என் காதலி Part 8 44

அது சரி அடுத்த வாரம் பங்க்சென் வந்துரு என்றான் மணி .என்ன பங்க்சென் என்றான் விக்கி .என்ன பண்க்சனா வள்ளி வலைக்கப்புடா என்றான் மணி .ஓகே இத பத்தி டீ டைம்ல பேசுவோம் இப்ப நீ உன் கேபினுக்கு போ என்றான் விக்கி .

விக்கி சுவாதியை நினைத்து கொண்டு இருக்கும் அதே வேலையில் சுவாதி அவள் ஆபிசில் உக்காந்து வேறு ஒரு யோசனையில் இருந்தாள் .அதாவது இன்னும் அவள் கர்ப்பமாக இருப்பது ஆபிசில் யாருக்கும் தெரியாது .இப்போது அவளுக்கு 5வது மாதம் ஆரம்பிக்க போவாதால் ஓரளவு வயிறு நன்கு பெரிதாகி விட்டது அதையும் மீறி அவள் யாருக்கும் தெரியமால் தன் வயிற்ரை தன் சுடிதார் துப்பட்டாவை கொண்டும் தன் Handbag கொண்டும் ஓரளவு மறைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டாள் .

அதையும் மீறி யாரவது என்ன வர வர ரொம்ப குண்டாகி கிட்டே போற என்று கேட்டாள் ஒன்னும் இல்லையே சாப்பாடு கொஞ்சம் நிறைய சாப்பிடறேன் அவளவுதான் என்று சொல்லி சமாளிப்பாள் .சரி இதற்கு மேலும் சமாளிக்க முடியாது .அது மட்டும் இல்லாம டாக்டர் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாதுன்னு வேற சொல்லிருக்காங்க அதுனால வேலைய விட்டு நின்னுடுவோம் என்று நினைத்து கொண்டு இருந்த போது சித்தார்த் அவளிடிம் வந்தான் .

சித்தார்த் சுவாதியோடு ஏப் எம் ஸ்டேசெனில் வேலை பார்ப்பவன் . அவனும் தமிழன் .சுவாதி வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அவளை ஒரு தலையாக காதலிப்பவன் .எப்போதும் சுவாதியிடம் வந்து வழிந்து வழிந்து பேசுவான் .அனால் சுவாதி டேவிட்டை காதலிப்பது தெரிந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தவன் .

எப்போது சுவாதியும் டேவிட்டும் break up ஆனது தெரிந்ததோ அப்போது இருந்து மீண்டும் சுவாதிக்கு ட்ரை பண்ணிக்கொண்டு இருந்தான் . அதுவும் டேவிட்டுக்கு கல்யாணம் ஆனது தெரிந்ததும் அவன் ரொம்பவே நம்பிக்கையோடு சுவாதிக்கு ட்ரை பண்ணான் .

எப்போது பார்த்தாலும் அவளிடிம் வந்து கடலை போட்டு கொண்டே இருந்தான் .ஆனால் சுவாதிக்கு அவனை துளியும் பிடிக்காது .அவனை சமாளிப்பது எப்போதும் அவளுக்கு பெரும்படாகதான் இருந்தது .அன்றும் அப்படி அவன் சிரித்து கொண்டே வருவதை பார்த்து ஐயோ இந்த இம்சைய எப்படிதான் சமாளிக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தாள் .

சித்தார்த் அவள் கிட்ட வந்து hey swathi how do you do ? என்றான் ஜொள்ளு விட்டபடியே .ஸ்வாதி மனதிற்குள்ளே நல்லவே இல்லடா என்று நினைத்து கொண்டாள் பின் வெளியே அவனிடிம் சிரித்து கொண்டே fine என்றாள் . அவனும் பதிலுக்கு பலமாக சிரித்து விட்டு அப்புறம் சுவாதி இந்த ஃப்ரைடே என்ன பிளான் என்றான் .

இம்ச எங்கயோ கூப்பிட்டு போக பிளான் பண்ணுதே இப்ப என்ன பண்ண என்று யோசித்து விட்டு சரி அவன் வழிலேயே போயி அவன விட்டு பிடிப்போம் என்று நினைத்து கொண்டு nothing ஒரு பிளானும் இல்ல என்றாள் அவனிடிம் .

அவன் சிறிது அமைதியாக இருந்து விட்டு அப்ப சுவாதி நம்ம ஆபிஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் ஃப்ரைடே நியூ ரிலிஸ் படம் எதுக்கு ஆச்சும் போயிட்டு அப்படியே எங்கயாச்சும் டின்னர் சாப்பிடுவோமா என்றான் .அட பாவி கரெக்ட்டா கொக்கி போட்ரியாடா என்று நினைத்து கொண்டு சுவாதி ஒன்னும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .என்ன சுவாதி ஒன்னும் சொல்லாம இருக்க நான் ஏதும் தப்பா கேட்டுடனா இல்ல நீ இன்னும் டேவிட்டையே நினச்சு கிட்டு இருக்கியா என்றான் .

சரி வேற வழி இல்ல இவன் மூலமா ஆபிஸ்க்கு தெரிய வச்சுட்டு அப்படியே வேலையவும் ரிசைன் பண்ணிடுவோம் .நம்ம என்ன இனி இந்தியா வரவா போறோம் இதுக முன்னாடி அசிங்கபடுரோம்னு நினைச்சுகிட்டு என்று நினைத்து கொண்டு இருந்தாள் .சுவாதி என்ன ஆச்சு என்று அவளை எழுப்பினான் சித்தார்த் .சித்தார்த் நான் ஃப்ரைடே ஆபிசுக்கு வர மாட்டேன் என்றாள் .ஏன் என்ன ஆச்சு வேற எதுவும் ப்ரோக்ராம் இருக்கா என்றான் .

ஐ மீன் உண்மைய சொல்ல போனா நான் இனிமேல் எப்பவுமே ஆபிஸ்க்கு வர மாட்டேன் ரிசைன் பண்ண போறேன் என்றாள் .அதை கேட்டு அதிர்ச்சி ஆன சித்தார்த் வாட் எதுவும் ப்ரபலாமா நான் எதுவும் தப்பா கேட்டுடேனா அப்படி ஏதும் இருந்தா நான் வேணா பேசல ஆனா நீ வேலைய விட்டு போகாத ப்ளிஸ் என்று கெஞ்சினான் .

1 Comment

Add a Comment
  1. Super aga story pogiradhu. Waiting for the next part

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *