ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 2 49

“ம்ம்ம்ம்.. நீயும் இன்னைக்கு ஒருநாள் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி.. உடம்பை நல்ல கண்டிஷன்ல வச்சுக்கோ..!! ரெண்டு நாள் உனக்கு நெறைய வேலை இருக்கும்..!!”

“என்ன வேலை..?” நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்க,

“ம்ம்ம்ம்… என் அடில படுத்து அடி வாங்குற வேலை..!!”

“ச்ச்சீய்ய்ய்..!!!”

நான் வெட்கப் பட்டேன். ஆனால்.. அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.. ஆசையாக..!! இரண்டு நாட்கள் அனுபவிக்கப் போகும் இன்பத்தை, இதயம் இப்போதே இமேஜின் செய்ய ஆரம்பித்திருந்தது. அவருடைய விரல்கள் கீபோர்டில் தடதடத்துக் கொண்டிருக்க, எனது விரல்கள் அவருடைய மார்பை தடவிக்கொண்டிருந்தன. மார்புக்காம்பை தட்டின. நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன்.

“ரெண்டு நாள் முன்னாடி உங்க அத்தை பொண்ணு வந்திருந்தாங்க..”

“எனக்கு நெறைய அத்தைங்க இருக்குறாங்க.. எல்லா அத்தைக்கும் நெறைய பொண்ணுங்க இருக்குறாங்க.. யாரை சொல்ற நீ..?” அவர் என்பக்கம் முகம் திருப்பாமலே கேட்டார்.

“அவங்கதான்.. சுஜி..!!”

“ஓ.. சுஜியா..? வந்திருந்தாளா இங்க..? என்ன சொன்னா..? எக்சாம்லாம் நல்லா எழுதினாளாமா..?”

“ம்ம்ம்..”

அப்புறம் கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை. ஆர்வமாக லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.

“வீணா சொன்னா.. அவங்களைத்தான் ஆரம்பத்துல உங்களுக்கு முடிக்கிற மாதிரி.. வீட்டுல நெனச்சிருந்தாங்களாமே..?”

“ஆமாம்..”

“அப்புறம் என்னாச்சு..?”

“அதை சொல்லலையா அவ..? எங்க ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்தலை..!! மாமா வேணான்னு சொல்லிட்டாரு..”

“ம்ம்..” நான் மேலும் சிலவினாடிகள் அமைதியாயிருந்து விட்டு, பின்பு தயங்கி தயங்கி அவரிடம் சொன்னேன்.

“ஒ..ஒருவேளை ஜாதகம் பொருந்திருந்தா.. இ..இப்போ நான் இருக்குற எடத்துல அவங்க இருந்திருப்பாங்க.. இல்ல..?”

இப்போது அசோக் பட்டென திரும்பி என்னை பார்த்தார். புருவங்களை சுருக்கி, என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேட்டார்.

“என்ன சொல்ல வர்ற நீ..?”

“இல்ல.. உ..உங்களுக்கு அதுல எதுவும் வருத்தமா..?”

“எதுல..?”

“இந்தமாதிரி.. கல்யாணத்துக்கு ஜாதகம்லாம் பாக்குற மூட நம்பிக்கைல..??”

அவ்வளவுதான்..!! அவர் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார். என்னை ஊடுருவ முயலுவது மாதிரியான பார்வை. அப்புறம் மெல்ல அவருடைய முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது. சற்றே இதமான குரலில் சொன்னார்.

“நான் உன்னை என்னவோ நெனச்சேண்டி.. அப்பாவி.. வெகுளி..!! ஆனா.. நீ பயங்கர புத்திசாலி..!! சுஜி மேல எனக்கு ஆசை இருந்ததான்னு.. வேற மாதிரி கேக்குறேல..?”

“எதோ ஒன்னு.. சொல்லுங்க ப்ளீஸ்..!!”

“இங்க பாரு பவி.. ஜாதகத்தையோ, சுஜியையோ நான் எப்போவும் பெரிய விஷயமா நெனச்சது இல்ல.. அதனால என் மனசுல எந்த வருத்தமும் இல்லை..!! இப்போதைக்கு என் மனசுல இருக்குற ஒரே பெரிய விஷயம்.. நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற விஷயம்.. பவித்ரான்ற இந்த தேவதை என் லைஃப்ல வந்ததுதான்..!! புரியுதா..?” அவர் சொல்ல சொல்ல என் கண்களில் முணுக்கென்று ஒற்றை கண்ணீர்த்துளி வந்து முட்டிக்கொண்டு நின்றது.

“ம்ம்.. புரியுது.. தேங்க்ஸ்பா..!!”

