மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 1 181

இதான் என் வாழ்க்கை !

குழந்தைக்காக அந்த டேட்ல மட்டும் சின்சியரா முயற்சிப்பேன் …

எப்படியோ கடவுள் கண்ண திறந்துட்டாரு … அவள் வேலைக்கு போக ஆரம்பிச்சி
கிட்டதிட்ட ஒன்னரை வருஷம் கழிச்சி எங்களுக்கு குழந்தை பிறந்தது …

குழந்தை உண்டாகி 6 மாசம் வரைக்கும் வேலைக்கு போனா …

அப்புறம் வளைகாப்பு விட்டு விட்டு அவளுடைய சித்தி வீட்டுக்கு அனுப்பினேன் !
வளைகாப்புக்கு அவளோட கொலீக் ஒருத்தன் வந்திருந்தான் அவன் பேர் கதிர் …
மல்லிகா அவனை அறிமுகப்படுத்தி வைக்க நானும் அவனை வரவேற்று உள்ளே
அமரவைத்தேன் … அன்றைய ஃபங்ஷன் முழுக்க அவனே ஓடி ஓடி அவளோ வேலையும்
செஞ்சான் ….

என் குடும்பத்தாரே அவனை ரொம்பவும் சிலாகிச்சி பேசுனாங்க அப்போ எனக்கு
தெரியாது என் குழந்தைக்கு அப்பாவே அவன் தான் என்று …

என்ன மக்களே ஆச்சர்யமா இருக்கா காத்திருங்க எல்லாம் அப்புறம் சொல்றேன் …

அன்று விழா முடிந்து என் மனைவியை அனுப்பி வைக்க சில நாட்களில் …
அங்க எந்த வசதியும் இல்லை எனக்கு ரொம்பவும் போர் அடிக்குது அதனால இன்னும்
ஒரு மாசம் கழிச்சி போயிக்கிறேன்னு மறுபடி வேலைக்கு போனா …

ஆனா இப்ப என்னுடன் பைக்ல வராம நடந்தே வந்துட்டு போனாள் … வாக்கிங்
போறேன்னு சொல்ல நான் எப்படி தடுக்க முடியும் …

குழந்தை பிறந்து மூணு மாசம் கழிச்சி வந்தவள் … கொஞ்ச காலம் சும்மா
இருந்துட்டு குழந்தைக்கு ஒன்னரை வயசு ஆனதும் மறுபடி வேலைக்கு போறேன்னு
ஆரம்பிச்சா …

அதுக்குள்ள என்ன அவசரம் … இன்னும் நாளாகட்டும்னு நான் சொல்ல அவள் கெஞ்ச …

அவள் கேட்டதும் சரி என்றே தோன்றியது … ஒருவேளை வீட்ல அப்பா
இருந்துருந்தா எதுனா ஆலோசனை சொல்லுவாரு அவருதான் போயிட்டாரே ….

குழந்தைய எப்புடி பராமரிக்கிறது யாருகிட்ட குடுப்பன்னு நான் கேள்விகளை
அடுக்க அவள் எல்லா கேள்விக்கும் பதில் வைத்திருந்தாள் !!1

நான் அதே ஷாம் பைனான்சுக்கே தான் வேலைக்கு போகப்போறேன் !

“ஆமாங்க என் மனைவி வேலை பார்த்த அந்த ஃபைனான்ஸ் கம்பெனி அதான் … ஷாம்
ஃபைனான்ஸ் ”

அங்கேருந்து பின்னாடி தெருவுல ஒரு பால்வாடி இருக்கு அங்க குழந்தைய காலைல
குடுத்துட்டு போனா அவங்க வச்சிக்குவாங்க … நான் மதியம் லஞ்ச் பிரேக்ல
போயி குழந்தைக்கு பால் குடுத்துட்டு மறுபடி போயிட்டு சாயந்திரம்
கூட்டிட்டு வந்துடுவேன் … என்ன இன்னும் ஆறுமாசம் அதுக்குள்ளே அவள்
ஸ்கூலுக்கு போற வயசே வந்துடும் …

என்ன என்ன ??? ரெண்டு வயசுலையா ஸ்கூல்ல சேர்க்க போற ?

ஆமாங்க பிரீ கேஜி ரெண்டு வயசுல தான சேக்கணும் !

அதுசரி இந்தகாலத்துல எல்லாத்துக்கும் அவசர படுறீங்க …

நானும் பொறுமையா இருந்தேங்க ஆனா காலம் மாறிடிச்சி அதுக்கு தகுந்த மாதிரி
நாமளும் மாறிடனும் !!

அது சரி உனக்கு இதெல்லாம் எப்புடி தெரியும் ?

என் ஃ ஃபிரெண்ட் ஜனனி இருக்காளே அவளுக்கும் இப்பத்தான் குழந்தை பிறந்தது
… ரெண்டு வயசு ஆகுது அவ அந்த பால்வாடில சேர்த்துட்டு வேலைக்கு போக
ஆரம்பிச்சிட்டா …

ஓஹோ அவ சொல்லி தான் நீ அடம் பிடிக்கிரியா ?

அடம் பிடிக்கலைங்க … நீங்களே பாருங்க காலைல போயிட்டு ராத்திரி தான்
வரீங்க … சரி இதே நான் ஒரு கவர்மெண்ட் வேலைல இருந்தா நீங்க இவளோ நாள்
விட்ருப்பீங்களா ?

அப்படி இல்லை … சரி உன் இஷ்டம் !

சரி உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேணாம் !

இல்லை இல்லை அதான் உன் ஃபிரண்டு இதையே பண்றாளே அப்புறம் என்ன நீயும் பண்ணு …

ஒன்னும் வருத்தம் இல்லையே ?

இல்லை இல்லை உன் இஷ்டம் தான் மல்லி ….

ரொம்ப தாங்க்ஸ்ங்க …

ம்!

இப்படியாக வளைந்து குழைந்து பேசி கரைச்சிட்டா … மறுபடி வேலைக்கு
போகவும் ஆரம்பிச்சிட்டா ….

இப்படியாக என் மனைவி வேலைக்கு போக ஆரம்பித்து மொத்தமாக கிட்டத்திட்ட 4
வருஷம் ஆகுது ….

ஒரே மாதிரி போன என் வாழ்க்கைல எந்த முன்னேற்றமும் இல்லை … ஒரு நாள் என்

மனைவியின் செல்போன எதார்த்தமா பார்க்க அதில் நான் கண்ட ஒரு மெசேஜ்

மாற்றம் இல்லாத என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திடிச்சி !

அந்த மெசெஜ பாருங்க …. இதை படிக்கும் எந்த கணவனுக்கும் நெஞ்சு

வெடிச்சிடும் … அது என்னான்னு பாருங்க நண்பர்களே !