என் காதலி Part 8 44

என்னடா அவள மறக்க முடியலையா என்றது .ஆமா அவள நினச்சு தூக்கம் கூட வரல என்றான் .அவள மறக்க வழி சொல்லவா என்றது மனம் .சீக்கிரம் அத சொல்லி தொழ என்றான் .சிம்பிள் நீ எப்பவும் போல இரு என்றது மனம் .அப்படின்னா என கேட்டான் விக்கி .நீ எப்பவும் போல பல பேர கரெக்ட் பண்ணி போடு ,சுவாதிய அவளவா பாக்காத avoid பண்ணு அதையும் மீறி பாத்தா அவ கிட்ட கோபப்பட்டு நல்லா திட்டு முடிஞ்சா நீ திட்டுரதுல அவ ரோசப்பட்டு உன் வீட்ட விட்டே போகணும் அப்படி திட்டு என்றது மனம் .

சரி நீ சொல்றபடியே செய்யுறேன் அவள இனிமேல் அவலவா பாக்கவும் கூடாது பேசவும் கூடாது என்றான் .பின் ஒரு வழியாக ஒரு 3 மணியை போல தூங்கினான் .அதன் பின் காலையில் யாரோ அவனை தட்ட அவன் எந்திரக்க முடியமால் எந்திரித்தான் ,கண் முழித்து பார்த்த போது சுவாதி கையில் காபியை வைத்து கொண்டு அழகாக சிரித்து கொண்டு இருந்தாள் .ஒ என்ன இவள பாக்க கூடாதுன்னு நினச்ச கண் முன்னாடி வந்து நிக்குறா என்று நினைத்து கொண்டு இருக்கும் ஹலோ good morning சார் என்ன டிவி பாத்துட்டு அப்படியே தூங்கிட்ட என்றாள் .

விக்கி சும்மாதான் தூக்கம் வரல அதான் டிவி பாத்தேன் அப்படியே தூங்கிட்டென் என்றான் .பின் அவன் மனம் சொன்னது டேய் அவள பாக்காத இப்ப எதாச்சும் அவள கண்டபடி திட்டு என்றது .சுவாதி அவனுக்கு காப்பியை கொடுத்து விட்டு போயி கொண்டு இருந்தாள் .எதாச்சும் திட்டுடா என்று அவன் மனம் நச்சரிக்க சரி திட்டுறேன் என்று மனதிடம் கத்தி விட்டு ஏண்டி உனக்கு அறிவு இல்ல ஏன் இப்ப என்னையே எழுப்பி விட்ட அப்படின்னு திட்டவா என்றான் .ஓகே அப்படியே ஸ்டார்ட் பண்ணி பெரிய சண்டை ஆக்கு என்றது மனம் ,

போயி கொண்டு இருந்தவளை ஏ என்று சொன்னவுடன் அவள் திரும்பி பார்த்தாள் எதுக்கு என்று வாய் வரை வந்தது .ஆனால் அவள் முகத்தை பார்த்த உடனே அவனுக்கு திட்ட தோன வில்லை .எது என்று மட்டும் வாய் வரை வந்தது .வேற எதுவும் வரவில்லை என்ன விக்கி என்றாள் . ஒன்னும் இல்ல காப்பிக்கு தேங்க்ஸ் என்றான் .அது இருக்கட்டும் மணி 8 ஆச்சு ஆபிஸ்க்கு கிளம்பு என்றாள் .

ஒ ஷிட் என்று சொல்லி விட்டு எழுந்து கிளம்பினான் .ஓகே விக்கி நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு போனாள் ,இவனும் அவளுக்கு ஓகே பாய் என்றான் .பின் வேக வேகமாக குளித்து முடித்து ஆபிஸ்க்கு கிளம்பினான் . பின் வேகமாக காரை எடுத்து கொண்டு போனான் .காரில் போயி கொண்டு இருக்கும் போது மெயின் ரோட்டில் சுவாதி நின்று கொண்டு கை காண்பித்து ஆட்டோவை நிறுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தாள் . ஆனால் அது ரஷ் அவர் என்பதால் யாரும் அவளவாக நிப்பாட்ட வில்லை . சுவாதியும் பதற்றத்தில் நின்று கொண்டு இருந்தாள் .

