நண்பனின் காதலி – 8 58

அதை பார்த்து விக்கிக்கு எரிச்சல் தான் வந்தது சே பேசாம ஆள் இல்லாத தீவுக்கு ஓடி போயிடலாம் போல என்று நினைத்து கொண்டு உள்ளே போனான் .அங்கு சுற்றும் முற்றும் பார்த்தான் அங்கு டேவிட் இல்லை அப்பா ஒரு ஆறுதலான விசயம் ஆச்சும் இருக்கே என்று நினைத்து கொண்டு போயி வள்ளியை பார்த்தான் .என்ன எப்படி இருக்க என்றான் .ம்ம் ஓகே நீ ஏன் நேத்து சீக்கிரம் போயிட்ட என கேட்டாள் .
அது நேத்து ஆபிஸ்ல வொர்க் இருந்துச்சு அதான் என்றான் .பின் மணி வந்து அவனை தனியாக கூப்பிட்டான் மச்சி அந்த பிளைட் டிக்கெட் என்று அவன் சொல்ல ஒ சாரிடா நேத்து சரக்கு ஓவர் அதுனால மறந்துட்டேன் இப்பவே உன் கண் முன்னாடியே போன் பேசுறேன் பாரு என்று போனை எடுத்து டேய் முருகா நான் தான் விக்னேஷ் அண்ணே பேசுறேன் எனக்கு அன்னைக்கு மாதிரி ரெண்டு டிக்கட் ஏற்பாடு பண்ண முடியுமா என்றான் .என்னது ம்ம் சரி ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஆச்சும் பாரு ரொம்ப முக்கியம் டா என்றான்
மச்சான் பிளைட் ரொம்ப ரஸ் ஆம் எப்படியும் டிக்கெட் எடுக்க 4 நாள் ஆகும்ன்கிறான் அதுனால கோபிக்காதடா என்றான் .டேய் இதுக்கு எதுக்குடா கோபிக்க போறேன் சரி பரவல நிலைமை சரி ஆனதுக்கு அப்புறம் வரட்டும் என்று சொன்னான் .
அப்போது அங்கு வருண் வர அதை பார்த்த விக்கி ஐயோ இவன் ஸ்வாதிய நேத்து பாத்துட்டானே இவன் ஏதும் மணி மாதிரி உடனே ஒளர மாட்டான் இருந்தாலும் சில நேரம் உலருனாலும் உளறுவான் அதுனால இவன தனியா கூப்பிட்டு போயி சொல்வோம் என்று அவனிடிம் போனான் .அவன் குழந்தையை பார்த்து கொண்டு இருந்தான் டேய் தம்பி ஒரு நிமிஷம் இங்க வா என்றான் விக்கி .
இருங்க பாஸ் கொஞ்ச நேரம் குழந்தைய கொஞ்சிக்கிறேன் அப்படியே மூக்கு மட்டும் தனியா நம்ம மணி அண்ணே மாதிரி இருக்குல என்று சொல்லி அதை கொஞ்சி கொண்டு இருந்தான் .சரி இங்க வா மாடிக்கு ஒரு நிமிஷம் என்று அவனை கூப்பிட்டு போனான் .எங்கடா போறீங்க என்றான் அவர்களை பார்த்து மணி .அவன்டிம் மேலே போயி தம் அடிக்க போவதாக செய்கையால்அவனுக்கு காட்டி விட்டு விக்கி அவனை கூப்பிட்டு மாடிக்கு போனான் .

மாடிக்கு போன பின் இருவரும் ஆளுக்கு ஒரு சிகரட் எடுத்து அடிக்க ஆரம்பித்தனர் .டேய் நேத்து என் வீட்டுக்கு வந்தேளே அங்க ஒரு பொண்ண பாத்தியா என்றான் விக்கி .அட ஆமா பாஸ் மறந்தே போயிட்டேன் இப்ப தான் ஞாபகம் வருது யார் பாஸ் அவங்க உங்க வீட்ல என்ன பண்றாங்க அப்புறம் கர்ப்பமா வேற இருக்காங்க நான் கேட்டதுக்கு ரொம்ப கோபமா என்னைய திட்டுனங்க யாரு அவங்க என்றான் வருண் .
வருண் முதல என்னால இத்தன கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது ஏன்னா நானே அதுக்கு பதில் தேடி கிட்டு இருக்கேன் கிடைக்கல என்றான் .என்ன பாஸ் வர வர சாமியார் மாதிரி பேசுறிங்க என்றான் வருண் .வருண் நீ என் கிட்ட எல்லாம் வெளிப்படையா சொல்ற ஆனா என்னால அப்படி சொல்ல முடியல சோ சாரி என்றான் விக்கி .பரவல பாஸ் இருக்கட்டும் உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க என்றான் .
இப்ப எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றான் .என்ன பாஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்றான் வருண் .நீ அவள என் வீட்ல பாத்தாத யார் கிட்டயும் சொல்ல கூடாது .குறிப்பா மணி கிட்ட என்றான் .இத நீங்க சொல்லனுமா நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் என்றான் வருண் .
தேங்க்ஸ் என்றான் விக்கி .இருக்கட்டும் பாஸ் என்றான் .டேய் அப்புறம் இன்னொன்னுக்கும் தேங்க்ஸ் என்றான் விக்கி .எதுக்கு பாஸ் என்றான் வருண் .நேத்து வீட்ல கொண்டு போயி செப்பா விட்டது அப்புறம் எனக்கு வாந்திய கீளின் பண்ணி எனக்கு ட்ரெஸ் மாத்தி விட்டது இதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்றான் விக்கி .பாஸ் வீட்ல கொண்டு போயி விட்ட வரைக்கும் தான் நான் நீங்க வாந்தி எடுத்ததாலம் எனக்கு சம்பந்தம் இல்ல என்றான் .

1 Comment

  1. Enna dude last 3,4 page repeat aaguthu.

Comments are closed.