நான் சொல்லிக்கொண்டே அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய மார்பில் ‘இச்..’ என்று ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த மார்பிலேயே என் முகம் புதைத்துக் கொண்டேன். அவரும் என்னை அணைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்தார். பின்பு குனிந்து நெற்றியில் முத்தமிட்டார்.

அடுத்த நாள் அதிகாலையே கொடைக்கானல் பயணமானோம். வத்தலகுண்டு தாண்டி, மலைப்பாதையில் கார் ஏற ஆரம்பித்ததுமே, மனதுக்குள் ஒரு உற்சாக ஊற்று கொப்பளிக்க ஆரம்பித்தது. உயர உயரமாய்.. பெயர் தெரியாத பச்சை மரங்கள்.. வழியெங்கும் வேகவேகமாய் எதிர் திசையில் பயணித்தன. தூரத்து மலை முகடுகளும், அவைகளை பறந்து பறந்து முத்தமிட்ட பனி மூட்டங்களும், காண காண சலிக்கவில்லை. ஜில்லென்ற குளுமை ஒன்று உடலுக்குள் பரவி, காம வெப்பத்தை கணிசமான அளவு கிளப்பி விட்டது. நான் அருகில் இருந்த அசோக்கை, இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

க்ரீன் வில்லா என்ற அந்த ரிசார்ட்டை அடைந்த போது மணி பத்தை நெருங்கியிருந்தது. செக்-இன் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாமே தன் செக்ஸ் லீலைகளை ஆரம்பித்தார் என் கணவர். குளித்துவிட்டு வருகிறேன் என்றவளிடம், சேர்ந்து குளிக்கலாம் என்று அடம் பிடித்தார். எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றால், விடவில்லை அவர்.

“அடச்சீய்.. ஹனிமூன் வந்த எடத்துல.. கருமம் புடிச்ச மாதிரி தனித்தனியா குளிக்கலாம்னு சொல்ற..? விட்டா.. தனித்தனியா ரூம் போட்டு ஹனிமூன் கொண்டாடலாம்னு சொல்லுவ போல இருக்கு..”

இப்படி எதற்கும் அடங்காத ஆளைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது..?? அப்புறம் சேர்ந்துதான் குளித்தோம். இரண்டு ஷவர் வால்வுகளையும் திறந்து, இதமான சூட்டில் நீர் சிதறுமாறு செய்து, இருவரும் அணிந்த உடைகளுடனே நனைந்தோம். நீர் என் உடைகளை நனைத்து நனைத்து, என் மேனி ரகசியங்களை மெல்ல மெல்ல வெளிக்கொணர, அசோக்கின் கண்களிலும் மெல்ல மெல்ல காமபோதை ஏறியது. ஆவேசமாக என் உதடுகளில் முத்தமிட்டார். முத்தமிட்டவாறே.. முன்புறமும் பின்புறமும் வீங்கியிருந்த என் அங்கங்களை, முரட்டுத்தனமாக பிசைந்தார்.

நனைந்து கொண்டே.. முத்தமிட்டுக்கொண்டே.. ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டே.. இருவரும் நிர்வாணம் ஆனோம்..!! திருமணம் ஆன நாளிலிருந்து, அவருடன் எக்கச்சக்கமான தடவைகள் உறவு கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய ஆணுறுப்பை அதுவரை தெளிவாக பார்த்தது கிடையாது. அன்றுதான் பார்த்தேன். சற்றே நீளமாக.. சற்றே தடியாக.. கருகருவென.. நுனியில் மட்டும் செவசெவவென.. முறுக்கேறிய நரம்புகளுடன்.. முட்டை மாதிரி ரெண்டு குண்டுகளுடன்.. மிக மிக அழகாக..!! அத்தனை நாளாய் அது எனக்குள் சென்று வந்ததை வைத்து, அதன் வடிவத்தை ஓரளவு கணித்திருந்தேன். ஆனால் இன்றுதான்.. என் பெண்மையை திறந்து வைத்த அந்த பேரழகு ஆயுதத்தின், கணபரிமாணத்தையும் கண்கூடாக பார்க்கிறேன்..!!

குளித்து முடிக்கும்வரை கூட அசோக்குக்கு பொறுமை இல்லை..!! அப்போதே வேண்டும் என்றார். அங்கேயே உறவுறலாம் என்றார். எப்படி என்று கேட்டவளுக்கு, இப்படி இப்படி என்று கற்றுக் கொடுத்தார். அப்படி ஒரு நிலையில் உடலுறவு கொள்ளலாம் என்ற விஷயமே எனக்கு அன்றுதான் தெரியும். நின்ற நிலையிலேயே..!!

