ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 2 49

“ஆமாம்.. சொன்னேன்..!!! நான் அப்டித்தான் சொல்வேன்..!!” என்று படபடவென சொல்லி நிறுத்தியவள்,

“நா..நான் அப்டி சொல்லித்தான் என் மனசை தேத்திப்பேன்..!!” என்று பரிதாபமாக சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லும்போதே அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. விசும்ப ஆரம்பித்தாள். துக்கத்தில் தொண்டை அடைத்தவள் போல காணப்பட்டாள். அவளுடைய உதடுகள் கிடந்து படபடவென துடிதுடித்தன. நான் சுத்தமாய் அதிர்ந்து போய் நின்றிருந்தேன். ஒருசில வினாடிகள்..!! பின்பு சுதாரித்துக்கொண்டு, படபடப்பான குரலில் சொன்னேன்.

“ஐயையோ.. எ..என்ன சுஜி நீங்க.. இ..இதுக்குப் போய்..”

அவளும் உடனே சுதாரித்துக் கொண்டாள். உடனே கண்களில் வடிந்த நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், அப்புறம் எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு எக்ஸாம்லாம் எதுவும் கெடையாது.. சும்மா பொய் சொன்னேன்.. அத்தானை அந்த கோலத்துல என்னால பாக்க முடியாது.. அதனாலதான் உங்க மேரேஜுக்கு நான் வரலை..!! இ..இப்ப கூட.. அத்தான் ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சுதான் வந்தேன்..!!”

“ம்ம்ம்..”

“சி..சின்ன வயசுல இருந்தே அத்தானை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர்தான் என் புருஷன்னு எவ்வளவோ கற்பனை..!! எ..எல்லாம் போச்சு..!!”

“ம்ம்ம்..”

“இ..இதுலாம் அத்தானுக்கே தெரியாது.. அத்தானுக்கென்ன.. யாருக்குமே தெரியாது..!! தயவு செஞ்சு.. யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்..!!”

“ம்ம்ம்..”

“அ..அத்தான் ரொம்ப நல்லவரு.. அவரை நல்லா பாத்துக்குங்க..!!”

சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென ஓடினாள். படிக்கட்டில் படபடவென இறங்கினாள். இறங்கும்போது கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே..!! நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன். மனசுக்குள் பலவித உணர்ச்சி அலைகள்..!!

‘சம்பந்த சம்பந்தமில்லாமல் இளித்த சுஜிக்குள் இப்படி ஒரு அழு மூஞ்சியா..?’ என்ற ஆச்சரியம்..!! ‘இவதான் உன் பொண்டாட்டி.. இவன்தான் உன் புருஷன்.. என்று பெரியவர்கள் விளையாட்டாய் சொல்வதினால் இப்படி ஒரு பின்விளைவா..?’ என்ற ஆதங்கம்..!! ‘உள்ளத்தில் இருக்கும் காதலை இப்படி ஒருவரிடமும் சொல்லக் கூட முடியாத நிலை.. ஒரு பெண்ணுக்கு ஏற்படுமா..?’ என்ற பச்சாதாபம்..!! எல்லாவற்றிகும் மேலாக.. ‘சற்றுமுன் வீணாவிடம் இவள் பேசிக்கொண்டு இருந்த போது.. அட்லீஸ்ட் இவள் ஒருத்திக்காவது என் கணவரை பிடிக்காமல் இருக்கிறதே என்ற அந்த சின்ன சந்தோஷம் குலைந்து.. இவளுக்குமா..?????’ என்ற அந்த பொசஸிவ்னஸ்..!!

நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்..!!!

எபிஸோட் – III

ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே.. அவருடைய வெளிதோற்றத்தை வைத்து.. மேலோட்டமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்து.. அவர் மீது விருப்பு கொள்கிறது அல்லது வெறுப்பு உமிழ்கிறது..!! ஏளனம் புரிகிறது அல்லது பொறாமை வளர்க்கிறது..!! அனுதாபம் காட்டுகிறது அல்லது ஆத்திரம் கொட்டுகிறது..!!

பிறகு அவர்களது உண்மை முகம் காண நேரும்போது, நொந்து போகிறது..!! தவறாக எண்ணியதை எண்ணி.. வாடிப் போகிறது..!! சுஜியும் அப்படி ஒரு தாக்கத்தைத்தான் என் மனதில் விட்டு ஓடிச்சென்றாள். இப்படி ஒரு நல்ல பெண்ணை.. எப்பாவமும் அறியா அப்பாவியை.. பெரியவர்கள் ஆடிய விளையாட்டால், தான் தோற்றுப் போய் நிற்பவளை.. எதிரியாக கருதிவிட்டோமே என நினைத்து, என்னை நானே கடிந்து கொண்டேன்.

