ஏன்?
மறுபடியும் சண்டை சச்சரவுகளில் இறங்கி விட்டாயா என்று என்னை ஒரு வழி செய்து விடுவாள். ஊரே என்னை பார்த்து பயப்பட்டாலும் நான் பயப்படகூடிய ஒரே ஆள் அனிதா மட்டும் தான் என்று சொல்ல
Doctor சிரித்தே விட்டார்.
யார் இந்த பொண்ணு ?
இந்த பொண்ணை காப்பாற்ற போய் தான் இப்படி அடிபட்டது என்று கூறி ஷெட்டி விடை பெற்றான் .
கார் RESIDENCY TOWER க்குள் நுழைந்தது.
மணி ALREADY 10 மணி ஆச்சு ,இன்று இரவு மட்டும் இங்கே தங்கி கொள்.நாளை காலை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.
எந்த வித மறுப்பும் இல்லாமல் ஸ்ருதி சரிங்க சார் என்றாள் .
ஷெட்டி RECEPTION சென்று ரெண்டு ரூம் வேண்டும் என்று கேட்க,ஸ்ருதி உடனே
சார் ஒரு ரூம் போதும் ,உங்க மேல நம்பிக்கை இருக்கு ,அதுவும் இல்லாம அடி வேறு உங்களுக்கு பட்டு இருக்கு .நான் உங்க கூடவே தங்கி கொள்கிறேன்.
சாவி வாங்கி கொண்ட ஷெட்டி ,முன்னே செல்ல ஸ்ருதி அவனை பின் தொடர்ந்தாள்.
அந்த ஓட்டலின் பிரமாண்டம் அவளுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ண
ஏன் சார் இவ்வளவு பெரிய ஓட்டலில் தங்கும் அளவுக்கு உங்களிடம் வசதி இருக்குது ,அப்புறம் ஏன் சார் போயும் போயும் அந்த கேவலமான ஓட்டலில் வந்து தங்கினீர்கள்
அங்கே வந்து நான் தங்கி இருக்கா விட்டால் யார் உன்னை காப்பாற்றி இருப்பார்?நான் அங்கே தங்கியதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்கு ,இப்பொழுதுக்கு அதை உன்னிடம் சொல்ல முடியாது.
எனக்கு புரியுது சார்
நீ நினைக்கிற மாதிரி காரணம் எல்லாம் கிடையாது.கங்கையில் குளித்தவன் திரும்ப சாக்கடையில் போய் விழ மாட்டான்.
ரூம் open செய்ய ,அந்த அறையின் ஆடம்பரத்தை பார்த்து ஸ்ருதி மூக்கில் விரல் வைக்க ,
சார் இவ்வளவு பெரிய அறையா ?
நான் எப்பவுமே வந்தால் இங்கே தான் தங்குவது என்று ஷெட்டி கூறினான்.
சரி நீ போய் refresh ஆகி விட்டு வா ,ஷெட்டி கூற
அவளிடம் இருந்த மாற்று துணிகளை எடுத்து கொண்டு bath room சென்று பார்க்கும் போது இன்னும் ஆச்சரியம் ஆகி
சினிமாவில் மட்டுமே பார்த்த Bath tub , எங்கு எதை அழுத்தி குளிப்பது என்று தெரியாமல் விழித்து ஒரு வழியாக எதை எதையோ அழுத்தி ஒருவாறு குளித்து வெளியே வந்தாள்.
அடுத்து ஷெட்டி குளிக்க செல்ல ,ஷெட்டி அவளை பார்த்து food order பண்ணி இருக்கேன் ,வந்தால் வாங்கி வை.
ok sir.
அறையின் காலிங் பெல் ஒலிக்க , ஸ்ருதி சென்று கதவை திறக்க
ரூம் BOY வந்து உணவுகளை அடக்கினான்.
வேற ஏதாவது வேண்டுமா MADAM?
ஸ்ருதி என்ன சொல்வது என்று திரு திரு வென்று முழுக்க ,பின்னாடி வந்த ஷெட்டி
போய் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து ரெண்டு மசாலா தோசை,மசாலா பால் எடுத்து கொண்டு வா
OK சார்…
அப்புறம் தம்பி ,அந்த ரூம் BOY மனோஜ் வரல இன்னிக்கு
சார் இன்னிக்கு அவனுக்கு DAY DUTY
சரிப்பா,வரும் பொழுது சூடு தண்ணீர் கொஞ்சம் கொண்டு வா
ஓகே சார் என்று அவன் விடை பெற்றான்.
என்ன பார்க்கிற ,எடுத்து வைத்து சாப்பிடு ,இங்கே ஊட்டி விட எல்லாம் யாரும் வர மாட்டார்கள் என்று ஷெட்டி கூற
இல்ல சார் எனக்கு இங்கே எல்லாம் பிரமிப்பா இருக்கு ,ஒரு ஆப்பத்திற்கு தேங்காய் பால் , இத்தனை வகை சட்னி , சாம்பார் எல்லாம் குடுப்பாங்க என்று இப்போ தான் எனக்கு தெரியுது.
.ஸ்ருதி எடுத்து வைத்து கொண்டு சாப்பிட ,ஷெட்டியும் அவளுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
மதியம் இருந்து சாப்பிடாமல் மிகுந்த பசியோடு இருந்த ஸ்ருதி இப்படி ஒரு அறுசுவை உணவு கிடைக்க இரண்டு,மூன்று ,நான்கு என ஆப்பம் வேக வேகமாக உள்ளே இறங்கியது.
