கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 2 52

நல்ல வேளையாக அம்மா இன்னும் தூக்கம் விட்டு எந்திரிக்கவில்லை. அவள் இந்த வாசனையை கண்டுபிடித்துவிடுவாள். நேராக குளியலறை நோக்கி பூனை போல் நடந்தேன். புது nighty ஒன்றை பீரோ வில் இருந்து எடுத்து, புது உள்ளாடைகளையும் எடுத்துக்கொண்டேன். குளியலறை தாழிட்டு, சேலையை அவிழ்த்து கொடியில் போட்டேன். வியர்வையில் உள்பாவடையும் நனைந்திருந்தது. அதை அவிழ்த்து, bucket ல் தண்ணீர் ஊற்றி முக்கினேன்.
இத்தனை நாள்களில் இப்படி என்றுமே வியர்ததில்லை. என்னையே நான் அதிசயமாக பார்த்தேன். கல்லூரி நாட்களில் சக தோழிகளுடன் கூடல் பற்றின விவாதங்களிலும், கிசுகிசுக்களிலும், இந்த உடல் உஷ்ணம் வியர்வை பற்றி எவளுமே பேசியதில்லை.
வியர்வையில் ஊறியிருந்த ஜாக்கெட் ஐயும் உள்பாவடையுடன் நீரில் முக்கினேன். bra ஜட்டி யுடன் shower ல் நின்றேன். வியர்வையில் குளித்து உஷ்ணமாக இருந்த எனக்கு, என் மேனியில் விழுந்த ஒவ்வொரு நீர்த்துளியும் பனித்துளியாக தோன்றியது. என் மேனியில் விழுந்த நீரை ஒரு கையில் பிடித்து வியர்வை பூத்திருந்த அக்குளில் ஊற்றினேன்…
bra வையும் ஜட்டியையும் உருவி அதே bucket ல் போட்டு shower ல் நிற்க உடலின் உஷ்ணம் குறைவதை உணர்ந்தேன்.
அவன் அணைத்தபோது பின்னிடுப்பில் பதிந்த அவன் நகத்தின் தடம் குளிர்நீரில் லேசான எரிச்சலை தந்தது. அவன் அணைப்பின் அழுத்தத்தில் என் மேனி puncture ஆகிவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு அழுத்தம். ‘வலிக்கிறது’ என்று சொல்ல நா எழாமல், சப்த நாடியும் அடங்கி அவனின் அணைப்புக்கு அடிமையாகி இருந்த நொடிகள் அவை. ‘இந்த மனுசனை எப்படி தான் தாங்கபோறியோ காவ்யா…’ என்று மனம் என்னை கிண்டல் அடித்தது…
அரைமணி நேர குளியலில், உடல் நன்று குளிர்ந்திருந்தது. தலையில் துண்டை சுற்றி, புதிதாய் எடுத்து வந்திருந்த உள்ளாடைகளையும், nighty ஐயும் அணிந்துகொண்டு அறைக்குள் நுழைந்தேன்..
தாலிக்கொடியின் தங்கம் சில்லென மார்பில் உரச, எடுத்து வெளியில் போட்டுக்கொண்டேன். சாமி படத்தை கும்பிட்டு கும்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டேன். மனம் லேசாக பதறியது. கொஞ்சம் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டோமோ என்று. ‘ என்ன மன்னிச்சுடு சாமி’ என்று மனதில் உருகி வேண்டினேன்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் coffee போட்டு ரெடி ஆக வைக்க, ஒரு ஏழேகால் மணிக்கு அம்மா எழும்பினாள்.
“மாப்ளைக்கு coffee குடுத்தியா” எழுந்ததும் கேட்டாள்.
ஒரு மணிநேரத்துக்கு முன்னர் நடந்ததை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. லேசாக சிரிப்பு முகத்தில் தெரிய, “குடுத்தேன் மா” என்று சொல்லி வெடுக்கென்று திரும்பிக்கொண்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.
காலை உணவுக்கு கீழே இறங்கி வந்தான்… அம்மா வும் அப்பாவும் சாப்பிட்டு முடித்திருந்தனர். நானும் படியில் பார்க்க, கண்கள் இரண்டும் சந்தித்துக்கொண்டன. கண்களாலேயே சிரித்தோம். அவரே என் அருகில் அமர்ந்தார். அவருக்கு இட்லி எடுத்து வைக்க, நான்கு போதும் என்றார். ‘ஏன்????’ என்று கண்ணாலேயே கேட்க, ‘போதும்….’ என்று கண்ணாலேயே சைகை காட்டினார்.
என் கை முட்டியால் அவர் arms ல் குத்த, அவர் என் உள்தொடையில் கிள்ளினார். வெயில் படாத என் மேனியில் அவன் விரல் பட, என் மேனி முழுவதும் மின்னல் வெட்டி மறைந்தது. நல்ல வேளையாக, அப்பாவோ அம்மாவோ அருகில் அமர்ந்திருக்கவில்லை. மேனியில் தோன்றிய மின்னல் மறைந்து வெட்கம் பரவியிருந்தது. வேண்டுமென்றே ஒரு chair தள்ளி உட்கார்ந்துகொண்டு அவனுக்கு வாயால் ஒழுங்கு காட்டினேன். என்னை பார்த்து ஒரு கண்ணை மட்டும் சிமிட்டினான், நான் clean bowled ஆனேன்.