அவள் சென்ற பிறகு, நான் என் அறைக்கு சென்று, கசக்கி எறிந்த சுஜியின் படத்தை தேடினேன். கிடைத்ததும், ரொம்ப நேரம் அந்த கசங்கலை நீக்க முயற்சி செய்தேன். என் கணவருடைய படத்துடன் இணைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால், கசக்கி எறியப்படக்கூடியது அல்ல என்று தோன்றியது. பத்திரப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. பத்திரப்படுத்தினேன்.. எனது பெட்டிக்குள்..!!

அடுத்த நாளுக்கு அடுத்த நாள் காலை.. என் கணவர் வந்து சேர்ந்தார்..!! என்னை தன்னுடன் சென்னை கூட்டிச் செல்ல..!! நாங்கள் வாழப்போகும் வீட்டிற்கு அள்ளிச் செல்ல..!! அசோக் வருவார் என்று முன்பே எனக்கு தெரியுமாதலால், அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்திருந்தேன். குளித்து முடித்து, அழகு படுத்திக் கொண்டு, அவர் நல்லாயிருக்கிறது என்று சொன்ன ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டேன். கிச்சனில் அத்தைக்கு உதவிக்கொண்டே, அவர் எப்போது வருவார் என அடிக்கடி வாசல் நோக்கினேன்.

அசோக் வரும்போது நான் ஆனியன் நறுக்கிக் கொண்டிருந்தேன். ஆனியனின் காரமோ.. என் ஆண்மீதான காதலோ.. அவரை பார்த்ததும் என் கண்கள் பனித்தன..!! அவர் உள்ளே வந்தார்.. பாட்டியிடம் அணைப்பும், முத்தமும் வாங்கிக் கொண்டார். அத்தை தந்த காபியை குடித்தார். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமாவிடம், பேச்சு துவங்கினார். நடுவில் அவ்வப்போது, என் கண்களை தன் கண்களால் தேடிப்பிடித்து.. காதல் சொன்னார்..!! ஏக்கம் உணர்த்தினார்..!! பின்னர் மாடியில் உள்ள எங்கள் அறைக்கு சென்றார்.

அவர் சென்ற நொடியிலிருந்தே எனக்கு இங்கு இருப்பு கொள்ளவில்லை. மனமும், உடலும் அவருடைய நெருக்கத்தை நாடின. அவசர அவசரமாய் ஆனியன் கட் செய்து கடாசினேன். கத்தரிக்காயும், தக்காளியும் கண்மூடித் திறப்பதற்குள்.. கண்டந்துண்டமாய் கிடந்தன..!! அள்ளிக்கொண்டு போய் அத்தையிடம் கொடுத்து விட்டு.. நைஸாய் நழுவ..

“பவித்ரா..” அத்தை அழைத்தார்.

“எ..என்னத்தை..?”

“அப்டியே இந்த சட்னியையும் அரைச்சுடேன்..”

“ச..சரித்தை..”

ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் முகத்தில் காட்டாமல், தட்டில் இருந்ததை அள்ளிக்கொண்டு போய் மிக்ஸியில் போட்டேன். மிக்ஸியோடு சேர்ந்து என் மனமும் தடதடவென அடித்து சுழன்று கொள்ள, சட்னி அரைத்து முடித்தேன். கிச்சனில் கொண்டு போய் வைத்துவிட்டு, அத்தையிடம் சொல்லிவிட்டு, எங்கள் அறையை நோக்கி நடையை கட்ட,

“அண்ணி.. அண்ணி..” என்று வீணா அழைத்தாள். இவளுக்கென்ன..?? என்று நான் இடிந்து போய் பார்த்தேன்.

“அண்ணி.. கொஞ்சம் இங்க வாங்களேன்..” என்று தன் ரூமுக்குள் கூப்பிட்டாள்.

“எ..என்ன வீணா..?”

“எங்க காலேஜ்ல இன்னைக்கு எல்லாம் எத்னிக் ட்ரஸ் போட்டுட்டு போகணும்.. நான் இந்த ராஜஸ்தானி ட்ரஸ் போட்டுட்டு போகப் போறேன்.. இதை கட்டிக்கிறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணி..!!”

“எ..எனக்கு அதுலாம் தெரியாது வீணா..”

“இந்த போட்டோல இருக்குற மாதிரி அண்ணி.. நானே கட்டிப்பேன்.. ஆனா.. நீங்க இருந்தா பர்ஃபக்டா கட்டிப்பேன்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..”

“சரி வா..”

அவளிடம் சமாதானமாக சொன்னாலும், உள்ளுக்குள் ‘ச்சே..!!’ என்று இருந்தது. ஏன் யாருமே என் மனதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? எனக்கு அவரை அணைத்து நொறுக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் சட்னி அரைக்க சொல்கிறார்கள்..!! அவருடைய உதட்டை கவ்வி கடிக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் ஸாரி பிடிக்க சொல்கிறார்கள்..!! ஒரு வழியாய் வீணா அதை அணிந்து முடிந்த பிறகு, நான் அவள் அறையை விட்டு வெளியே வந்தேன். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அத்தை இப்போது அழைத்தாள்