நண்பனின் காதலி – 8 58

அது நீ கொடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்ல இருக்கு மிசஸ் சுவாதி விக்னேஷ் எடுத்து பாருங்க மிசஸ் சுவாதி விக்னேஷ் என்றாள் அஞ்சலி .சுவாதி எடுத்து பார்த்தாள் ஆமா இந்தா இருக்கு சுவாதி விக்னேஷ் என்று புதிதாக ஏதோ ஒன்றை பார்ப்பது போல பார்த்தாள் .ஏன் இத்தன நாள் உன் ரிப்போர்ட்ல பாத்ததே இல்லையா இல்ல இன்னைக்கு தான் அவங்கே உன் பேர போடுறாங்களா என கேட்டாள் அஞ்சலி .
இல்ல நான் எப்பயும் குழந்தைய பத்துன ரிப்போர்ட்ஸ் மட்டும் தான் படிப்பேன் என் பேர பாக்க மாட்டேன் என்றாள் சுவாதி
ஓகே எப்படி இருக்கு உன் புது பேரு மிசஸ் சுவாதி என அஞ்சலி கேட்டாள் .ம்ம் சுவாதிங்கிற பேரே போதும் அதான் நான் பிறந்தப்ப வச்சது அந்த பேரோடே இருந்துக்கிறேன் என்றாள் கோபமாக .ஒ அப்படி எல்லாம் இருக்க முடியாது பொண்ணுகள பொறுத்த வரைக்கும் எப்பயுமே நம்ம பேர் கூட ஒரு பேர் வரும் .கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்பா பேர் கூட வரும் கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் பேர் கூட வரும் அதான் நியாயம் என்றாள் அஞ்சலி

எனக்கு ரெண்டுமே வேணாம் வெறும் ஸ்வாதியே போதும் என்றாள் சுவாதி .சரி அது இருக்கட்டும் உங்க அப்பா பேர் என்ன என்றாள் அஞ்சலி ,அக்கா நான் தான் அனாதைன்னு சொல்லிருக்கேன்லே அப்புறம் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க என்றாள் அஞ்சலி கோபமாக .ஒ சாரிப்பா தெரியாம கேட்டுட்டேன் என்னைய மன்னிச்சுடுப்பா என்றாள் அஞ்சலி .ஆஹா அஞ்சலி அக்காவ இத வச்சே இன்னைக்கு அவங்கள விக்கி பத்தின பேச்ச மறக்க வச்சுடுவோம்
அது எப்படி அக்கா நீங்க இப்படி கேக்க போச்சு எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சுவாதி வருத்ததோடு இருப்பது போல சொன்னாள் .ப்ளிஸ்டி ப்ளிஸ்டி என்னைய மன்னிச்சுடு ஓகே இனி மேல் இப்படி மறக்க மாட்டேன் அது மட்டும் இல்லாம உன்னைய அனாதைன்னு யார் சொன்னது அதான் அக்கா நான் இருக்கேளே என்று சொல்லி கொண்டே அவளை சமாதன படுத்தி விட்டு சரி பேச்ச நல்லாவே மாத்திட்ட நான் முத கேட்டதுக்கு இன்னும் பதிலே காணோம் என்று அஞ்சலி ஒரு போடு போடவும்
எப்படிக்கா இப்படி என்றாள் .ஏண்டி உன் கூட உன் ரூம் மெட்டா 3 வருசமா இருந்து இருக்கேன் உன்னைய பத்தி தெரியாதா எனக்கு என்றாள் அஞ்சலி .சுவாதி ஒன்னும் சொல்லமால் இருந்தாள் .சரி நான் விக்கி கிட்ட பேசவா என்று அஞ்சலி கேட்க ஐயோ விட மாட்டிங்கிரன்களே அக்கா என்று நினைத்து கொண்டு இருந்தாள் .சொல்லுடி குழந்தை வேற பிறக்க போகுது இன்னும் ரெண்டு பேரும் இப்படியே இருக்க போறிங்களா என அஞ்சலி கேட்டாள் .
ஆமா ரெண்டு பேர் கிட்டயும் லவ் இல்ல அப்புறம் குழந்தைக்காக மட்டும் சேர்ந்து வாழ சொல்றிங்களா என கேட்டாள் சுவாதி .ஆமா அதான நம்ம வழக்கம் கலாச்சாரம் என்றாள் அஞ்சலி .அப்ப ரெண்டு பேர் சேந்து வாழ்றதுக்கு காதல் தேவை இல்லை கலாச்சாரத்துக்காக பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பல்ல கடிச்சுகிட்டு வாழனும் இப்படி எல்லாம் இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே கட்டி கிட்டு அழுகுரதாலே தான் டைவர்ஸ், கள்ள காதல் சந்தேகம் ,பொண்டாட்டி புருஷன கொல்றது புருஷன் பொண்டாட்டிய கொல்றதுன்னு கண்ட கருமமும் இங்க நடக்குது அதுக்கு எங்கள மாதிரி பிரிஞ்சே இருக்காலம் என்றாள் சுவாதி .
சரிடி நீ சொல்றது எல்லாம் வாஸ்தவம் தான் ஆனா குழந்தை ? என்று அஞ்சலி கேட்க என்ன இப்ப குழந்தைக்கு குழந்தைய அழிச்சேனா இல்ல பிறந்ததும் அத குப்ப தொட்டில போட போறேனா நான் தானே வளக்க போறேன் அப்புறம் என்ன ஒரு வேல என்னைக்காச்சும் விக்கி வயசான பிறகு அவன் மனசு மாதிரி குழந்தைய பாக்க வந்தா பாக்க விடுவேன் அப்ப கூட நான் அவன் கிட்ட ஒரு பிரண்டா தான் பேசுவேன் லவ்வராவோ இல்ல வேற ஏதாவும் ஏத்துக்கிற மாட்டேன் .
விக்கிக்கும் சுவாதிக்கும் இடைல ஒன்னும் இல்ல அவளவு தான் இன்னும் ரெண்டு மாசத்துல கனடா போ போறேன் எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கை வாழ போறேன் என்றாள் சுவாதி .சோ அந்த மிசஸ் விக்னேஷ் பார்ட் என்ன ஆச்சு என்று அஞ்சலி கேட்டாள் .அது அவளவு தான் நடக்காத ஒன்னு என்றாள்
ஒரு வேல என்று அஞ்சலி ஆரம்பிக்கும் முன் சுவாதி அவளை நிப்பாட்டி ஒரு வேல மிஸ்டர் விக்னேஷ் அவர்கள் என்னை காதலிக்கிறதா சொன்ன என்ன பண்ணுவ அப்படிதானே கேக்க போறீங்க இப்ப சொல்றேன் மிஸ்டர் விக்னேஷ் சார் வந்து என்னைய பிடிச்சு இருக்குன்னு சொன்னாலும் ஒரு குழந்தைய அழிக்க சொன்னவன் நீ அது உன் குழந்தையான்னு இப்ப வரைக்கும் சந்தேக படுருவேன் நீ அப்படி பட்ட உன் கூட என்னால வாழ்க்கை நடத்த முடியாதுன்னு நேருக்கு நேரா சொல்லிடுவேன் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அவளுக்கு போன் வந்தது .
யாரு உன் ஆளா என்றாள் அஞ்சலி .இல்ல புது நம்பரா இருக்கு

1 Comment

  1. Enna dude last 3,4 page repeat aaguthu.

Comments are closed.