ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 6 18

” கிளம்பியாச்சா. ? எப்ப போறீங்க.?” பாக்யா கேட்டாள்.

” பத்து மணிக்கு கெளம்பறோம். வாங்கக்கா..”

” எனக்கும் வரலாம்னு ஆசைதான் ஆனா என் புருஷன் என்கூட சண்டை போடுவான்.”

”அந்தண்ணாகிட்ட நான் சொல்லிக்கறேன்க்கா..”

” இல்ல சுமதி. அவன் பின்னால சண்டை போடுவான். நான் வரலேன்னா என்ன.. நீங்க போய்ட்டு வாங்க.. ” என்று மறுத்து விட்டாள்.

சுமதியும் டாடா காட்டி விட்டுப் போனாள். அதன் பின் பாக்யாவுக்கும் உருப்படியான வேலைகள் என்று எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் உக்காந்து கொண்டிருந்தவள் துணிகளை எல்லாம் எடுத்துப் போட்டு துவைக்க ஆரம்பித்தாள். அப்பறம் மாலை நான்கு மணிவரை தூங்கினாள். !

பொண்ணு பார்க்கப் போனவர்கள் வந்து விட்டது தெரிந்தது. முகம் கழுவி தலை சீவிக் கொண்டு சுமதியிடம் போய் கேட்டாள்.

” என்னாச்சு போன காரியம் ?”

சந்தோசமாக. ”முடிவாகிருச்சுக்கா” என்றாள் சுமதி.

” எல்லாருக்கும் பொண்ணை புடிச்சிருக்கா. ?”

” ஆமாக்கா. ! எங்கண்ணனுக்கு ரொம்பமே புடிச்சு போச்சு ”

அதன் பின் மற்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு வீடு திரும்பி தன் மாலை நேர சமையலில் மூழ்கினாள்.

மாணிக்கத்தின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவனே நேரில் வந்து பாக்யாவை திருமணத்துக்கு அழைத்தான்.

” நீங்க கண்டிப்பா வரனும் ” எனக் குழைந்தான்.

”கல்யாணத்த எங்க வெச்சிருக்கீங்க. ?” பாக்யா கேட்டாள்.

” பொண்ணு வீட்ல..”

” அப்ப நான் வரல. ”

” ஐயோ.. ஏங்க..?”

சிரித்தாள் ”எனக்கு வர முடியாது. சரி பரவால்ல. கல்யாணம் பண்ணிட்டு இங்கதான வருவீங்க..? இங்க வந்து பாத்துக்கறேன்..!”

” நீங்க வருவீங்கனு ரொம்ப ஆசையா இருந்தேன் பாக்யா ”

” இனிமே பொண்டாட்டிய மட்டும் ஆசைப் படு மாப்ள..!” என்று சிரித்தபடியே சொன்னாள்.

மாணிக்கத்தின் திருமணத்துக்கு பாக்யா.. அவளது அம்மா.. முத்து என மூவரும் பெண்கள் சைடிலிருந்து போகவில்லை. பாக்யாவின் கணவன் பரத் முதல் நாள் இரவே போய் விட்டான். அன்றைய இரவு அம்மா வீட்டில் தூங்கி விட்டு அடுத்த நாள் மாலைதான் மாணிக்கம் வீட்டிற்குப் போனார்கள்..!!

மாணிக்கம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனது மனைவியை தயக்கம் இல்லாமல் அறிமுகம் செய்து பேச வைத்தான்.

புது மணப்பெண் பாக்யா எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. மா நிறமாக இருந்தாள். ஆனால் முக லட்சணம் பாக்யாவுக்கு பிடிக்கவே இல்லை.

பரத்தும்.. மனோகரனும் சேர்ந்து திருமண வீட்டில் பயங்கர லூட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். பந்தி வழங்கியதும் அவன்கள்தான். பாக்யா தன் கணவனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் காளீஸ்வரியும்.. அங்கு வர.. பாக்யா அம்மாவைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டாள்.

