு..!! நீ எப்டி இங்க..?”

“அ…அது…” என்று திணறிய அசோக், பட்டென ஞாபகம் வந்தவராய் என் பக்கம் திரும்பி கை நீட்டினார்.

“இ..இது.. இது என் வொய்ஃப் பவித்ரா..!!”

“ஓ..!! ஹனிமூனா..?”

அவள் பட்டென புரிந்து கொண்டாள். அதுமட்டுமல்ல.. அதுவரை அவருடைய தோள் மீது கிடந்த அவளுடைய கையும் இப்போது மெல்ல மெல்ல கீழே நழுவியது. ஆனால் இன்னும் அவரை நெருக்கியடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள்.

“ஹாய்…” என்றாள் என்னை பார்த்து வாயெல்லாம் பல்லாக.

“ஹாய்..” என்றேன் நானும் வேண்டா வெறுப்பாக.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. அசோக்குக்கு.. ரொம்ப பொருத்தமா..”

“ம்ம்.. தேங்க்ஸ்..!!”

“ஹ்ஹ்ஹா.. என்னால நம்பவே முடியலை தெரியுமா..? நீங்க என்னோட ரிசார்ட்டுக்கு.. ஹனிமூன் கொண்டாட.. வாவ்..!!!” என்று அதிசயித்தாள்.

“ம்ம்ம்..”

“பை தி வே.. ஐம் லாவண்யா.. காலேஜ்ல அசோக்கோட க்ளாஸ்மேட்..”

“ஓ..”

“நானும் அசோக்கும் காலேஜ்ல ரொம்ப க்ளோஸ்.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்காத லூட்டியே இல்ல.. பண்ணாத சேட்டையே இல்ல… ஹ்ஹ்ஹ்ஹா…!!”

“ஓ..”

“காலேஜ்ல அசோக் ரொம்ப பாப்புலர் தெரியுமா..? லைக் எ ஹீரோ… ஹ்ஹஹ்ஹ்ஹா..!!”

“ம்ம்ம்..”

“ம்ம்ம்ம்.. ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து தேர்ட் இயர் வரை.. ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாதான் போவோம்.. ஒண்ணாதான் சாப்பிடுவோம்.. என்ன செஞ்சாலும் ஒண்ணாதான் செய்வோம்.. ஒண்ணாதான்..” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

“ஃபைனல் இயர்ல என்னாச்சு..?” என நான் பட்டென கேட்க, அவள் பக்கென அதிர்ந்து போனாள். அந்த கேள்வியை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை போலும்.

“அ..அது… அது…” என வார்த்தை வராமல் திணறினாள். பரிதாபமாக அசோக்கை திரும்பி பார்த்தாள். இப்போது அவர் திணறினார்.

“அ..அது… அது…” என்று சற்று திக்கியவர், பின்பு சமாளித்து,

“அது.. எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன சண்டை…” என்றார்.

“ஆ..ஆமாம்.. சண்டை..” என்றாள் இப்போது அவளும்.

“என்ன சண்டை..?”

“ஆ..ஆமாம்… என்ன சண்டை..?” இப்போது அவள் மீண்டும் அவரை பார்த்தாள்.

“அ..அது.. ஏதோ.. சில்லித்தனமா.. என்ன சண்டைன்னு இப்போ ஞாபகம் கூட இல்ல.. மறந்தே போச்சு..” என அவர் சொன்னதும்,

“ஆ..ஆமாம்.. மறந்தே போச்சு..!!” என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து இளித்தவாறு.

“ஓஹோ..???” என்றேன் நான், அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்ததை குரலில் காட்டிக் கொள்ளாமல்.

அப்புறம் சில வினாடிகள் அங்கே ஒரு நிசப்தம். யாரும் எதுவும் பேசவில்லை. அப்புறம் அந்த லாவண்யாதான் புதிதாய் உற்சாகம் கிளம்பியவளாய்,

“ஹேய்.. அசோக்.. சங்கீதா யூ.எஸ். போயிட்டாளாமே.. உனக்கு தெரியுமா..?” என்று அவரிடம் கேட்டாள்.

“ம்ம்.. தெரியுமே..”

“அவ காண்டாக்ட் இருக்கா..? போன் நம்பர்.. மெயில் ஐடி..?”

“போன் நம்பர் இல்ல.. மெயில் ஐடி தெரியும்..”

“சொல்லு சொல்லு..”