சரி அவள இன்னைக்கு ஒரு நாள் அவள கார்ல ஏத்திட்டு போவோம் என்று நினைத்தான் .என்னது அவள கூப்பிட்டு போ போறயா டேய் அவள avoid பண்ணுனு சொன்னா அவகிட்டயே போற என்றது மனம் . அதுக்கு இல்ல பாவம் அவ உடம்பு வேற வீக்கா இருக்குன்னு டாக்டர் சொல்லிருக்காங்க அதான் அவள ஏத்தலாம்னு முடிவு பண்ணேன் என்றான் .என்னது பாவமா அதலாம் நீ எப்பயுமே பாக்க மாட்டியே இப்ப என்ன ஆச்சு என்று அவன் மனம் சொல்ல சொல்ல கேட்கமால் அவள் கிட்ட போயி காரை நிப்பாட்டி கார் சன்னலை திறந்தான் .

ஹ ஏறிக்கோ இன்னைக்கு ஒரு நாள் நான் உன்னையே உன் ஆபிஸ்ல விடுறேன் என்றான் .பரவல விக்கி நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன் என்றாள் .இந்நேரம் ஆட்டோ அவளவா கிடைக்காது அதுனால வண்டில ஏறு என்றான் .இருக்கட்டும் நான் பாத்துகிறேன் நீ போ என்றாள் ,ஹ வா ரெண்டு பேருக்குமே டைம் ஆகிடுச்சு அதுனால சீக்கிரம் வண்டில ஏறு என்றான் .என்னையே கொண்டு போயி விட்ரதால உனக்கு லேட் ஆகாதா என கேட்டாள் .

போற வழில தான இருக்கு அதுனால ஏறு என்றான் .அவளும் யோசித்து விட்டு சரி என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறினாள் ,பின் அவள் ஏறுவதற்குள் காரில் இருந்த கண்ணாடியை அவளை பார்ப்பது போல திருப்பி வைத்தான் .பின் காரில் போகும் போது அவளை அவ்வோபோது அந்த கண்ணாடி வழியே பார்த்து கொண்டே வந்தான் . பின் சுவாதியை அவள் ஆபிஸ் அருகே இறக்கி விட்டான் .ஓகே விக்கி ரொம்ப தேங்க்ஸ் நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் .அவனும் சரி என்று சொல்லிவிட்டு போகமால் அவள் போகும் வரை நின்று அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .

போதும் அவள சைட் அடிச்சது ஆபிஸ் போ லேட் ஆகிடுச்சு என்றது மனம் . அவனும் வேகமாக வண்டியை ஒட்டி ஆபிஸ் வந்து சேர்ந்தான் .பின் ஆபிஸ் போயி மிகவும் களைப்புடன் வேலை பார்த்தான் .

ஏன் என்றால் முதல் நாள் சரியாக தூங்கததால் வந்த களைப்பு .அதன் பின் வேலை எல்லாம் அசதியோடு முடித்து விட்டு மதியம் லஞ்ச்க்கு போக பிடிக்கமால் அவன் ரூமில் அப்படியே டேபிளில் சாய்ந்து உறங்கினான் . அதன் பின் அவனை மணி வந்து எழுப்பினான் .என்னடா சாப்பிட வரலையா என்றான் .இல்லடா நைட் சரியா தூங்கல அதுனால ரொம்ப டயர்டா இருக்கு .இந்த கொஞ்ச நேரம் தூங்குனாதான் நல்ல இருக்கும் அதுனால நான் சாப்பிட வரல என்றான் .

1 Comment

Add a Comment
  1. Super aga story pogiradhu. Waiting for the next part

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *