40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 1 48

“விழுந்த அதிர்ச்சில ராத்திரி முழுக்க மைல்டு கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டிங்க, அதுல வந்த டெம்போரரி லாஸ் தான். உங்களுக்கு புள் ஸ்கேன் எல்லாம் செஞ்சி பார்த்தாச்சு ஒரு ப்ரோப்லேம் இல்லை.”

வித்யா விசும்பினாள்.

“டோன்ட் ஒர்ர்ரி மேடம், இனி ஒண்ணுமே இல்லை இவரு கான்ஷியஸ் ஆகிட்டாரு இன்னொரு ஸ்கேன் பண்ணி பார்த்திட்டு ஒரு 24 ஹௌர்ஸ் அப்செர்வசன் மட்டும் வச்சிட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்”

நர்ஸ் இருவரும் போக சொல்லிவிட்டு அந்த டாக்டர் என் காதில் வந்து மெதுவாக “கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து கேட்டா நீங்க ட்ரிங்க் பண்ணி இருந்ததை சொல்லாதீங்க. ரிப்போர்ட்லயும் அது இருக்காது, டாக்டர் ஷர்மா கிட்ட நான் பேசிட்டேன் உங்களை நாளைக்கு காலையிலே வந்து பாக்குறதாக சொன்னாரு” சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பினார்.

அடுத்த 3 மணி நேரத்தில் இன்னொரு ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு ஒரு பிரச்சனையும் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வேற ஒரு சாதாரண ரூமிற்கு மாற்றப்பட்டேன்.

மாற்றப்பட்ட பத்தே நிமிடத்தில் ஒரு கான்ஸ்டபிள் மற்றும் ஒரு ஏட்டு என இரு போலீசார்கள் வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்கி விட்டு சென்றனர். நான் டாக்டர் சொன்னது போல நான் குடித்து இருந்ததைப் பற்றி வாயை திறக்கவில்லை. அவர்கள் சென்றுவிட நானும் எனது மனைவியும் மட்டும் தனியாக இருந்தோம்.

வித்யா என் கையை பிடித்துக் கொண்டு “நீங்க ஏன் பைக்ல எல்லாம் போறீங்க. உங்களுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா, என்னாலே நினைத்து கூட பார்க்க முடியலைங்க உங்களை விட்டால் எனக்கு என்ன வேற யாரு இருக்கா.” கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

“வித்யா என்னது இது சின்னபுள்ள மாதிரி அழுதுகிட்டு, இவ்வளவு கோயில் குளம் போயி சாமி கும்பிடற அந்த சாமி சும்மா விடுமா என்ன” நான் அப்படி சொன்னது சாமி கும்பிட போறேன் என்று சொல்லிவிட்டு ஒழு வாங்க சென்றது உறுத்தியிருக்க வேண்டும், அவளின் அழுகை இன்னும் அதிகமானது.

“அழாதே வித்யா, நான் எங்கேயும் போகல இங்க தானே இருக்கேன்” பெட்டில் படுத்துக்கொண்டு எவ்வளவு சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. அவ்வளவே ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு யோசித்து யோசித்து திடீரென அழுதாள்.

என் மேல் எவ்வளவு அன்பு இருந்திருந்தால் ஒன்றுமே இல்லாத இதற்கு அவள் இவ்வளவு வருத்த பட வேண்டும். அவளைப் பார்க்கையில் எனக்கு இப்போது உண்மையில் பாவமாக இருந்தது. இதற்கே இப்படி என்றால் எனக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக உறவு வைத்துக் கொண்டு அதை மறைப்பது அவளுக்கு இன்னும் எவ்வளவு மன உளைச்சலை கொடுத்து இருக்க வேண்டும். வீட்டிற்கு போனவுடன் சர்மா சொன்னது போல அவளிடம் மனதார பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நாள் முழுக்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை செக்கப் என்று சோம்பேறியாக கழிந்தது. அன்று இரவு வித்யா ரூமில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டாள். அடுத்த நாள் காலை 7 மணிக்கெல்லாம் டாக்டர் வந்து பரிசோதித்தார்.

“ஒரு பிரச்சனையும் இல்லை மிஸ்டர் பாலசுப்ரமணியன். இன்னைக்கு மதியத்துக்கு மேல டிஸ்சார்ஜ் பண்ணி விடுறேன். ஒரு வாரத்துக்கு ஆபீஸ் போகாதீங்க. மயக்கம் தலை சுத்துற மாதிரி இருந்தா மட்டும் உடனே ஹாஸ்பிடல் வந்துடுங்க.”

“சரி டாக்டர்.”

டாக்டர் சொல்லி விட்டு கிளம்ப ஒன்பது மணிவாக்கில் ஐஸ்வர்யா வந்தாள். பீச் கலரில் ஒரு குர்தா துப்பட்டா இல்லாமல் போட்டு இருந்தது அவளின் வளைவுகளை எடுப்பாக காட்டியது.