அப்புறம் கொஞ்ச நேரம் அவர்கள் தங்கள் கல்லூரி கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டுகொள்ளவில்லை. அவள் வாய் நிறைய சிரிப்புடன்.. முன் வந்து விழுந்த கூந்தலை அவ்வப்போது ஸ்டைலாக ஒதுக்கி விட்டுக்கொண்டு.. அடிக்கடி அவளுடைய கை அவருடைய தொடையில் படியுமாறு..!! எனக்கு சாப்பாடு சுத்தமாக இறங்கவில்லை. பட்டர் நாண் தொண்டையில் சிக்கிக்கொண்ட மாதிரி உணர்வு..!! பாதி சாப்பிட்டதோடு எழுந்தேன்.

“ஹேய் பவி.. என்னாச்சு..? போதுமா..?” அசோக் கேட்டார்.

“போதும்.. முடியலை..!!”

சொல்லிவிட்டு நான் விறுவிறுவென நடந்தேன். ஹேன்ட் வாஷ் ஏரியாவிற்கு விரைந்தேன். வாஷ் பேசினில் கைகள் நீட்டி கழுவிக்கொண்டே, கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தை பார்க்க எனக்கே சகிக்கவில்லை..!! கோபமும், ஆத்திரமும், எரிச்சலும் என சிவந்து களையிழந்திருந்தது. சில வினாடிகள்..!! பின்னர் அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தவள், நான்கைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பேன். பக்கென அதிர்ந்து போய் அப்படியே நின்றேன்.

அங்கிருந்து அவர்கள் இருவருடைய பின்னந்தலைகள் மட்டுமே தெரிந்தன.. வெகு நெருக்கமாக..!! என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்..? அவளுடைய காதில் ஏதும் ரகசியம் சொல்கிறாரா..? இல்லை.. கன்னத்தில் முத்தமிடுகிறாரா..? ஐயோ.. கடவுளே..!! நான் பரபரப்பாய், காலில் புது வேகம் வந்தவளாய் அவர்களை நோக்கி நடந்தேன். அவர்களுடைய தலைகள் இப்போது விலகின. அவர்களை நான் நெருங்கும்போது,

“நம்பர் சொல்லு.. நைட்டு நான் கால் பண்றேன்..”

என்று அவர் சொன்னது தெள்ளத்தெளிவாக என் காதில் விழுந்தது. உச்சந்தலையில் இடி இறங்கியது மாதிரி இருந்தது எனக்கு..!! உடலில் வலுவிழந்து சோர்ந்து போனவளாய் நான் சேரில் சென்று அமர்ந்தேன். லாவண்யா நம்பர் சொல்ல, அவர் செல்போனில் சேகரித்துக் கொண்டார். அப்புறம் இருவரும் ஒன்றாக என்னை நிமிர்ந்து பார்த்தனர். எதுவுமே நடவாத மாதிரி இளித்தனர்.

“வேற ஏதாவது சாப்பிடுறியா பவி..” என்று கேட்ட என் கணவரிடம்,

“வேணாம்.. கெளம்பலாம்..” என்றேன் வெறுப்பாக.

ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே வந்தோம். நான் அவரிடம் எதுவும் பேசாமல் விடுவிடுவென எங்கள் அறையை நோக்கி விரைந்தேன். ‘பவி.. பவி.. என்னாச்சு..?’ என்ற என் கணவரின் குரலை மதியாமல் வேகமாக நடந்தேன். அறையை திறந்து உள்ளே ஓடினேன். மெத்தையில் சென்று தொப்பென விழுந்தேன். கொஞ்ச நேரத்தில் அவரும் எனக்கு அருகில் வந்து படுத்தார். ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இறுக்கியபடி,

“என்னாச்சு பவி..?” என்றார் மென்மையாக.

“அதை நான் கேட்கனும்.. என்னாச்சுன்னு நீங்க சொல்லுங்க..” என்றேன் நான் சீற்றமாக.

“நான் சொல்லனுமா..?”

“ஆமாம்..!! சொல்லுங்க.. என்னாச்சு..?”

“எது என்னாச்சு..?”

“ம்ம்ம்ம்…??? ஃபைனல் இயர்ல என்னாச்சு..?” நான் நறுக்கு தெறித்தாற்போல கேட்டேன்.

“அ..அது… அ..அதான் சொன்னனே.. சின்ன சண்டை..” அவர் மீண்டும் சமாளிக்க முயல,

“பொய் சொல்லாதீங்கப்பா..!!”