இதற்கு மேல் அவன் கண்கள் பார்க்க எனக்கு தைரியம் வராமல். தட்டை மட்டும் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிக்கும் வரை எவ்வளவோ முயன்றும், இந்த முகம் வெட்கத்தை வெளிக்காட்டிக்கொண்டிருந்தது. அவர் சாப்பிட்டு முடித்தபின், வேண்டுமென்றே பயப்படுவது போல் பாவ்லா காட்டி தள்ளி நின்று அவர் தட்டை எடுத்தேன்.. அதை பார்த்து அவர் சிரித்தார்… என் அறையை கடந்து அவர் மாடிப்படி செல்லும்போது, “பாய்..” என்றார்.. நானும் சிரித்துக்கொண்டே, “பை” என்றேன்.
அறைக்குள் நுழைந்ததும், செல்போன் ல் மெசேஜ் வந்தது.
“ஹாய் பொண்டாட்டி”..
“ஹாய் புருஷா..” முதன்முதலாக அழைத்தேன்… காலையில் அவன் செய்த கட்டிப்பிடி வைத்தியம் கூட காரணமாக இருக்கலாம். எங்களுக்குள் இருந்த நாணம் சுவர் காணாமல் போய், அன்யோன்யம் பிறந்திருந்தது..
“ஒரு டீ கிடைக்குமா?”
“ஒரு 5 mins வெயிட் பண்ணுங்க, மில்க் இருக்கா ன்னு பாத்து சொல்றேன்”
“black டீ கூட ஓகே தான்”
“ஹ்ம்ம்… சரி.. 5 mins கொண்டு வரேன்..”
அம்மாவிடம் சென்று, “அவருக்கு ப்ளாக் டீ வேணுமாம் மா…” என்றேன்..
“போட்டு எடுத்துட்டு போ டி…” என்றாள்
ஐந்து நிமிடத்தில், போட்டு சுவை பார்த்தேன். இனிப்பு சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் மாடிப்படி ஏறி அவர் அறையில் எட்டிப்பார்க்க, அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
“ஹ்ம்ம் ம்ம்…” தொண்டையை செருமினேன்..
என்னை பார்த்து சிரித்தார். “வா காவ்யா… உன்னை பாக்கணும் போல இருந்திச்சா அதான் டீ கேட்டேன்” என்றார் குறும்பாக.
“அடப்பாவி…” வாயில் கை பொத்தி சிரித்தேன்… “நாளன்னிலேருந்து எப்போ வேணா பாக்கலாம்.. சரியா..”
என்னையுமறியாமல் அவன் மேலிருந்த உரிமையில் வார்த்தைகள் ஒருமையாய் மாறியிருந்தன.
“அப்படியா… ” அவர் முகம் வாடியது
“அப்போ டீ வேண்டாமா…?” வேண்டுமென்றே topic ஐ மாற்றினேன். என் காதலனை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால். எனக்கல்லவோ danger…
“வா குடிக்கலாம்…” சிரித்தார்..
ஒரு சிப் அருந்தி, கையில் கப் ஐ தந்தார். நானும் ஒரு சிப் அருந்தினேன்…
“ஆமா, காலைல பண்ணின கட்டிப்பிடி வைத்தியம் பிடிச்சிருந்துச்சா?” குறும்பாக சிரித்துக்கொண்டே கேட்டான்.
அவன் கேட்டதும் எனக்கு வெட்கம் தாளவில்லை… முகம் மலர.. முப்பத்திரண்டு பல்லும் தெரிந்தது. முகம் மறைக்க என்னிடம் சேலை தலைப்பும் இல்லை துப்பட்டாவும் இல்லை.. என்னால் முடிந்தது என் இடது கையால் என் முப்பத்திரண்டு பல்லையும் மறைப்பது மட்டுமே.
ஆதரவாக தோளில் கை வைத்தான்.. அவன் ஆள்காட்டி விரல் என் தோளின் nighty மூடாத பாகத்தில் எதேச்சையாக உரச, என் உடல் சிலிர்த்து விம்மியது. என் கண்களை பார்த்து சிரித்தான்..
‘ஏன் டா என்னை சிரித்து சிரித்து out ஆக்குகிறாய்’ என்று மனதில் தோன்றியது.
நான் comfortable ஆக இல்லை என்பதை புரிந்த அவன், “வா.. கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாம்..” என்று என் கைகளை கோர்த்து அமர வைத்தான்.
நான் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், கோர்த்துக்கொண்ட கைகளை விலக்காமலே கேட்டான், “நான் ஒன்னு கேட்டேனே?”…
“வலிச்சுது….” அவன் முகம் பார்க்க வெட்கம் அனுமதிக்கவில்லை என்றாலும், என் வலிக்கு அவன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்று பார்க்க ஆவலாய் ஓரக்கண்ணில் பார்க்க, ஒரு கணம் அவன் திகைத்து அதிர்ந்து போனதை உணர முடிந்தது. எனக்கு வலித்தததை பார்த்து அவன் feel செய்வது தெரிந்தது.
அவன் feel பண்ணுவதை பார்த்து, ‘சொல்லியிருக்க வேண்டாமோ ?’ என்று தோன்றியது.
ஒரு இரண்டு நொடி கடந்திருக்கும்… குரல் செருமினான்.. “ஒரு sorry.. ஒரு thanks..”
“எதுக்கு?”