மறுபடியும் மறுபடியும்! Part 3 57

“ஏன்டா இப்படி பண்ணின சொல்லூடா?”

“இல்லம்மா நாயினால தான்.”

“நாயி என்னடா பண்ணிச்சு உன்ன?”

“இல்லம்மா அங்க பாருங்க” சொல்லி ஒருதிசையை நோக்கி கை காட்ட அங்கு இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று இணைந்து இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. சில வினாடியில் அதுவும் அதன் வேலையை முடித்துவிட இரண்டும் தனி தனியே பிரிந்து சென்றன.. அதை பார்த்துவிட்டு தேன்மொழி

“கருமம் புடிச்சவனே நாய் பண்றத பாத்தா கூட உனக்கு வந்துடுமாடா.. இனி கண் முன்னால வந்த என்ன பண்ணுவேன் தெரியாது போய் தொலைடா தேவிடியா பயலே” முனுமுனுத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு நடந்து வந்தாள்…

தேன்மொழி நடந்து வரும் வழியில் தெவ்வாணைய பார்த்ததும் சற்று முன் நீங்கியிருந்த பயம் மீண்டும் அவளின் மனதில் வந்து தொற்றிக் கொண்டது. இருந்தாலும் அது மாதிரி எதுவும் நடக்காது என மனதை தேற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அந்த பாதையில் ஆள் அரவமற்று அமைதியாக இருப்பதால் என்ன பேசினாலும் நன்றாக கேட்கும்.. பாதையில் நடந்து வந்த தெவ்வணை வலதுபக்கம் இருந்த வரப்புக்குள் திரும்பி நடக்க தேன்மொழியும் அவளுக்கு தெரியாமல் பின்னால் நடந்து சென்று பார்க்க அங்கு அவள்

“ஏய் நா நம்ம இடத்துக்கு வந்துட்டேன்யா.. நீ வரியா என்ன? எனக்கு வீட்டுல வேல கெடக்கு” பேசிக் கொண்டிருக்க சில வினாடிகள் கழித்து

“சரி எப்பவும் போல அந்த மரத்தடில உனக்காக காத்திட்டு இருக்கேன்.. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயா” என்றாள்.. இதை கேட்டதும் தேன்மொழிக்கு ஒருவினாடிக்குள்ளாகவே வியர்த்துக் கொட்டியது.. அடுத்து அங்கு தெவ்வாணை

“ஆமாயா ரொம்ப அரிக்குது.. அதான்யா வேலய கூட போட்டுட்டு அப்படியே வந்திருக்கேன்.. சரி வந்திரு.. வச்சிறேன்” என்றாள்..

தேன்மொழிக்கு தன்னுக்குள் இருந்த ஒருவித பயத்தில் அடுத்து அங்கிருக்க பிடிக்காமல் நேராக வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக அடுப்படிக்கு சென்று ஒரு செம்பு தண்ணீரை குடித்துவிட்டு ரூமிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்..
அதன் பின் குட்டி தூக்கம் தூங்கி எழுந்த பின் உடலும் மனதும் ஒரு அளவிற்கு நிதானம் அடைந்திருந்தது. இருந்தாலும் அவளின் மனதிற்குள் அவள் கனவு கண்டது பார்த்தது எல்லாம் ஓடிக் கொண்டே இருந்தது. இதை பற்றி யாரிடம் சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.. அதற்குள் வீட்டில் சொந்தகார ஆட்கள் ஒவ்வொருத்தராக வர காலையில் பந்தி போடபட்டது. அது முடியும் வரை வீட்டில் ஆட்கள் இருந்துக் கொண்டே இருந்தார்கள்..

பந்தி முடிந்த பின்பு தான் ஆட்களின் நடமாட்டம் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. தேன்மொழி இது தான் சரியான தருணம் என தன் தோழி கயல்விழிக்கு போன் செய்தாள்..
மறுமுனையில் காலை எடுத்ததும்

“ஏய் கயல் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் டி வீட்டுக்கு வா டி..”

“என்ன ஆச்சு டி. எதாவது பிரச்சனையா?”

“பிரச்சனைலா இல்லடி? ஆனா முக்கியமான விசயத்தை பத்தி பேசனும்டி வா டி.”

“சரி இருடி வரேன்.” சொல்லிவிட்டு காலை கட் செய்தாள்..

அடுத்த சில நிமிடங்களில் கயல் தேன்மொழி வீட்டுக்கு வந்தாள்.. இருவரும் வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றடியில் உட்கார்ந்திருந்தனர்..

தேன்மொழி, “ஏய் கயல் எனக்கு கனவா வருதுடி”

“கனவா? அப்படி என்ன கனவுடி வருது.”

“ஆம்பளையும் பொம்பளையும் ஒன்னா இருக்குற மாதிரி வருது டி” சொன்னவுடன் கயல் சிரித்து விட்டாள்.. அவள் சிரிப்பலை பார்த்து கடுப்பான தேன்மொழி

“ஏய் இங்க சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்னடினா பல்ல காட்டி சிரிச்சிட்டு இருக்க”

“பின்ன என்ன டி உனக்கு கல்யாணம் ஆக போகுது. அதான் உன் புருசன் கூட இருக்குற மாதிரி கனவு கண்டு இருப்பா. இது என்ன டி இருக்கு..”

“ஏய் லூசு.. கனவு கண்டது அப்படியே நடக்குது டி”

“ஆமா டி நடக்கும் டி.. கல்யாணம் ஆன எல்லாமே நடக்கும் டி.”

“இந்த பாரு நா முதல்ல கனவு கண்டது தெவ்வாணையும் முனியாண்டி ரெண்டும் ஒன்னா சந்தோஷமா இருக்குற மாதிரி.. அது இன்னிக்கு காலையில நடந்திருச்சு” தேன்மொழி சொன்னதும்

கயல், “ஏய் தேனு என்னாடி சொல்ற?”

“உண்மைய தான் டி சொல்றேன்.. நானும் முதல்ல கனவு தான் நெனச்சேன்.. ஆனா அது அப்படியே நடந்துச்சு டி”

“என்ன நடந்துச்சா?”

“ம்ம்.. ஆமா நா குளிச்சிட்டு வரும் போது தான் அவ முனியாண்டிக்கு கால் பண்ணி வர சொல்லிட்டு இருந்தா?”