கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 2 52

இன்று தான் சாந்திமுகூர்த்தத்திற்கு ஐயர் தேதி குறித்திருந்தார். விடிந்ததும் செல்போன் எடுத்து பார்த்தேன். அவரிடமிருந்து message வந்திருந்தது.
‘hi பொண்டாட்டி…’..
விடிந்ததும் என் ஞாபகம் வந்திருக்கிறதே என்று நினைத்து மனசு சந்தோஷமாக இருந்தது.
கொஞ்சம் நேரம் அவர் அனுப்பிய ‘hi பொண்டாட்டி’ message ஐ யே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையும் அறியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தேன். படுக்கையில் இருந்து எழ மனம் இல்லை. பக்கத்தில் அம்மாவும் இல்லை. வலது பக்கம் புரண்டு அம்மாவின் தலையணையை போட்டு அதன் மேல் கால் தூக்கி போட்டுக்கொண்டேன். திரும்ப மெசேஜ் ஐ எடுத்து பார்த்தேன். ‘கொஞ்சம் நேரம் மிஸ் பண்ணட்டும்’ என்று மனதில் சிரித்துக்கொண்டேன். ஆனால் உண்மையில் நான் தான் மிஸ் பண்ண ஆரம்பித்திருந்தேன். 2 நிமிடம் கூட பொறுக்க முடியவில்லை. பதில் அனுப்பினேன்… “hi புருஷா… குட் மார்னிங்”
“என்ன பண்ணிட்டிருக்கே?” பதிலனுப்பினான்.
“இன்னும் எந்திரிக்கல.. நீங்க என்ன பண்றீங்க?”
“ஒரு பேரழகியின் தரிசனத்துக்காக காத்துட்டிருக்கேன்..”
மனதில் இனம் புரியாத சந்தோஷம். பெண் மனம் தன்னை கவர்ந்த ஆண் மகனின் புகழ்ச்சிக்கு ஏங்குவது ஏனோ… என்னையும் அறியாமல் bedsheet ஐ கடிக்க ஆரம்பித்திருந்தேன்…
பதிலனுப்பினேன் “அப்போ கீழே வரவேண்டியது தானே…”
“வாசல்லையே தான் காதுகெடக்கேன்…”
“என்னது… உண்மையாவா?”
“சத்தியமா…”
எனக்கு படபடப்பானது… இவ்ளோ நேரம் chat பண்ணி டைம் வேஸ்ட் பண்ணிட்டோமோ… முழங்கால் வரை ஏறியிருந்த அரக்கு கலர் nighty ஐ இழுத்து கீழே விட்டு, bedsheet ஐ விலக்கி எழும்பினேன்… குளிக்க நேரம் இல்லை. கண்ணாடியில் முகம் பார்த்தேன்.. தலைமுடி கலைந்திருந்தது. அதை சரி செய்து முகம் கழுவினேன். சின்னதாக ஒரு போட்டு வைத்து கண்ணாடியில் பார்த்தேன். nighty ஆங்காங்கே கசங்கி இருந்தது. பீரோ வை திறந்தேன், என் துணிமணிகள் எதுவுமே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ‘இன்னைக்கு இந்த கசங்கின nighty ல தான் பாக்கணும் ன்னு அவனுக்கு விதி போல’ என்று நினைத்து. மெல்ல ஹால் நோக்கி பூனை போல அடியெடுத்து வைத்தேன். மெல்ல ஹால் ல் எட்டி பார்க்க. அவன் எனக்கு முதுகு காட்டி dining table ல் அமர்ந்திருந்தான். நான் மெல்ல அவனை பார்த்து திரும்பாமல் kitchen நோக்கி நடந்தேன். அம்மா உள்ளே பிஸி ஆக இருந்தாள்.
“அம்மா.. என் டிரஸ் எல்லாம் எங்கடி”
“என்னது டி ஆ… ” சாம்பார் கரண்டியை ஓங்கினாள்.
இவன் பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஓவராக எமோசன் ஆகுரமோ… என்று தோன்றியது.
“கொஞ்சம் வாய கொறசுக்கோ காவ்யா… ரெண்டு நாள் ல இன்னொரு வீட்டுக்கு வாழப்போற பொண்ணு நீ… இனிமே நீ மாப்ள ரூம் ல தானே படுப்பே.. அதான் உன் டிரஸ் எல்லாம் suitcase ல போட்டு மாப்ள ரூம் ல வச்சாச்சு”
“ஓ…..” மனதில் சந்தோசம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இன்று இரவிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது.
ஒரு சின்ன cup ல் அம்மாவிடம் coffee வாங்கிக்கொண்டு ஹால் க்கு நடந்தேன்… அவனை நேராக கண்களில் பார்த்தேன்.. வாய் திறந்து சிரித்தான்.. nighty ஐ பார்த்து கிண்டலடித்து சிரிக்கிறானோ. எதிரில் அமர்ந்தேன்.. “என்ன” மிரட்டல் தொனியில் புருவம் உயர்த்த…
“ப்ஸ்” ஒன்னுமில்லையே என்று தோள்களை உலுக்கினான்.
கண்களை சுருக்கி முறைப்பது போல் சிரித்தேன்…
என் கண்கள் பார்த்து சிரித்தான்..
“வெளிய எங்கயாவது போலாமா?” கிசு கிசுப்பாக கேட்டான்..
நான் தான் கேட்பேன்.. இன்னைக்கு என்ன புதுசா..“என்னாச்சு…” அவன் கண்களை கூர்மையாக பார்த்தேன்.. ‘எதாவது மனம் விட்டு பேச நினைக்கிறானோ?’ மனதில் ஆயிரம் கேள்விகள்.
“சும்மா தான்.. மதியம் வரைக்கும் இங்கயவே இருக்கணும்…”
“ஏன்…??” கேள்வி எழுப்பினேன்..
“நம்ம ரூம் ல AC போடறாங்க…”
“ஓ… ஆமா ல”
“ஹ்ம்ம்.. போலாமா எங்கயாச்சும்?” திரும்ப கேட்டான்..
“ஹ்ம்ம்.. அப்பா கிட்ட தான் கேக்கணும்…”