நான் மட்டும் சுவருக்கு முதுகு கொடுத்து.. கால்களையும் என் பெண்மையையும் சற்றே பிளந்து நின்று கொள்ள.. அவர் என் இடுப்புக்கு கை கொடுத்து.. சற்றே குனிந்து.. ஒரு கையால் தன் ஆண்மையை பிடித்து.. லாவகமாய் என் பெண்மைக்குள் அனுப்பி.. இயங்க ஆரம்பித்த போது.. இப்படியும் இன்பம் அனுபவிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்..!!

அது நாள் வரை நாங்கள் அனுபவித்த சுகத்தில், இது மிக புதுமையானது என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியும். இருவரும் நின்ற நிலையிலேயே எங்கள் இடுப்பை அசைத்து, எதிர் எதிர் திசையில் மோதிக் கொண்டதையும், மோதும்போது ‘சுருக்.. சுருக்..’ என உடலுக்குள் பாய்ந்த சுகத்தையும், என்னால் மறக்கவே முடியாது. எனது கைகள் அவருடைய கழுத்தை வளைத்திருக்க, அவருடைய கைகள் என் பின்புற குடங்களை தாங்கியிருந்தன. அவருடய ஆண்மை எனக்குள் ‘சரக்.. சரக்..’ என் பாய்ந்த போதெல்லாம், எனது முலைகள் ரெண்டும் ‘நச்.. நச்..’ என அவருடைய மார்பை முட்டின.

ஷவரில் இருந்து பூச்சிதறலாய் என்மீது நீர் கொட்ட.. அவரின் ஆயுதம் புயலாய் எனக்குள் புகுந்து வந்தது. நீர் வழிந்த எங்கள் முகங்கள் எதிரெதிரே மிக நெருக்கமாக இருந்தன. அகத்தின் அழகை மட்டுமல்ல.. உடலுக்குள் ஏறியிருக்கும் சுகத்தின் அளவையும் முகத்தில் காணலாம் என்று அப்போது அறிந்து கொண்டேன். எனது பெண்ணுறுப்பு அளித்த சுகத்தை தாங்க முடியாமல் அவருடைய முகம், பலவித உணர்சிகளை கொட்டியது. அதை நான் அணுஅணுவாய் ரசித்தேன். ‘என்னவருக்கு இத்தனை சுகம் என்னால் தர இயலுமா..?’ பெண்ணாய் பிறந்ததற்காக நான் பெருமை கொண்ட தருணம் அது..!!

சுகக்குளியல் முடிந்து வெளியே வந்தோம். வேறு ஆடைகள் அணிந்து கொண்டு வெளியே கிளம்பினோம். அப்போது கூட அவருக்கு கிளம்ப மனமில்லை. ‘கண்டிப்பா போகனுமா..?’ என கண்சிமிட்டி கட்டிலை காட்டினார். அவருடைய முதுகைப் பிடித்து தள்ளி, அறையை விட்டு வெளியேற்றுவது பெரிய காரியமாக இருந்தது. காரிலேயே கொடைக்கானல் சுற்றக் கிளம்பினோம்.

போட்டிங் சென்று, ஒருவர் மீது ஒருவர் நீரிறைத்து விளையாடினோம். கோக்கர்ஸ் வாக்கில் ஒரு ஷால் போர்த்தி இருவரும் நடந்தோம். பல உயிர்களை பலிகொண்ட பசுமைப் பள்ளத்தாக்கை, பக்கத்தில் சென்று பார்க்க பயந்தோம். பனிமூட்டம் விலகும்வரை காத்திருந்து, பில்லர் ராக் ரசித்தோம். மாலை முழுதும் பூங்காவில், மலர்கள் ரசித்தவாறு மாறி மாறி மடியில் படுத்திருந்தோம். இரவு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு திரும்பி, அடைந்து கொண்டோம்.

“பவி..”

“ம்..”

“எனக்கு ஒரு ஆசைடி..”

“என்ன..?”

“ஹனிமூன்ல.. பொண்டாட்டியை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு.. விஸ்கி சாப்பிடனும்..”

“என்ன வெளையாடுறீங்களா..? அதெல்லாம் கெடயாது..”

“ப்ளீஸ் பவி..”

“நோ நோ..!!”

“ஹேய்.. எனக்கு ரொம்ப நாள் ஆசைம்மா.. முடியாதுன்னு சொல்லாத ப்ளீஸ்..”

நான் முறைக்க முறைக்க, அவர் விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. ஒத்துக் கொண்டேன்.. ஆனால் ஒரு கண்டிஷனுடன்..!!

“சரி.. உங்க இஷ்டம் போல குடிங்க.. ஆனா.. இன்னைக்கு நைட்டு எதுவும் கெடயாது..!!”