” கல்யாணப் பொண்ணு எப்படி இருக்கா முத்து.?” பாக்யாவின் அம்மா முத்து வாயைக் கிளறினாள்.

” பரவால்லக்கா. நல்லாத்தான் இருக்கு ” என்றாள் முத்து.

பாக்யா குறுக்கிட்டு ”ஐய.. நல்லாவே இல்ல..” என்றாள்.

அம்மா ”மூக்கு ரொம்ப பெருசால்லியா பாக்யா. ? கொட மொளகா மாதிரி ?”

மூவருக்குமே சிரிப்பு வந்து விட்டது. ஆனால் முத்து மீண்டும் சொன்னாள்.
”மாநிறமா நல்லாத்தானக்கா இருக்கு ?”

” நீ உன்னோட அழக கம்பேர் பண்ணி சொல்லாத பள்ளியே..? எனக்கு என்னமோ அவளை புடிக்கவே இல்ல.!” என்றாள் பாக்யா.

” உனக்கு புடிக்கலேன்னா என்ன. ? நீயா வாழப் போறே..? அவன்தான வாழப் போறான். அவனுக்கு புடிச்சிருக்கு.. அது போதும் இல்லக்கா.. ” என்றாள் முத்து.

” இது சொன்னியே.. நூத்துக்கு நூறு..” பாக்யாவின் அம்மா நெக்கலாகச் சொல்லிச் சிரித்தாள்.

பாக்யாவுக்கு ஏனோ சிரிப்பு வரவில்லை. கோபம்தான் வந்தது. ஆனாலும் அவர்கள் திரும்பத் திரும்ப.. அந்த பெண்ணைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் ….. !!!

இரவு.. பரத் போதையில் வந்தான். கல்யாண வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொன்னான்.. !! அவள் பக்கத்தில் படுத்த சில நொடிகளிலேயே.. அவள் இடுப்பில் கையைப் போட்டு அணைத்துக் கொண்டான். அவளும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.. !! மாணிக்கத்தின் கல்யாணம் நடந்த விதம் பற்றியெல்லாம் கணவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பாக்யா.. !!

” உனக்கொன்னு தெரியுமா. ?” மூக்குடன் மூக்கு உரசக் கேட்டான் பரத்.

அவனது மூச்சுக் காறறில் சாராம நாற்றம் தூக்கலாக இருந்தது. அவன் முகத்தை தள்ளி விட்டாள்.
”சீ.. ரொம்ப கிட்ட வராத.. நாறுது..!!”

” ஏய் கேளுடி. இது ரொம்ப முக்கியமான மேட்டர் ” மீண்டும் அவன் முகத்தை அவளுக்கு நெருக்கமாக கொண்டு வந்தான்.

” சரி சொல்லு..” அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

” சுமதி கன்னி கழிஞ்சுட்டா..” என்றான்.

” என்னது.. ??”

” ஏய்.. சுமதி இருக்கா இல்லடி ”

” ஆ…மா.. ??”

” அவ கன்னி கழிஞ்சிட்டா.. ”

” எப்… ப.. ?” எனக் கேட்கும்போதே அவள் மனதுக்குள் அவன் மேல் சந்தேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

” நேத்து.. ! நைட்டு.. !!” சிரித்தான்.

” அடிப்பாவி.. ! யாரு கன்னி கழிச்சது அவளுக்கு.. ? நீயா.. ?”

” ஏய்…? என்னடி சொன்ன பாவத்துக்கு என்னை பழிகடா ஆக்குற.. ? நான் இல்லைடி. மனோகன்தான்..! அவன்தான் அவளோட லவ்வர். நான் இல்ல. தெரிஞ்சுக்கோ.. !!”

‘ஹப்பாடா ‘ என்பதை போல ஒரு நிம்மதி வந்தது. ஆனாலும் அனியாயத்துக்கு நாம கெட்டுப் போயிட்டோம். சொன்ன உடனே இவனை சந்தேகப் பட்டுட்டோமே.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கேட்டாள்.

” என்னடா சொல்ற..நாயீ…?”