ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 6 18

தனது கவலைகளை எல்லாம் சாந்தினியுடன்தான் பகிர்ந்து கொண்டாள் பாக்யா. இப்போது முத்துவையும் சேர்த்து மூவரும நெருங்கிய தோழிகளாகியிருந்தனர்..!!

அந்த பொங்கல் பண்டிகையை சாந்தினியுடன் சேர்ந்துதான் கொண்டாடினாள் பாக்யா. முதல் முறையாக.. ராசு பண்டிகைக்கு வராமல் தவிர்த்திருந்தான். அந்த வருத்தம் ஒரு பக்கம் அவளுக்குள் இருந்தாலும்.. சாந்தினியின் நட்பால்.. பொங்கலை சிறப்பாகவே கொண்டாடினாள். !

முதல் நாள் சினிமாவுக்கும்.. இரண்டாவது நாள் அருகில் இருக்கும் குமரன் கோவிலுக்கும் சென்றாள். முத்துவும் அவர்களுடன் இருக்க பாக்யா கவலைகளை மறந்து.. பண்டிகையைக் கொண்டாடினாள். பரத் அவன் அம்மா வீட்டுக்கு போய் விட்டான். அவளுடன் சேர்ந்துஎங்கும் வரவில்லை. பாக்யா தன் வீட்டில் எதுவும் செயாயவில்லை. அம்மா வீட்டில் இருந்து பண்டிகையைக் கொண்டாடினாள்..!!

அப்போதுதான் சாந்தினி கேட்டாள்.
” ஆமா.. அந்த விஷயத்துல உன் புருஷன் எப்படி?”

அவள் என்ன கேட்கிறாள் என்று அவளுக்கும் புரிந்தது. ஆனால் தெரியாதவளைப் போலக் கேட்டாள் பாக்யா
”எந்த விஷயத்துல..?”

” ஏய்.. அதான்பா.. பெட் மேட்டர்..?” ஒரு கண்ணை படக்கெனச் சிமிட்டினாள்.

லேசான வெட்கம் வந்தது. அவனை விட ராசு எவ்வளவோ மேல் என்பது அவள் கணிப்பு. சாந்தினி கேட்டதும் அவளுக்கு ராசு நினைவுதான் வந்தது.
” பெருசால்லாம்.. அவனுக்கு என்கிட்ட ஆசைனு சொல்ல முடியாது ” என்றாள்.

” அப்போ.. எத்தனை நாளைக்கு ஒரு தடவை டச் வச்சுக்குவீங்க..?”

” அ.. அது… எப்பவாவது.. எதிர் பாக்காம நடக்கும்..”

” ஆரம்பத்துல எப்படி..?”

” ம்.. அப்பல்லாம் நல்லாத்தான் இருந்தான். காளீஸ் கூட டச் இல்ல. அதனால என்கிட்ட மோசமில்லாம இருந்தான். இப்பதான்… ரொம்ப மோசமாகிப் போச்சு..”

” நெஜம்மா.. நான் இப்பவும் சொல்றேன். நீ இன்னும் சூப்பரா இருக்கப்ப.. ! உன்ன பாத்தா எனக்கே கொஞ்சம் பொறாமையா இருக்கு. ஆனா.. உன் புருஷன் எப்படி உன்னை கண்டுக்காம இருக்கான்.. ?”

” சீ.. ! சும்மாரு..! என்னை சொல்ற நீ மட்டும் என்ன..? என்னை விட நீதான் ரொம்ப அழகா இருக்க..”

” ஏய்.. நான் கருப்புப்பா..”

” கருப்பாருந்தா என்ன.. செம அழகாத்தான் இருக்க. என்னை விட உனக்கு நல்லாவே இருக்கு எல்லாம்..”

” நெஜம்மாவா..?”

” சத்தியமா..! உனக்கு நம்பிக்கை இல்லேன்னா வேற யாரை வேணா கேட்டுப்பாரு. நீ மட்டும் கலரா பொறந்திருந்த.. உன்னை அடிச்சுக்கவே முடியாது..”

