ஷெட்டி ஒரு பிரபல சித்த மருத்துவரை சந்தித்தான்.சித்த மருத்துவர் பழுத்த சிவபழம் போல இருந்தார்.
வணக்கம் சாமி ,என் பேர் ஷெட்டி,
சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?
தப்பா நினைக்காதீங்க,நான் ஒரு சின்ன பொண்ணை கல்யாணம் அவ விருப்பத்துடன் தான் கல்யாணம் செய்து கொண்டேன்.எங்க தாம்பத்திய உறவு நல்லா சென்றாலும் எங்களுக்குள் ஒரு குறை இருக்கு.
என்ன குறை ?
வெளியே நாலு பேர் முன்னாடி ஒன்றாக செல்வதற்கு கொஞ்சம் அவ கூச்சப்படுகிறாள் ?நானும் உடற்பயிற்சி எல்லாம் செய்து தொப்பை எல்லாம் குறைத்து விட்டேன்,ஆனா
நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு புரிகிறது ?உன்னை இளமையாக காட்ட வேண்டும் அதுக்கு மருந்து வேண்டும் என்று கேட்டு வந்து இருக்கிறாய் ,அதானே ?
ஆமாங்க ,ஒரு பிரபல நடிகர் இந்த வயதிலேயும் அவர் இளமையாக இருப்பதற்கு காரணம் நீங்க கொடுக்கிற மருந்து என்று சொன்னார்.
சரி உன் நல்ல நேரம் ஒரே ஒரு டப்பா தான் இருக்கு ,பதினைந்து லட்சம் கொடு .
என்னது ஒரு டப்பா மருந்து பதினைந்து லட்சம் ரூபாயா ! என்று வியப்பாய் ஷெட்டி கேட்க
இந்த மருந்து பற்றி உனக்கு என்ன தெரியும் ?உதகநீர் என்றால் என்ன தெரியுமா ?இந்த மருந்து நீ நினைக்கிற மாதிரி எல்லாம் தயாரிக்க முடியாது.ஒரு வருஷத்திற்கு அதிகபட்சம் 3 டப்பா தயாரித்தால் பெரிய விசயம்.சில முறை ஒரு டப்பா கூட கிடைக்காது.
இதை பற்றி நீங்க கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நான் கேட்டு கொள்கிறேன் சாமி என்று ஷெட்டி கேட்க
உதக நீர் என்பது மின்னல்கள் மலை உச்சியில் உள்ள பாறையில் மோதும் போது ,மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் பாறையை ஊடுருவி பிளந்து வெளியே மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் வரும்.அந்த நீரில் இலையோ அல்லது குச்சியோ போட்டால் அது கல்லாக மாறி விடும்.ஏன் மனிதனே அதில் விழுந்தால் கல்லாக மாறி விடுவான்.அப்படிப்பட்ட உதகநீரை நாம் நேரடியாக உட்கொள்ள முடியாது.அதுவே சில சஞ்சீவினி மூலிகைகளை சேர்த்து உதக நீர் கலந்தால் அது மருந்தாக மாறி விடும்.மூலிகைகளை நேரடியாக நாம் பறிக்க முடியாது.அதற்கு முன் வேண்டி சாப நிவர்த்தி செய்து பின் தான் பறிக்க வேண்டும். அப்பொழுது தான் பறிக்கப்படும் மூலிகை வேலை செய்யும்.சில சமயம் உதக நீர் கிடைத்தால் மூலிகை கிடைக்காது. மூலிகை கிடைத்தால் உதக நீர் கிடைக்காது.மழை காலங்கள் மட்டும் தான் மின்னல் எதிர்பார்க்க முடியும்.இப்படி ஒன்னுகொண்ணு கிடைப்பதில் மிக சிரமம் இருக்கு.அதுவும் இந்த மூலிகை இருப்பது சதுரகிரி.அங்கு புலி ,யானை மாதிரி வன விலங்குகள் தொந்தரவுகள் அதிகம்,உயிரை பணயம் வைத்து தான் நாங்க இத அங்கேயே தயாரித்து எடுத்து வருகிறோம். அதுக்கு தான் இந்த விலை புரியுதா?
புரிஞ்சுது சாமி,சஞ்சீவினி மூலிகை என்று சொன்னீர்களே ,இந்த அனுமார் ,லட்சுமணனை காக்க எடுத்துட்டு வந்தாரே அந்த மூலிகையா?
அந்த மூலிகையை கண்டறியும் பாக்கியம் இன்னும் அடியேனுக்கு கிடைக்கவில்லை.சஞ்சீவினி மூலிகை என்பது மனித உயிரை காக்கும் எல்லா மூலிகையும் சஞ்சீவினி மூலிகை தான்.சஞ்சீவினி மூலிகையில் பல வகை உண்டு.தெருவோரம் கிடக்கும் குப்பை மேனி தழை கூட ஒரு சஞ்சீவினி மூலிகை தான்.
சரிங்க சாமி ,இதை எப்படி சாப்பிடுவது?
இதை சாப்பிடுவதற்கு சில பத்தியம் இருக்கணும்.
1)முதலில் வெறும் வயிற்றில் அரை TEASPOON தொடர்ந்து 48 நாள் சாப்பிட வேண்டும்.
2) அந்த 48 நாள் non veg சாப்பிட கூடாது
என்னது non veg சாப்பிட கூடாதா என்று ஷெட்டி அலற,
இரு இரு இன்னும் நான் சொல்லி முடிக்கவில்லை
3)இந்த 48 நாளில் எந்த பெண்ணுடன் உடல்உறவு வைத்து கொள்ள கூடாது.
ஐயோ,முக்கியமான மேட்டரிலயே கையை வைத்தா எப்படி சாமி ?சரி சரி என் அனிதாவுக்காக நான் பொறுத்திக்கிறேன்.அவ மூணு மாசம் மேற்படிப்புக்காக ரஷ்யா போகிறாள். அதனால் சமாளித்து விடுவேன் என நினைக்கிறேன்.அதென்ன சாமி 48 நாள் ?
48 நாள் என்பது ஒரு மண்டலம்.நம் செல்லின் வாழ்நாள் 48 நாள். நம் உடம்பில் உள்ள செல்கள் தினம் தினம் இறந்து புதுப்பித்து கொண்டே இருக்கின்றன.இந்த 48 நாட்கள் நீ தொடர்ந்து இந்த மருந்து எடுக்கும் பொழுது உன் உடம்பில் உள்ள செல்கள் அத்தனையும் புதுப்பிக்கப்படும் .அப்பொழுது இந்த மருந்து அத்தனை செல்களையும் சென்று சேர்ந்து இருக்கும். இந்த மருந்து உன் உடம்பில் வேலை செய்து முக சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.உடல் சுறு சுறுப்பாக இருப்பாய்.சுருக்கமாக சொல்ல போனால் தற்போதுள்ள வயதில் இருந்து பத்து,பதினைந்து வயது குறைந்து இருப்பாய்.
சாமி அப்போ இந்த மருந்து சாப்பிடுவதால் ஏதாவது நீண்ட நேரம் SEX செய்ய முடியுமா?
அதெல்லாம் முடியாது .நீ 48 நாள் உடல் உறவு கொள்ளததால் உன் விந்தணு எண்ணிக்கை கூடி இருக்கும் . சுறுசுறுப்பாக இன்னும் கொஞ்சம் வேகமாக செயல்படுவாய் அவ்வளவு தான்.
