கமலி 736

“அது எந்தளவு உண்மைனு தெரியல. ஆனா இப்ப நகை கிடைச்சாச்சு. அவளும் காலி பண்ணி போயிட்டா”
“நகை எப்படி கெடைச்சுது?”
“சாமி அப்பவே சொல்லியிருக்கு. நகை எங்கயும் போகாது வீடு தேடி வரும்னு. சத்தியம் பண்ண கூப்பிட்டப்ப அவ வந்து நான் எடுக்கலேனு சத்தியம் பண்ணியிருக்கா. ஆனா அவ புள்ள ஒரு கர்சீப்பு கொண்டு வந்துருக்கு. அதை வாங்கி வீசிட்டேனு சொல்லியிருக்கா. அதுல நகை எல்லாம் இல்லேனு சொல்லியிருக்கா. இவங்க அதுலதான் நகையை சுருட்டி முடி போட்டு வெச்சிருக்காங்க”
“ம்ம்?”
“அப்றம்.. லாக் டவுன் வர இருக்குறதுனால இவங்க கடையை சாத்திட்டு ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு நேத்துதான் வந்துருக்காங்க. இன்னிக்கு நகை கிடைச்சாச்சு”
“அட.. எப்படி? ”
“அவங்க வீட்டு கதவுக்கு முன்னாடி தோணி மாதிரி தகரம் இருக்கும். அதுக்குள்ள அதே கர்சீப்ல சுத்தி வெச்சிருக்காங்க. அதை கண்ல படற மாதிரி வெச்சிருக்காங்க. இவங்க பாத்து எடுத்துட்டாங்க..”
“அப்ப எடுத்தது அவதானா?”
“கர்ச்சீப்ப புள்ள எடுத்துட்டு வந்தா நான் அதை தூக்கி வீசிட்டேனு சொன்னப்பறமா அதே கர்சீப்ல நகை இருக்குன்னா.. வேற என்ன சொல்றது. இப்ப அவ ரெண்டாவது மாசமா இருக்கா. அதனால கொழந்தைக்கு ஏதாவது ஆகிரும்னு பயந்து திருப்பி வெச்சிருப்பா”
“பரவால்லியே.. காணாம போன நகை கெடைச்சது பெரிய விஷயம்தான்”
பேசியபடியே தழுவிக் கிடந்து முத்தமிட்டபின் அசதியில் கட்டிப்பிடித்து உடல் பின்னி முகமிணைத்தபடி கண்ணயர்ந்தாள் கமலி.. !!