தோழிகள் இருவரும் ‘வா போ’ என அழைத்துக் கொள்வதுடன் மிகவும் அந்தரங்கமாகவும் பேசிக் கொள்வார்கள். இருவருமே வேலைக்குச் செல்வதில்லை என்பதால்.. ஒன்று பாக்யா அவள் வீட்டுக்கு போவாள்.. அல்லது அவள் இவள் வீட்டுக்கு வந்து விடுவாள். பொங்கல் முடிந்தபின் பரத் வந்து விட்டான் என்றாலும்.. அவர்களுக்குள் அவ்வளவாக நெருக்கம் இல்லாமல் இருந்தது. ஒரு பக்கம் சண்டை சச்சரவு என இருந்தாலும்.. இன்னொரு பக்கம் எப்போதாவது ஒரு முறையேனும் உடலுவிலுமா ஈடு பட்டுக் கொள்ளத்தான் செய்தார்கள். ஆனால் அதில் காதலோ கொஞ்சலோ இருக்காது. கடனே என ஒரு உடற்கலப்பு நிகழும்..!!

அந்தச் சமயத்தில் பாட்டிக்கு உடல் நலமின்றி ஆனது. திடீரென பக்கவாதம் வந்து.. ஒரு பக்க கை மட்டும் செயலிழந்து போனதாகச் சொன்னார்கள். தகவல் தெரிந்ததது மாலை நேரம் என்பதால்.. உடனே அவளது பெற்றோர் கிளம்பிப் போய் விட்டார்கள். பாக்யா மறு நாள் காலையில் வருவதாகச் சொல்லி விட்டாள்..! பரத் வந்தவுடன் அவனிடம் தன் பாட்டிக்கு உடல் நலமில்லாமல் போனதைச் சொன்னாள். !

” எப்படி ?” என்று கேட்டான்.

” தெரியல..! போனாத்தான் தெரியும்.!”

” சரி.. நீ வேணா நாளைக்கு காலைல போயிரு.. நான் ஓனர்கிட்ட போய் லீவ் சொல்லிட்டு அப்படியே வந்தர்றேன் ” என்றான்.

” நீ போய் லீவ் சொல்லிட்டு வா ரெண்டு பேரும் ஒண்ணா போலாம் ” என்றாள்.

” போய்ட்டு என்னால ஒடனே வர முடியாது. மத்தியானம்வரை வண்டி ஓட்டச் சொன்னாலும் சொல்லுவாரு. வேற ஆளும் இல்ல. மாத்தியுடறதுக்கு..”

” சரி. நான் போறேன். நீ வராம இருந்துடாதே..”

” வரேன்.. வரேன்..! உனக்காக இல்லேன்னாலும் உங்க பாட்டிக்காக கண்டிப்பா வருவேன்..”

அன்றைய இரவு.. பேசி முடித்த பின்.. சமாதான உடன் படிக்கையால் இரண்டு பேரும் உடலுறவு கொண்டார்கள். காலையில் எழுந்து பரத் வேலைக்குச் சென்று விட.. பாக்யா குளித்து வந்து புடவை கட்டிக் கொண்டிருக்கும்போது முத்து வந்தாள்.

” உங்க பாட்டிக்கு என்னாச்சுப்பா..?” முத்து.

” பக்கவாதம்டி ”

” எப்படி.. இப்படி ஆச்சு ?”

” அதான் தெரியல..! நான் போய் பாத்து விசாரிச்சிட்டு வந்து சொல்றேன்.”

” பாவம் உங்க பாட்டி. நீ மட்டுமா போறே.? பரத் வரலியா..?”

” அவன் லீவ் சொல்லிட்டு அப்படியே வந்தர்றேன்றுக்கான்.”

” எனக்கும் வந்து பாக்கனும்னுதான் இருக்கு. ஆனா வேலைக்கு போகணும். எங்ஙப்பனும் விடாது..”

முத்துவுடன் பேசிக் கொண்டே புடவை கட்டி தலைவாரி ஜடை பிண்ணினாள். கொஞ்சமாக உணவைப் போட்டு அவசரமாக சாப்பிட்டாள். அவள் வீட்டைப் பூட்டிக் கிளம்ப முத்துவும் வேலைக்கு கிளம்பினாள்..!!

பாட்டி வீட்டில் நிறையே பேர் இருந்தார்கள். அதில் ராசுவும் இருந்தான். அவனைப் பார்த்த உடனே அவள் மனசு குதூகலித்தது.
” ஏய் நீ எப்ப வந்த..?”

” நேத்து. எங்க உன் புருஷன் வரலையா..?”