என் காதலி Part 8 44

அதுனால அடிக்கடி உங்க வோயிப் கிட்ட ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுங்க அவங்க ஹெல்த் பத்தி விசாரிங்க அப்பதான் அவளும் மனசு அளவுல செப்பா பீல் பண்ணுவா என்றார் ,விக்கி சரி டாக்டர் என்றான் .சரி போயிட்டு வாங்க நிறைய பழங்கள் வாங்கி கொடுங்க அவங்களுக்கு .ம்ம் அப்புறம் ஆறுதலா பேசாட்டியும் பரவல அவங்கள இந்த 5 மாசத்துல எப்பயும் திட்டிராதிங்க அது ரொம்ப டென்ஜெர் என்றார் .

சரி டாக்டர் thank you என்றான் .ஓகே என்றார் .பின் வெளியே வந்தான் . வெளியே வந்த உடன் சுவாதி அவனை பார்த்து என்ன ஏதும் நீ இத்தன நாளா வரலைன்னு திட்டுனங்களா என கேட்டாள் .

விக்கி ஒன்றும் சொல்லமால் இல்லை எனபது போல் தலை மட்டும் ஆட்டினான் .டேய் சொல்றா அப்படி ஏதும் திட்டி இருந்தா என்னையே மன்னிச்சுகோடா என்றாள் .

அவள் அவ்வாறு சொல்லும் போது அவள் முகத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது ஏற்கனவே வாந்தி அதிகமாக எடுத்தால் களைப்பாக வேற இருந்தாள் .

சே நம்ம ரொம்ப இவள திட்டித்தான் இவ இப்படி உடம்பு வீக் ஆகி கிடக்கா பாவம் இவள இனி மேல எதுக்கு ஆகியும் திட்ட கூடாது என்று நினைத்தான் .அதனால் அவளிடிம் அவங்க ஒன்னும் சொல்லல என்றான் .டேய் சும்மா சொல்றா எதுவா இருந்தாலும் பரவல என்றாள் .ம்ம் என்னையே அடிக்கடி உன் கூட வர சொன்னங்க என்றான் .

அத பத்தி நீ எதுவும் கவலைப்படாத நான் டாக்டர கிட்ட பேசி சமாளிச்சுக்கிறேன் .வேற என்ன சொன்னங்க என்றாள் .வேற நீ அதிகமா உடம்புக்கு வேலை கொடுக்காம உடம்ப பாத்துகிவியாம் என்றான் .அத நான் பாத்துக்கிறேன் வேற எதுவும் சொல்லலே என்றாள் .

இல்ல வேற எதுவும் சொல்லல வா போவோம் என்றான் .சரி என்றாள் . பின் இருவரும் காரில் வீட்டுக்கு போனார்கள் .பின் ஒரு இடத்தில சிக்னல் போட்டார்கள் .

விக்கி அப்போது எதார்த்தமாக பின்னே உக்காந்து இருந்த சுவாதியை பார்த்தான் ,அவள் தூங்கி கொண்டு வந்தாள் .அப்போது அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி ஒரு மாதிரி இருந்தது .சன்னல் காற்றுக்கும் அதுக்கும் அவள் தலை முடிகள் ஒரு சில அவள் முகத்தில் அடித்து கொண்டு இருந்தது .

அவள் தூங்கி கொண்டு இருப்பதற்கும் அவள் தலை முடிகள் அவள் முகத்தில் அடிப்பதற்கும் அவள் ஒரு குழந்தை போலவும் cute ஆக இருந்தது .

விக்கி தன்னை மறந்து அவளை ரசித்தான் .பின் அவ்வோபோது அவள் முகத்தை மறைக்கும் அவள் முடிகளை ஒதுக்கி விட்டு அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்து கையை கொண்டு போனான் .

அதற்குள் சிக்னல் போட்டு பின்னே இருக்கும் கார்காரன் ஆரன் அடிக்க விக்கி முன்னே திரும்பினான் .பின் வீட்டிற்கு வண்டியை ஓட்டினான் . போகும் போது அடிக்கடி கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கொண்டே வந்தான் .

பின் வீடு வந்ததும் அவளை எழுப்பினான் .அவளும் தூக்க கலக்கத்தில் அதுக்குள்ளே வீடு வந்துருச்சா என்றாள் .ஆமா என்றான் .சே டாக்டர் ஊசி போட்டதுனால தூக்கமா வந்து இருச்சு என்று சொல்லி விட்டு உள்ளே போனாள் .பின் இருவரும் வீட்டிற்கு உள்ளே போனார்கள் .

சரி விக்கி எனக்கு ரொம்ப டய்ர்ட்டா இருக்கு நான் போயி தூங்குரென் என்றாள் .ஓகே குட் நைட் என்றான் .ஹ by the bye தேங்க்ஸ் என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்ததுக்கா என்றான் .இல்ல இன்னைக்கு புல்லா கோப படாம இருந்ததுக்கு என்று சொல்லி சிரித்தாள் .

ஒ அப்படியா என்று அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு எ உனக்கும் தேங்க்ஸ் என்றான் .எதுக்கு என்றாள் . பிரண்ட்லியா மனசு விட்டு பேசுனதுக்கு என்றான் .

ஓகே என்று சொல்லி சிரித்தாள் . விக்கி மீண்டும் அவள் முகத்தை பார்த்தான் .அவள் முகம் மிகவும் களைப்பில் வாடி போயி பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் என்னமோ அவனுக்கு அவள் என்னைக்கும் இல்லாத மாதிரி அழகாக தெரிந்தாள் .

1 Comment

Add a Comment
  1. Super aga story pogiradhu. Waiting for the next part

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *